news

News December 14, 2024

₹800 கோடிக்கு வீடு வாங்கும் மஸ்க்

image

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சுமார் ₹800 கோடியில் பிரம்மாண்ட பீச் ஹவுஸ் ஒன்றை மஸ்க் வாங்க திட்டமிட்டுள்ளராம். 19 ஆயிரம் சதுர அடியில், 25 அடுக்குகளை கொண்ட இந்த ஹவுசில் ஜிம்மில் தொடங்கி நீச்சல் குளங்கள், ஸ்பாக்கள் போன்றவை உள்ளன. அமெரிக்கா அதிபராகும் டிரம்ப்பின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் மஸ்க், அவரின் வீட்டருகே குடிபோகும் நோக்கில் இதனை வாங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

News December 14, 2024

ட்ரோன் கப்பலை கட்டிய ஈரான்

image

ஈரான் புதிதாக ட்ரோன்களை சுமந்து செல்லும் கப்பலை கட்டமைத்திருப்பது செயற்கைக்கோள் படம் மூலம் தெரிய வந்துள்ளது. மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் அந்நாட்டிற்கும் போர் பதற்றம் நிலவுகிறது. இச்சூழலில், ட்ரோன்களை சுமந்து செல்லும் கப்பலை கட்டுவித்திருப்பது புகைப்படம் மூலம் உறுதியாகியுள்ளது. விமானந்தாங்கி கப்பல் போல இக்கப்பல் ட்ரோன்களை கடலில் சுமந்து செல்லும் வல்லமை கொண்டது எனக் கூறப்படுகிறது.

News December 14, 2024

புடவையில் அசத்தும் மாளவிகா மோகனன்

image

ரஜினியின் பேட்டை, விஜய்யின் மாஸ்டர், விக்ரமின் தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். தற்போது அவர் சேலை கட்டி, தாமரை குளத்தின் பின்னணியில் எடுத்த புகைப்படங்களை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள், அவரின் அழகை பாராட்டி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். நீங்கள் அந்த படங்களை காண வேண்டுமா? மேலே கிளிக் செய்து பாருங்கள்.

News December 14, 2024

தமிழகத்தில் கனமழைக்கு 7 பேர் பலி

image

தமிழகத்தில் கனமழைக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கனமழையால் வீட்டு சுவர் இடிந்து ஒருவர் பலியானார். பண்ருட்டியில் ஒருவரும், வடலூர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவரும் பலியாகினர். ரெட்டிச்சாவடி மேல்அழிஞ்சிப்பட்டையில் செல்போனுக்கு சார்ஜ் போட்ட மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நாகை, வேதாரண்யம், அரியலூரிலும் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.

News December 14, 2024

2,500 குழந்தைகளுக்கு வீடு தேடி இன்சுலின்

image

தமிழகத்தில் டைப் 1 நீரிழிவால் பாதிக்கப்பட்ட 2,500 குழந்தைகளுக்கு இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டு வருவதாக மினிஸ்டர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 49.46 லட்சம் சர்க்கரை நோயாளிகள், 44.46 லட்சம் BP நோயாளிகள் பயன்பெறுவதாகக் கூறினார். உலகளவில் நீரிழிவு நோயாளிகளை பாதுகாப்பதில் தமிழகம் முன்மாதிரியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

News December 14, 2024

இந்தியாவுக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது சுவிஸ்

image

இரட்டை வரிவிதிப்பு விதியின்கீழ் இந்தியாவுக்கு அளித்த மிகவும் விரும்பத்தக்க நாடு அந்தஸ்தை சுவிட்சர்லாந்து ரத்து செய்துள்ளது. சுவிட்சர்லாந்து நிதித்துறையின் அறிவிப்பில், நெஸ்லே விவகாரத்தில் 2023இல் இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவால் இருதரப்பு வர்த்தகம், முதலீடு பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

News December 14, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 14, 2024

சனி தொல்லையில் இருந்து பாதுகாக்கும் அனுமன் வழிபாடு

image

சனிக்கிழமையில் அனுமனை வழிபட்டால், சனி பகவானின் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கை உள்ளது. காலையில் குளித்து அருகில் உள்ள அனுமன் அல்லது அனுமன் சன்னதி இருக்கும் கோயிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அனுமன் சாலிசாவை 11 முறை கூறி, அனுமனின் சன்னதியை சுற்றி வரவும். மல்லிகைப்பூ எண்ணெய் படைப்பது உகந்ததாகும். அனுமனுக்கு பிடித்த ராம நாமத்தை மனதில் நிலைநிறுத்த வேண்டும்

News December 14, 2024

ஒரே வருடத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு 4வது பிரதமர்

image

பிரான்ஸ் நாடு அரசியல் நெருக்கடிகளில் சிக்கி தவிக்கிறது. கூட்டணி கட்சிகளின் சிக்கல், ஓய்வூதியம் திட்டத்திற்கு மக்களிடம் உருவான எதிர்ப்பு, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு போன்றவற்றால், 2024ல் 3 பிரதமர்கள் பதவி இழந்து விட்டார்கள். தற்போது பிரதமராக பிரான்சுவா பெய்ரூவை ஜனாதிபதி இம்மானுவேல் மைக்ரோன் தேர்ந்தெடுத்துள்ளார். பிரான்ஸில், ஜனாதிபதியே பிரதமரை தேர்ந்தெடுப்பார்.

News December 14, 2024

BREAKING: ரிலீஸ் ஆனார் அல்லு அர்ஜுன்

image

இரவு சஞ்சலகுடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அல்லு அர்ஜுன் காலையில் பின் வாசல் வழியாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். புஷ்பா 2 படம் பார்க்க திரையரங்கிற்கு வந்த பெண் உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு நேற்று பெயில் கிடைத்த நிலையிலும் ஆவணங்கள் சிறைக்கு வர தாமதமானதால் இரவு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!