India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2025 நியூ இயர் வெல்கம் பிளானை வெளியிட்டுள்ளது ஜியோ. இதில் ரூ.2025-க்கு ரீசார்ஜ் செய்தால் 200 நாள்களுக்கு அன்லிமிடட் வாய்ஸ் காலும், நாள் ஒன்றுக்கு 2.5 ஜிபி 5ஜி நெட்டும் அளிக்கிறது ஜியோ. அதுபோக ரூ.2,150-க்கு AJIO, Swiggy, EaseMyTrip-ல் இந்த கூப்பன்களும் கிடைக்கின்றன. இந்த ஆபர் ஜனவரி 11-ம் தேதி வரை மட்டுமே கிடைக்குமாம். முந்தைய ரூ.349 ரீசார்ஜை ஒப்பிட, இந்த பிளானில் ரூ.468-ஐ சேமிக்கலாம்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK25’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை B&C மில்லில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இதில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்திற்கு GV பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பேசிய பிரதமர் மோடி, நமது பாதையில் அரசியலமைப்பு குறுக்கிட்டால், அதை மாற்ற வேண்டும் என சொன்னவர் நேரு எனவும், காங்கிரஸ் குடும்பம்தான் அரசியலமைப்பை வெகுவாக சிதைத்ததாகவும் குற்றஞ்சாட்டினார். இதற்கு காங். MPக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அரசியலமைப்பு குறித்து அவையில் சுமூகமாக விவாதம் நடைபெற்றால், இளைய தலைமுறையினர் பயனடைவர் என பிரதமர் அறிவுறுத்தினார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் டிச.31க்குள் 90% பேருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என அமைச்சர் காந்தி உறுதியளித்துள்ளார். ஜன.10க்குள் எஞ்சிய நபர்களுக்கும் வழங்கப்படும் என்று கூறிய அவர், திமுக ஆட்சியை போல் எந்த ஆட்சியிலும் விலையில்லா வேட்டி, சேலைகள் தரமாக வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், 1.77 கோடி வேட்டி, 1.77 கோடி சேலைகள் வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அவசர நிலை ராணுவ சட்டத்தை அமல்படுத்திய தென் கொரியா அதிபர் யூன் சுக் இயோல் மீது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மொத்தமுள்ள 300 MP-க்களில் 204 பேர் யூனுக்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து, இயோல் நீக்கப்பட்டு இடைக்கால அதிபராக அந்நாட்டின் பிரதமர் ஹன் டக் சூ செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், தான் தொடர்ந்து போராடப் போவதாக இயோல் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து சிலரால் கட்டமைக்கப் படுவதாக, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், மியான்மர், வங்கதேசம், பாக்., ஆப்கன் நாடுகளில் சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறையோ, ஏதேனும் பிரச்னையோ எழுந்தால், அவர்கள் பாதுகாப்பு கோரும் நாடு இந்தியாதான். ஜனநாயகத்தில் இந்தியாவுடன் யாராலும் போட்டியிட முடியாது என்றார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு, TN அரசு மாதம் தலா ₹1,000 வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் இத்தொகை, நாளை வரவு வைக்கப்பட உள்ளது. மழையால் தமிழகத்தில் பல குடும்பங்கள் பாதிப்படைந்திருக்கும் சூழலில் இந்தத் தொகை அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது பாடல் காட்சியில் பார்த்த பனி போர்த்தியிருக்கும் காஷ்மீரை இப்போது நேரில் போனால் பார்க்கலாம். காஷ்மீரில் வெப்பநிலை -9 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது. பனிப்பொழிவில் Wonder Land ஆகக் காட்சியளிக்கும் காஷ்மீரின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. உங்களுக்கு காஷ்மீரை காண ஆவலா?
அரசியலமைப்பில் முதலில் பெண்களுக்கு அதிகாரம் வழங்கியது இந்தியாதான் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். மக்களவையில் அரசியலமைப்பு மீதான விவாதத்தில் பேசிய பிரதமர், அனைத்து முக்கிய திட்டங்களும் பெண்களை மையப்படுத்தியே கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மகளிருக்கு அதிகாரம் அளிக்காவிட்டால் நாடு முன்னேறாது என்றும், ஜனநாயகத்தின் தாய் இந்தியா எனவும் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத மழையை கடப்பது பெரும் சவாலாகவே இருக்கிறது. அந்தவகையில், டிச.15 (நாளை) மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகையில் கனமழையும், டிச.16 ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் கனமழையும், டிச.17 கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகையில் மிக கனமழையும், டிச.18 விழுப்புரம், கடலூரில் மிக கனமழை பெய்யலாம் என MET கணித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.