India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென் மண்டல வானிலை மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் பிப்ரவரி 28ஆம் தேதி உடன் ஓய்வுபெறுகிறார். 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி பதவியேற்ற அவர் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திய கஜா புயல், ஃபனி புயல், நிவர் புயல், புரேவி புயல், மாண்டஸ் புயல், மிக்ஜாம் புயல், ஃபெஞ்சல் புயல் ஆகியவற்றின் தாக்கம் குறித்தும், மழையின் பாதிப்பு குறித்தும் கணித்தவர்.
மோசடி உள்ளிட்டவற்றை தடுக்க வங்கிக் கணக்கு தொடர்பாக ரிசர்வ் வங்கி புதுப்புது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, நாளை (ஜன.1) முதல் 3 வகை வங்கிக் கணக்குகள் செயல்படாது எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது, 2 ஆண்டுகள் (அ) கூடுதலான நாள்கள் பரிவர்த்தனை இல்லாத வங்கிக் கணக்குகள், 12 மாதத்திற்கு மேல் பயன்படுத்தப்படாத கணக்குகள், குறிப்பிட்ட காலத்திற்கும் மேல் கணக்கில் பணமில்லாத வங்கிக் கணக்குகள் செயல்படாது.
சென்னை வாழ் மக்களுக்கு புத்தாண்டு பரிசாக சுமார் 35% தொழில்வரி உயர்த்தப்பட்டுள்ளதாக இபிஎஸ் கடுமையாக சாடியுள்ளார். 44 மாத கால திமுக ஆட்சியில் சொத்து வரி உட்பட பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்ட நிலையில், இந்த தொழில்வரி உயர்வினால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வணிகர்கள் என்று 75% மக்கள் பாதிக்கப்படவுள்ளனர். எனவே, இந்த வரி உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் வெளிநாட்டு கடன் நிலவரம் குறித்த செப்டம்பர் மாத புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில், இந்தியாவுக்கு ரூ.60.94 லட்சம் கோடி கடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.3% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜூன் மாதத்துடன் செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும்போது, ரூ.2.5 லட்சம் கோடி அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்யலாம்? கமெண்ட் பண்ணுங்க.
மத்திய அரசின் தேசிய வருவாய்வழி, திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்தின்கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இதற்காக 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, நமது மாநிலத்தில் இருந்து 6,695 பேர் உள்பட 1 லட்சம் பேர் தேர்வு செய்யப்படுவர். இந்தத் தேர்வுக்கு தலைமை ஆசிரியர் மூலம் ஜன.24க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலையில் இருந்து சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
கேரளாவை மினி பாகிஸ்தான் என்று கூறிய மகாராஷ்டிரா அமைச்சர் நிதிஷ் ரானேவுக்கு, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தின் மீது எடுத்துக்கொண்ட உறுதி மொழியை அமைச்சர் மீறியுள்ளதாகவும், சங்பரிவாரால் திட்டமிடப்பட்டு பரப்பப்படும் வெறுப்பு பரப்புரைகளை கேரள மக்கள் நிச்சயம் முறியடிப்பார்கள் என்றும் கூறினார். நிதிஷ் உடனடியாக பதவி விலகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2017இல் ஏமனில் கொலை செய்த கேரள நர்ஸ் நிமிஷாவின் மரண தண்டனையை அந்நாட்டு அதிபர் உறுதி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் Blood Money (₹17 லட்சம்) ஏற்க மறுத்துவிட்டனர். இதனால், மகளை மீட்கப் போராடி வரும் ஏழைத் தாய் பிரேமா குமாரி, கேரள அரசு, வெளியுறவு அமைச்சகம் என நடையாய் நடந்து போராடி வருகிறார். நிமிஷாவை மீட்கக் கேரளாவில் Crowd Fund மூலம் ஏராளமான மக்கள் உதவி செய்திருந்தனர்.
டாஸ்மாக் மது விற்பனையில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதில், QR CODE முறையில் விற்பனை செய்வதும் ஒன்று. முதல்கட்டமாக ராணிப்பேட்டை, திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் இது அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் நாளை முதல் விரிவுபடுத்தப்பட இருப்பதாகவும், மது வாங்குவோருக்கு பில் அளிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
2024ஆம் ஆண்டு வெளியான முக்கிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. அதேநேரம், சின்ன நடிகர்களின் படங்கள் வசூலை குவித்தன. இந்த சூழ்நிலையில் ரஜினியின் ‘கூலி’, கமலின் ‘தக் லைஃப், விஜய்யின் கடைசி படமான ‘Thalapathy69, அஜித்தின் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’, சூர்யாவின் ‘Retro’ ஆகிய படங்கள் அடுத்தாண்டு வெளியாகிறது. இதில் எந்த படத்திற்கு நீங்க வெயிட்டிங் என்று கமெண்ட் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.