India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி, கேரளாவின் கண்ணூரில் ஃபென்சிங் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, கேரள வாள்வீச்சு சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் சீனியர் தேசிய வாள்வீச்சு தொடரில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். தேசிய அளவில் அவர் வென்ற 12வது பதக்கம் இது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற ஒரே இந்திய ஃபென்சர் பவானி தேவி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பரவும் ‘Scrub Typhus’ நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. Orientia tsutsugamushi என்ற ஒட்டுண்ணியால் ஏற்படும் இந்த நோய், உடலின் பல்வேறு பகுதிகளில் கருப்பு நிறக் காயங்களை ஏற்படுத்தும். விவசாயிகள், புதர் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்டோரை இந்த நோய் பாதிக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தனது காதல் விஷயம் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும் என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், விஜய், சமந்தா, அட்லீ, ப்ரியா, கல்யாணி, ஐஸ்வர்யா லஷ்மி என வெகு சிலருக்கு மட்டுமே தெரியும் என்றார். தான் 12ஆம் வகுப்பு படிக்கும்போதே ஆண்டனியை காதலிக்க தொடங்கியதாகவும், தங்கள் தனிப்பட்ட விஷயங்களை முடிந்தவரை தனிப்பட்ட முறையில் வைத்திருக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன் என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுத்த நீதிபதி, வெறும் விளம்பரத்திற்காக போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகச் சாடினார். சமூகத்தில் பெண் என்ற பாகுபாடு இருப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் எனவும், இப்படியொரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்க பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கேப்டன் ரோஹித் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடைசி 10 இன்னிங்சில் நியூசிலாந்து, BGT தொடரில் ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். கேப்டனாகவும் தொடர் விமர்சனங்கள் எழும் சூழலில், கடைசி BGT மேட்சில் அவர் கழட்டி விடப்படுகிறார் என்ற தகவல்கள் வெளிவருகின்றன. அவருடைய இடத்தில் சுப்மன் கில் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது. ரோஹித் இல்லாதது என்ன இம்பாக்ட்டை அணியில் உண்டாக்கும்?
கட்சி நிகழ்ச்சிகளுக்கு தன்னை அழைக்கவில்லை என்ற பிரச்னை கடந்த ஆண்டோடு முடிந்துவிட்டதாக பாஜக நிர்வாகி குஷ்பு தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய அவர், கட்சித் தலைமையின் அழைப்பின் பேரில்தான் அங்கு வந்திருப்பதாகக் கூறினார். இதன் மூலம் அண்ணாமலைக்கும் குஷ்புவுக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.
கருப்பு மற்றும் நீல நிறக் கார்களை விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஜடோ டைனமிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், 2024இல் விற்பனையான கார்களில் வெள்ளை நிற கார்களே அதிகம் விற்பனையானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைக் கார்களின் விற்பனை 2023இல் 39%ஆக இருந்த நிலையில் 2024இல் 39.3%ஆக அதிகரித்துள்ளது. குறைந்த மெயின்டெனன்ஸ் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள் டென்னிஸ் பந்து அளவுக்கு இருக்கும் வெளிநாட்டு கொய்யாவைச் சாப்பிட வேண்டாமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதில் நார்ச்சத்து குறைவாக இருக்கும். அதனால், அதில இருக்கிற சர்க்கரை வெகு சீக்கிரமாக ரத்தத்துடன் கலந்துவிடும். அதற்கு மாறாக, நாட்டு கொய்யா, நாட்டு பப்பாளி, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, தர்பூசணி, நாட்டு நாவல் பழம், பேரிக்காய், நாட்டு மாதுளை சாப்பிடும்படி பரித்துரைக்கின்றனர்.
2000ஆவது ஆண்டு முதல் தங்கத்தின் விலை சராசரியாக ஆண்டுக்கு 12.2% உயர்வு கண்டிருக்கிறது. சராசரியாக வைப்பு நிதி 6%, ரியல் எஸ்டேட் 8% என்று மட்டுமே உயர்வு பெறும் நிலையில் மற்ற முதலீடுகளை விட தங்கம் சிறந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், பயன்பாட்டுக்காக தங்கம் வாங்குவோர், விலை உயர்வால் கடும் அவதியடைந்துள்ளனர். 2024ஆம் ஆண்டு மட்டும் தங்கம் விலை 23% உயர்ந்தது.
நம் ஊரில் பொருளை வாங்க சாக்குப்பையை தூக்கிட்டு போவாங்க. ஆனால் மாடர்ன் ஜெனரேஷன் அதை விரும்புவதில்லை. ஆயிரக்கணக்கில் காசு கொடுத்து புதுசு புதுசாக வாங்குகிறார்கள். ஆனால், அமெரிக்காவில் பெண் ஒருவர் பாஸ்மதி அரிசி பையினால் ஆனா பையை மாட்டிக்கொண்டு பர்சேசிங்கிற்கு வந்து இணையத்தை அலறச் செய்துள்ளார். இதனைக் கண்ட நெட்டிசன்கள், எவனோ நம்ப பையன் தான் என கமெண்ட் செய்கிறார்கள். ஆனா, இதுவும் நல்லா தான இருக்கு!
Sorry, no posts matched your criteria.