India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற NTKவினர் கைது செய்யப்பட்டனர். அண்ணா யுனிவர்சிட்டி மாணவி வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வள்ளுவர் கோட்டத்தில், சீமான் தலைமையில் நடக்கவிருந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனாலும், ஒன்று கூடுவோம் என சீமான் அழைப்பு விடுத்திருந்த நிலையில், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், தமிழக அரசுக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். பல்கலைக்கழகத்தில் நடத்திய விசாரணை குறித்து பேசிய அவர், “ஏற்கெனவே பாலியல் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை எப்படி சுதந்திரமாக நடமாட அனுமதித்தார்கள். பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை மேற்கொண்டோம். இது தொடர்பாக ஆய்வு அறிக்கையை சமர்ப்பிப்போம்” என தெரிவித்தார்.
தெறி ஹிந்தி ரீமேக்கான ‘பேபி ஜான்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு சமந்தா தான் காரணம் என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் அவர், “ ‘பேபி ஜான்’ படத்திற்கு என்னை பரிந்துரைத்தது சமந்தா தான். அதை வருண் தான் என்னிடம் கூறினார். ‘தெறி’யில் சமந்தா நடித்த அதே கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறேன் என்று தெரிந்ததும் உண்மையில் பயமாக இருந்தது’ என்றார்.
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.
ஹிமாச்சல் மாநில மணாலியில் பனிப்பொழிவு சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, அங்கு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அங்குள்ள லோக்கல் மக்கள் ‘யாரும் மணாலிக்கு வராதீங்க’ என்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஆனாலும், சுற்றுலாப் பயணிகள் அவர்களை விடுவதாக இல்லை..
2025ஆம் ஆண்டில் உலகளவில் மொத்தம் 4 கிரகணங்கள் தெரியவுள்ளன. ஆனால், இதில் ஒரேயொரு கிரகணம் மட்டுமே இந்தியாவிலிருந்து பார்க்க முடியும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அதாவது, செப். 7-8ஆம் தேதிகளில் (8:58 PM – 2:25 AM) நிகழும் முழு சந்திர கிரகணத்தை மட்டுமே இந்தியாவில் தென்படும். உலகளவில், மார்ச் 14இல் சந்திர கிரகணம், மார்ச் 29இல் & செப்.21-22ஆம் தேதிகளில் சூரிய கிரகணம் நிகழவுள்ளன.
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2020இல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்ட பின்னர், காமராஜ் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
வேதம், பாளையத்தம்மன் உட்பட சில தமிழ் படங்களில் நடித்தவர் மலையாள நடிகை திவ்யா உன்னி. திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் வசித்து வரும் அவர், அங்கு நடனப்பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தலைமையில் கொச்சியில் 11,600 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இருந்து பலர் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் பணக்கார CM ஆக AP CM சந்திரபாபு நாயுடு ₹931 கோடியுடன் முதலிடத்தில் உள்ளார். ₹332 கோடியுடன் அருணாச்சல் CM 2ஆவதாகவும், ₹8 கோடியுடன் TN CM ஸ்டாலின் 14வது இடத்திலும் உள்ளனர். ஏழை CM பட்டியலில் ₹15 லட்சத்துடன் மம்தா பானர்ஜி முதலிடத்தில் உள்ளார். 2023-24 நிதியாண்டில் தனிநபர் நிகர தேசிய வருமானம் தோராயமாக ₹1,85,854 ஆக உள்ள நிலையில், ஒரு CMஇன் சராசரி சுய வருமானம் ₹13,64,310 ஆக உள்ளது.
2025ஆம் ஆண்டிற்கான UPSC தேசிய பாதுகாப்பு & கடற்படை அகாடமி தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய முப்படையில் காலியாக உள்ள 406 பணியிடங்களை நிரப்ப இத்தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு. வயது வரம்பு: 15-18. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு & உடற்தகுதி. கூடுதல் தகவல்களுக்கு https://upsconline.gov.in/ சென்று பார்க்கவும்.
Sorry, no posts matched your criteria.