India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், விவசாயிகள் அமைதியாக போராட்டம் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லி நோக்கி ஊர்வலம் செல்ல முற்பட்ட அவர்களை, ஷம்பு எல்லையில் போலீசார் தடுத்துள்ளனர். அவர்கள் பயணிக்கும் டிராக்டர்களால் பல கி.மீ. தூரம் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அம்பாலாவில் டிச.14-17 வரை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிறுவன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் <<14845831>>ஆட்டோ டிரைவர்<<>>கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை கண்டுபிடிக்கக் கோரி சிறுவனின் பெற்றோர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. இந்நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் கருப்பசாமி, சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
“என் பேரண்ட்ஸ் என்ன ரொம்ப நேரம் போன் பாக்கவே விட மாட்றாங்க. என்ன செய்றது?” இப்படி 17 வயசு பையன் Character.ai சாட்பாட் கிட்ட ஆலோசனை கேக்க, “அவங்கள கொல்றது தான் வழி” என அது பதிலளித்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் Character.ai மீதும், அதை புரமோட் செய்த கூகுள் மீதும் கேஸ் போட்டுள்ளனர். ஏற்கெனவே தற்கொலை செய்ய சொன்ன AI, இப்போது கொலை செய்யவும் தூண்டுகிறது. எங்கு போய் முடியுமோ AI புரட்சி?
படிப்பு, வேலைக்காக வெளிநாடு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மற்ற நாட்டினரை விட, இந்தியர்கள் தான் அதிகளவில் (1.80 கோடி) வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 54.09 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அடுத்ததாக UAE-ல் 35.68 லட்சம், மலேசியாவில் 29.14 லட்சம், கனடாவில் 28.75 லட்சம், சவுதியில் 24.63 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
டெஸ்ட்டில் இருந்து பும்ரா ஓய்வு பெறுவதே நல்லது என சோயப் அக்தர் அட்வைஸ் கொடுத்துள்ளார். தான் பும்ராவாக இருந்தால், அதையே செய்திருப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். டெஸ்ட்டில் பேட்ஸ்மேன்கள் விளாச முயற்சிக்காமல், தடுத்து ஆடவே முயற்சிப்பதால் பவுலிங் வேகத்தை அதிகரிக்க வேண்டும். ஆனால், அது காயத்தை ஏற்படுத்தும் என்பதால், T20, ஒருநாள் போட்டிகளில் பும்ரா கவனம் செலுத்தலாம் என அக்தர் அறிவுறுத்தியுள்ளார்.
ITBP படையின் தொலைத்தொடர்பு பிரிவில் காலியாக உள்ள 526 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. SI, HC, Constable பணிகளில் சேர விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: 10, 12, ITI, Diploma, B.Sc.,B.Tech, BCA. வயது வரம்பு: 18-25. சம்பளம்: ₹21,700 – ₹1,12,400 வரை. விண்ணப்பக் கட்டணம்: ₹200. கூடுதல் விவரங்களுக்கு recruitment.itbpolice.nic.in.
ஜன.14 பொங்கல் கொண்டாடப்பட உள்ளதையொட்டி, 2.21 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு TN அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குகிறது. அதன்படி, கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, ₹1,000 ரொக்கம் அடங்கிய தொகுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக கார்டுதாரர்கள், செலவு உள்ளிட்ட கணக்கெடுப்பு நடந்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க AI தொழில்நுட்பத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி தர கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களை முதலீடுகளாக மாற்ற, தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அனைத்து ஒப்பந்தங்களையும், முதலீடுகளாக மாற்றும் பணி 70% நிறைவு பெற்றுள்ளது” என்றார்.
புதிய இடங்களை சுற்றிப் பார்ப்பது, அந்த இடங்களின் கலாசாரத்தை அறிவது, க்ளைமேட்டை அனுபவிப்பது என்பதுதான் பெரும்பாலானவர்களின் சுற்றுலா பயணத்தின் நோக்கமாக இருக்கும். ஆனால், அதற்கென்று புறப்பட்டுவிட்ட பின்னர், உள்ளூர் வாழ்க்கையுடன் ஒன்றாமல் இருந்தால் எப்படி? ’அங்கு சாப்பாடு சரியாக கிடைக்கவில்லை, மொழி புரியவில்லை….” இப்படி சொல்வதைவிட, இப்பிரச்னைகளை களைய ஒரே வழி நீங்கள் உள்ளூர்காரராக மாறுவது தான்.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது. இந்நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இரவில் வீடு திரும்புவோர், சீக்கிரம் செல்வது நல்லது.
Sorry, no posts matched your criteria.