India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2002ம் ஆண்டு. அதிமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது. ஜெயலலிதா – சோனியா காந்தி இடையே பனிப்போர் நிலவிய காலக்கட்டம். அந்த சமயத்தில், டெல்லிக்கு சென்ற ஜெயலலிதா, அன்டோனியா அல்பினா பிரதமராக துடிப்பதாக பேசினார். அதுதான் சோனியாவின் இயற்பெயர். இந்நிலையில், அதற்கு மறுநாளே, கோமளவள்ளி (எ) அம்மு என ஜெயலலிதாவின் இயற்பெயரை கூறி ஈவிகேஎஸ் விமர்சித்தார். அதன் பிறகு, சோனியாவை விமர்சிப்பதையே ஜெ., நிறுத்திவிட்டார்.
பெண்களின் நலன் என்பது உடற்பயிற்சியும் சத்தான உணவும் மட்டுமல்ல. சரியான நேரத்தில் எடுக்கப்படும் உணவும் சேர்த்துதான். வேலை, குழந்தை பராமரிப்பு, இல்லக் கடமைகள் என்று இருப்பதால், பெண்களால் சரியான நேரங்களில் உணவு எடுக்க முடிவதில்லை. தாமதமாக உண்பதும் உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சரியான அளவில், சத்தான உணவு பெண்கள் உடல்நலம் காக்க அவசியமாகும்.
கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் குற்றாலத்தில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதில், எதிர்பாராதவிதமாக சிக்கிய 3 வயது யானைக்குட்டி, வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு உயிரிழந்தது. தென்காசி காட்டுப்பகுதியில் இறந்து கிடக்கும் யானைக்குட்டிக்கு பிரேத பரிசோதனை செய்ய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். யானைக்குட்டியின் உடல் உப்பியிருப்பதால் 2 நாள்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இந்தியா-ஆஸி., அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில், மழை குறுக்கிட்ட போது டீம் இந்தியா டக்அவுட்டில் ஒரு சுவாரசியமான காட்சி நடந்தது. விராட் கோலியும், கேஎல் ராகுலும் மதிய உணவு இடைவேளையின் போது இருவரும் ஒரே டிபன் பாக்ஸில் இருந்து உணவை பகிர்ந்து கொண்டனர். இந்த போட்டோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்ட்டாகி உள்ளது.
அதுல் சுபாஷின் மனைவி நிகிதாவின் குடும்பத்தினருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நிகிதா, அவரது தாய் நிஷா, சகோதரர் அனுராக், மாமா சுஷில் ஆகியோர் 3 நாள்களுக்குள் மாரத்தஹள்ளி காவல் நிலையத்திற்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சுபாஷின் சகோதரர் பிகாஸ் அளித்த புகாரில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன்பு மனைவி கொடுமை செய்ததாக சுபாஷ் லைவில் தற்கொலை செய்து கொண்டார்.
தான் தலைமறைவாகி விட்டதாக வெளியான செய்தியை மோகன் பாபு முற்றிலுமாக மறுத்துள்ளார். ‘என்னைப் பற்றி தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. நீதிமன்றம் முன்ஜாமின் மறுக்கவில்லை. தற்போது வீட்டில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளேன். உண்மைகளை வெளிக்காட்டுமாறு மீடியாக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என்று Xல் பதிவிட்டுள்ளார். செய்தியாளரை மோகன் பாபு தாக்கிய விவகாரத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மணப்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர், குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
காங்., மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், தந்தை பெரியார், ஈ.வி.கே.சம்பத் என மிகப்பெரும் அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எனக் குறிப்பிட்டுள்ளார். எப்போதும் தனது மனதில் பட்டதை பேசிவிடக் கூடிய பண்புக்கு சொந்தக்காரர் எனவும் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை அவர், உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது உடல்நிலை Stableஆக இருப்பதாக கூறினர். இருப்பினும், அவர் அனுமதிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரியப்படுத்தவில்லை.
அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவாகியிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறவுள்ளது. இதன் தாக்கத்தால் வரும் 16 முதல் 18ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று MET தெரிவித்துள்ளது. இன்று, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.