India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ EVKS இளங்கோவன் மரணமடைந்ததால் அத்தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வரவுள்ளது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அத்தொகுதிக்கு திருமகன் ஈவேரா MLAவாக தேர்வானார். 2023ஆம் ஆண்டு அவர் உயிரிழந்ததையடுத்து அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு EVKS எம்.எல்.ஏ ஆனார். மீண்டும் அதே தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஆதாரில் நமது விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு மீண்டும் நீட்டித்திருக்கிறது. இன்றுடன் காலக்கெடு முடிவடைய இருந்த சூழலில், 14 ஜூன் 2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் வயது, முகவரி மாற்றங்களை ஆதாரில் புதுப்பிக்க வேண்டும். இந்த மாற்றங்களை ஆதார் சேவா கேந்திரா அல்லது UIDAI இணையதளம் மூலம் இலவசமாக செய்து கொள்ளலாம்.
மனதில் பட்டத்தை தயங்காமல் பேசக்கூடியவர் EVKS இளங்கோவன். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரை கடுமையாக எதிர்த்தவர். இதற்காக பல்வேறு அவதூறு வழக்குகளையும் எதிர்கொண்டார். அதேநேரம், கலைஞரிடம் நல்ல நட்பு கொண்டிருந்தார். காங்கிரஸை திமுக பக்கம் வைத்திருப்பதில் இவருக்கும் பங்கிருந்தது. அண்மையில், ஆட்சியில் பங்கு வேண்டும் என கோரிக்கை எழுந்தபோதும், அது நடைமுறைக்கு சாத்தியமல்ல என்று விமர்சித்தார்.
சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்த ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு நாளை இறுதி சடங்குகள் நடத்தப்படவுள்ளன. நுரையீரல் தொற்று காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று காலை உயிரிழந்தார். நாளை அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ராமாபுரம் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
காங்கிரஸ் MLA ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிபிஎம் பொது செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழிசை சௌந்தரராஜன், அன்புமணி ராமதாஸ், தங்கபாலு ஆகியோரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த EVKS இளங்கோவனின் (75) உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாகவே சரியில்லை. குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி MLA-வாக இருந்த அவரது மகன் திருமகன் ஈவெரா, இளம் வயதில் கடந்த ஆண்டு உயிரிழந்தது அவரை கடுமையாக பாதித்தது. இதனால் அவதியுற்று வந்த நிலையில் காய்ச்சல் பாதிப்புக்காக நவ.11 ஆம் தேதி ஹாஸ்ப்பிடலில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் பாதிப்பு தீவிரமான நிலையில் அவர் உயிரிழந்தார்
காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு இன்றைய தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இளங்கோவனின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த ஈவிகேஸ் இளங்கோவன் 2014ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்றார். அதற்கு முன் தலைவராக இருந்த ஞானதேசிகன் ராஜினாமா செய்ததையடுத்து சோனியா காந்தி EVKS இளங்கோவனை தலைவர் ஆக்கினார். 2009ஆம் ஆண்டு ஈரோடு எம்.பி தொகுதியிலும் 2019ஆம் ஆண்டு தேனி எம்.பி தொகுதியிலும் ஈவிகேஎஸ் தோல்வியடைந்திருக்கிறார்.
மறைந்த EVKS இளங்கோவன், அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் மகன் EVK சம்பத் அவர்களின் மகன் தான் இளங்கோவன். இவரின் தாயார் EVK சுலோசனா சம்பத், அதிமுகவில் அமைப்பு செயலாளராக இருந்தார். EVKS இளங்கோவன் மத்திய இணை அமைச்சராகவும் (2004 – 2009), தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
உயிரிழந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் 2023 முதல் ஈரோடு கிழக்குத் தொகுதி MLAவாக இருக்கிறார். முன்னதாக அத்தொகுதியின் MLAவாக இருந்த இவரது மகன் ’திருமகன் ஈவேரா’ உயிரிழந்ததைத் தொடர்ந்து ஈவிகேஎஸ் இடைத் தேர்தல் மூலம் வெற்றி பெற்றார். முன்னதாக கோபிசெட்டிப்பாளையம் MPயாகவும் மன்மோகன் ஆட்சியின்போது ஜவுளித்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.