India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமித்ஷாவின் கண்காணிப்பில் உள்ள தலைநகர் டெல்லி கற்பழிப்பு, போதைப்பொருள் போன்ற குற்றங்களின் தலைநகராக மாறியுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுபற்றி அமித்ஷாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், 19 மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. நிலைமை மிக மோசமாக உள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
திமுக செயற்குழுக் கூட்டம் வரும் 18ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், இந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கனமழை எச்சரிக்கை காரணமாகவும், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறுவதாலும், திமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக ரசிகர்களை கவர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி, கட்டா குஸ்தியில் மலையாள சேச்சியாகவே வந்து ரசிகர்களை தன்வசப்படுத்தினார். மல்யுத்த வீராங்கனையாக இடைவேளையில் கொடுத்த மாஸ் நடிப்பு “யார்ரா இந்த பொண்ணு” என பேச வைத்தது. தற்போது சூரியின் அடுத்த படத்திலும் கமிட்டாகி இருக்கிறாராம். இன்ஸ்டாவிலும் கலக்கும் இவர், கோல்டன் நிற புடவையில் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.
நமது நாட்டின் எதிர்காலத்தை நினைத்து வேதனையடைவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதத்தின் போது பேசிய அவர், அரசியல் ஜனநாயகத்தை வென்ற நாம், சமூக ஜனநாயகத்தை வெல்வது எப்போது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நாட்டை விட மத நம்பிக்கை மேலானதா? அல்லது மத நம்பிக்கையை விட நாடு மேலானதா? என்ற கேள்விக்கு யார் பதில் கூறப்போகிறார்கள் எனவும் வினவியுள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷை கூகுள் CEO சுந்தர் பிச்சை பாராட்டியிருந்த நிலையில், தற்போது எலான் மஸ்க்கும் பாராட்டியுள்ளார். தனது வெற்றி குறித்து குகேஷ் போட்ட X-பதிவில், வாழ்த்துகள் என மஸ்க் கமெண்ட் செய்துள்ளார். தனது 18ஆவது வயதில், உலகின் 18ஆவது சாம்பியன் பட்டத்தை குகேஷ் வென்றுள்ளார். இவரது வெற்றியால், 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு உலக சாம்பியன் பட்டம் கிடைத்துள்ளது.
டெல்லி பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 12 வயது பள்ளி மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவனுக்கு கவுன்சிலிங் வழங்கி, அவரின் பெற்றோருக்கு போலீசார் எச்சரிக்கை கொடுத்துள்ளனர். சில நாட்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இதுவும் ஒன்று. முன்னர் வந்த வெடிகுண்டு எச்சரிக்கைகளில் யாரும் பிடிபடாததால், இவ்வாறு செய்ததாக மாணவர் தெரிவித்தார்.
கனமழை காரணமாக தென்காசி, நெல்லை, உள்ளிட்ட தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலை, நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை பெய்து வருவதால் இன்றும், நாளையும் பக்தர்கள் கோயிலுக்கு வர வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கனமழையை தாங்காமல் பாலங்களும் அடித்துச் செல்லப்படுகின்றன. காரைக்கால் திருநள்ளாறு அரசலாறு கரையோரத்தில் விரிசல் ஏற்பட்டதால் மக்களை மீட்கும் பணி நடைபெற்றது. இதனை பார்வையிட சென்ற புதுச்சேரி அமைச்சர் திருமுருகன், சிறு இணைப்பு பாலம் ஒன்றை கடந்து சென்றுள்ளார். அவர் சென்ற அடுத்த நிமிடம் அந்த பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டது. அமைச்சர் கொஞ்சம் தாமதித்து இருந்தாலும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கக் கூடும்.
மத்திய சேமிப்புக் கழகத்தில் (CWC) இருக்கும் 179 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், கண்காணிப்பாளர், இளைய தொழில்நுட்ப உதவியாளர் என பல இடங்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். விவசாயத்தில் பட்டப்படிப்பு முடித்த விருப்பமுள்ளவர்கள் cewacor.nic.in. தளத்தில் விண்ணப்பிக்கலாம். 12 ஜனவரி, 2025 வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹40,000 இருந்து வழங்கப்படுகிறது. SHARE IT
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்ததாகக் கூறியுள்ளார். அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது ஆன்மா இறைவனடி சேர பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.