India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குளிர்காலத்தில் வெதுவெதுப்பான நீர் பருகுவது உடலுக்கு நல்லது. அதே நேரத்தில் சூடாக நீரை பருகினால், அது ஆரோக்கியத்தில் பாதிப்புகளை உண்டாக்கும் என்கிறார்கள். அதிக சூடாக நீரை பருகுவது உடலில் நீரிழப்பை உண்டாக்கும். வயிற்றின் வெப்பநிலை அதிகரிப்பதால், செரிமான பிரச்னை உண்டாகும். தொண்டையில் புண் உருவாகலாம். சிறுநீரகம் குளிர்நீரை மட்டுமே வடிகட்டும் என்பதால், சுடுநீரால் சிறுநீரக பிரச்னை உண்டாகலாம்.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் 16ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். ரசிகை உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் மீது பி.என்.எஸ் சட்டத்தின் 105,118(1) மற்றும் 3(5) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர்.
சென்னை ஆயிரம் விளக்கு திமுக கவுன்சிலர் பிரேமா சுரேஷ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் மழை நீர் வடிகால்கள் குறித்து அரசுக்கு எதிரான கருத்துகளை பேசியதாக தெரிகிறது.
நடப்பு ஆண்டில் தமிழகம் அதிக மழையை கண்டதால் 84% அணைகள் நிரம்பியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மொத்தமுள்ள 14 ஆயிரம் பாசன கண்மாய்களில் 3 ஆயிரக் கண்மாய்கள் நிரம்பிவிட்டன., 2 ஆயிரம் கண்மாய்கள் 75% நிரம்பியிருக்கின்றன. இதனால், அடுத்தாண்டு கோடையில் நீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று தெரிகிறது. இன்னும் வடகிழக்கு பருவமழை ஓயாததால் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கை ரேகை ஒருவரின் எதிர்காலத்தை பற்றி கூறும் என்பார்கள். இந்த ‘H’ ரேகை என்பது 3 ரேகைகளின் இணைப்பில் இருக்கும். இந்த ரேகை கொண்டவர்கள் வாழ்க்கையில் தங்களது 40 வயதிற்கு மேல் தங்களின் உச்சத்தை பெற்று, மிக பெரிய பொருளாதார எழுச்சியை பெறுவர்களாம். வாழ்வில் நேர்மறை எண்ணங்களை கொண்டிருக்கும் இவர்கள் அதிக உணர்ச்சிவசப்படக் கூடியவராகவும், தாராள மனப்பான்மை கொண்டவராகவும் இருப்பர். உங்களுக்கு இருக்கா H ரேகை?
பிரபல நடிகர் மோகன் பாபு தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தனது மகனுடனான மோதலின்போது செய்தி சேகரித்த செய்தியாளரை தாக்கிய அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிஸ்சார்ஜ் ஆன பின் வாக்குமூலம் வாங்க வீட்டிற்கு சென்ற போலீசார், அவர் அங்கு இல்லாதது கண்டு திகைத்தனர். பின்னர், 5 தனிப்படைகள் அமைத்து தலைமறைவானவரை தேடி வருகின்றனர்.
நடப்பாண்டில் தங்கத்தின் விலை 30% அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச உயர்வாகும். இது தொடர்பான அறிக்கையில், பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தின் இருப்பை அதிகரித்ததும், முதலீட்டாளர்கள் தங்கத்தை அதிகம் வாங்கியதுமே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பரில் ₹5,900ஆக இருந்த ஒரு கிராம் தங்கம் தற்போது ₹7,300 வரை உயர்ந்துள்ளது.
ஆஸி., அணிக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் கோலி இன்று அரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது ஆஸி.,க்கு எதிராக டி20, டெஸ்ட், ODI என அனைத்து வித கிரிக்கெட்டிலும் மொத்தம் 100 போட்டிகளில் ஆடியுள்ளார். இதுவரை 49 ஒருநாள், 23 டி20 மற்றும் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,326 ரன்களுடன் உள்ளார். இதில் 17 சதங்களும், 27 அரை சதங்களும் அடங்கும். முதலிடத்தில் சச்சின் 110 போட்டிகளில் 6,707 ரன்கள் எடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கான, ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமிழகம் முழுவதும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.