India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான EVKS இளங்கோவன் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 75. கடந்த சில வாரங்களாகவே உடல் நலக்குறைவு அவர் மியாட் மருத்துவமனையில் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்தார்.
கேரளாவில் வெள்ளத்தின்போது மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளுக்காக ₹132.61 கோடி செலுத்துமாறு மத்திய அரசு கேரள அரசுக்கு பில் போட்டுள்ளது. அதனை உடனடியாக செலுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது. 2019 வெள்ளம் மற்றும் வயநாடு நிலச்சரிவின்போது இந்திய விமானப்படை பல்வேறு விதமான மீட்புப் பணிகளை மேற்கொண்டது. இந்த சேவைகளுக்காக கேரள அரசு ₹132.61 கோடி செலுத்த வேண்டுமாம்.
சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ. 720 குறைந்து ஒரு சவரன் ரூ.57,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல் ஒரு கிராம் ரூ.90 குறைந்து ரூ.7,140க்கு விற்கப்படுகிறது. மேலும் வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒருகிராம் ரூ.100க்கும், ஒருகிலோ ரூ.1,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா நாளை மறுநாள் மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் அறிமுகம் செய்யவுள்ளார். இத்திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மக்களவையில் களேபரம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய வழக்கில், ED பதில்மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் கீழ் பணிபுரிந்த அன்பு, தற்போது எதிர் சாட்சியாக இருப்பதாகவும், அவருக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் ED பதில் அளித்துள்ளது. அதிகாரமிக்கவராக திகழும் அவரின் ஜாமின், விசாரணையை பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 97 வயதாகும் அவர் கடந்த 4 மாதங்களில் ஐந்தாவது முறையாக ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாகவே அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மாதம்தோறும் மகளிருக்கு உரிமைத் தொகையாக தமிழக அரசு ₹1000 வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கிகளில் செலுத்தப்படும் இத்தொகை, நாளை வரவு வைக்கப்படவுள்ளது. மழையால் தமிழகத்தில் பல குடும்பங்கள் பாதிப்படைந்திருக்கும் சூழலில் இந்தத் தொகை அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ChatGPT என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு வித்திட்ட OpenAI நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் அமெரிக்காவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான சுச்சிர் பாலாஜி (26), ChatGPT காப்புரிமை விதிகளை மீறுவதான குற்றம்சாட்டினால் ஆகஸ்ட் மாதம் ராஜினாமா செய்தார். இதனையடுத்து, தற்போது அவர் மர்ம முறையில் மரணம் அடைந்திருக்கிறார்.
இந்தியா-ஆஸி., 3வது போட்டி தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆஸி., அணி 5.3 ஒவர்களில் 19 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. மழை நின்று ஆட்டம் தொடங்கிய நிலையில், 28 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்ததால் முதல் session முடிந்து உணவு இடைவேளை விடப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
காங்கிரஸ் MLA ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவர் தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இன்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Sorry, no posts matched your criteria.