India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள், ஐஏஸ், ஐபிஎஸ் ஆபீசர்ஸ், இப்படி படித்த, அரசு வேலையில் இருக்கும் இளைஞர்களை கடத்தி, மணமுடிக்கும் வழக்கம் பீகாரில் அதிகரித்து வருகிறது. இங்கு உயர்சாதியினர் மத்தியில் பெண்ணுக்கு திருமணம் செய்ய மிக அதிக வரதட்சணை கொடுக்க வேண்டியுள்ளது. வசதியில்லாத பெண் வீட்டார், இந்த கடத்தல் வழியை பின்பற்றி திருமணத்தை நடத்திவிடுகின்றனர். எதிர்த்து கேட்டால் வரதட்சணை புகார் வருமாம்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், அச்சம் அறியா, கொள்கையில் உறுதி கொண்ட தலைவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். தந்தை பெரியாரின் கொள்கையில் உறுதியாக இருந்ததாகவும், தமிழகத்திற்கான அவரது அர்ப்பணிப்பு என்றென்றும் உத்வேமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். அதேபோல, நேர்மையான, தைரியமான தலைவர் என மல்லிகார்ஜுன கார்கே புகழாரம் சூட்டியுள்ளார்.
சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக MoRTH தெரிவித்துள்ளது. அதன் தரவுகளின்படி, 2018-22 காலக்கட்டத்தில் நாட்டில் மொத்தம் 21.73 லட்சம் விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 2.99 லட்சம் விபத்துகள் நடத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ம.பி. 2.50 லட்சம், உ.பி. 1.98 லட்சம், கர்நாடகா 1.90 லட்சம், கேரளா 1.86 லட்சம் விபத்துகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
EVKS இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலில், விஜய் தலைமையிலான தவெக களம் இறங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கட்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி மாநாடு நடத்தியிருக்கும் விஜய், தேர்தல் அரசியலில் எப்படி செயல்பட போகிறார் என்று தமிழ்நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் NZ வீரர் டிம் சவுதிக்கு ENG வீரர்கள் GUARD OF HONOUR மரியாதை அளித்தனர். இந்த போட்டியுடன் அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற உள்ளார். 106 போட்டிகளில் 389 விக்கெட்களும், 2,220 ரன்களும் எடுத்துள்ளார். இன்று நடைபெற்று வரும் போட்டியிலும் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி என 23 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
திராவிட இயக்க குடும்ப பின்னணி இருந்தாலும், EVKS இளங்கோவன் காங்கிரஸிலேயே தன் அரசியலை தொடங்கினார். நடிகர் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகரான இவர், அவரது சிபாரிசில் காங்கிரஸில் சீட் பெற்று 1984-ல் சத்தியமங்கலம் தொகுதி MLA ஆனார். சிவாஜி காங்கிரஸில் இருந்து வெளியேறியபோது, அவருடன் சென்ற MLAக்களில் இளங்கோவனும் ஒருவர். அதன்பின், சிவாஜி தொடங்கிய தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியிலும் இணைந்தார் இளங்கோவன்.
ஈரோடு கிழக்குத் தொகுதி MLA ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். “தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. EVKS இளங்கோவன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.” என்று அவர் X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் தென்காசி மாவட்டம் கடனா அணையில் அதிகபட்சமாக 26 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 23 செ.மீ., நாலுமுக்கு 22 செ.மீ., தூத்துக்குடி விமான நிலையம் 21 செ.மீ., நெல்லை மாவட்டம் காக்காச்சியில் 19 செ.மீ., கோடியக்கரை, நீடாமங்கலம், செங்கோட்டை, ஒரத்தநாடு, விருதுநகர் ஆகிய பகுதிகளில் தலா 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
பாடகி இசைவாணி குறித்து அவதூறு பரப்பிய புகாரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னைப் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பப்படுவதாக சென்னை வடக்கு கடற்கரை காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்திருந்தார். வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ‘I am sorry Iyyappa..’ என்ற அவரது பாடல் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-ஆஸி., அணிகள் மோதும் 3வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. ஆஸி., அணி பேட்டிங் செய்ய தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து மழை பெய்ததால் உணவு இடைவேளை, மற்றும் தேநீர் இடைவேளை விடப்பட்டது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி., அணி 10.3 ஓவர்களில் 28 ரன்கள் எடுத்துள்ளது. 2ஆம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி நாளை காலை 5.20 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.