India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமர் மோடி வரும் 22ஆம் தேதி 2 நாள் பயணமாக சவுதி அரேபியா செல்ல உள்ளார். சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று, அவர் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேஷன் கடைகளில் இனி அனைத்து அட்டைதாரர்களுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளே வழங்கப்பட வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் காகித ஆலையில் இருந்து ரசீதுக்கான காகிதங்கள் அனுப்பப்படும், அதன்பிறகு மே மாதத்தில் இருந்து அனைவருக்கும் ரசீதுகள் வழங்க வேண்டுமென கூறியுள்ளது. தற்போது கைகளாலேயே எழுதி ரசீது அளிக்கப்படுகிறது. அதற்கு மாற்றாக அச்சிட்ட ரசீது வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
திருமணத்தை மீறிய உறவு கிரிமினல் குற்றமில்லை என்று டெல்லி ஹைகோர்ட் (DL HC) தெரிவித்துள்ளது. மனைவி திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி, கணவர் தொடுத்த மேல்முறையீட்டு மனு மீது HC தீர்ப்பளித்தது. அப்போது, ஏற்கெனவே இதேபோன்ற இன்னொரு வழக்கில் உச்சநீதிமன்றம் திருமணத்தை மீறிய உறவு தனிநபர் ஒழுக்கம் சார்ந்த பிரச்னை, கிரிமினல் குற்றமில்லை என கூறியிருப்பதை சுட்டிக்காட்டி மனுவை தள்ளுபடி செய்தது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 2 திராவிட கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் என்று மாலினி பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். இபிஎஸ்சை அவர் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 2026 தேர்தலில் வெற்றி உறுதி என்று இபிஎஸ் நம்புகிறார், சட்டப்பேரவைத் தேர்தலில் காத்திருக்கும் போட்டிக்காக நன்கு தயார் நிலையில் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ம.பி.யில் 8 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் 10ம் வகுப்பு மாணவன் பாலியல் வன்கொடுமை (ரேப்) செய்துள்ளான். வீட்டில் தனியாக சிறுமி இருந்தபோது, திடீரெனப் புகுந்து அந்த மாணவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்போர் ஓடி வந்து, அவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தில் அவனை போலீஸ் கைது செய்தது.
21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர், தி.மலை, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, தேனி, நெல்லை, தென்காசி, குமரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
SRH அணி வீரர் டிராவிஸ் ஹெட், 575 பந்துகளில் 1,000 ரன்கள் விளாசி IPL வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். குறைந்த பந்துகளில் ஆயிரம் ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில், ஆன்ட்ரூ ரஸல் முதலிடத்தில் உள்ளார். அவர் 545 பந்துகளில் 1,000 ரன்கள் விளாசியுள்ளார். அவருக்கு அடுத்து, 2ஆவது இடத்தை டிராவிஸ் ஹெட் பிடித்துள்ளார். கிளாசன் 594, வீரேந்திர சேவாக் 604 பந்துகளில் 1,000 ரன்கள் குவித்துள்ளனர்.
மஹாராஷ்டிர பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம் என்ற அம்மாநில அரசின் உத்தரவு, பிரிந்து போன 2 உறவினர்கள் ஒன்று சேரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மக்களின் நலன்களுக்காக, தங்களுக்குள் இருக்கும் சிறிய சச்சரவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, உத்தவ் தாக்கரேவுடன் இணைந்து செயல்பட தயார் என MNS தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதற்கு தாங்களும் ஒன்றுபடத் தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரேவும் பதிலளித்துள்ளார்.
அகமதாபாத்தில் நடந்து வரும் போட்டியின் போது, GT பவுலர் இஷாந்த் ஷர்மா கடும் வெயிலால் நிலைகுலைந்தார். உடனே அவரை பவுண்டரி லைனுக்கு வெளியே அழைத்து சென்று நீராகாரங்கள், நீரில் நனைத்த டவலை குஜராத் பிசியோ ஸ்டாஃப் வழங்கினார். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்ததும், 19ஆவது ஓவரை வீச அவர் களத்திற்கு வந்தார். மைதானத்தில் வெயில் 40 டிகிரியை கடந்ததால் DC, GT வீரர்கள் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் என்று மாநில அரசு அறிவித்திருப்பதற்கு சிவசேனா (UBT) கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, இந்தி மீது தனது கட்சிக்கு எந்த வெறுப்பும் இல்லையென்றும், அது கட்டாயமாக்கப்படுவதை மட்டுமே எதிர்க்கிறோம் என்றும் கூறினார். தமிழக அரசும் இதே கருத்தைதான் முன் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.