India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீங்கள் தினசரி எவ்வளவு நேரம் வேலை செய்கிறீர்கள்? பொழுதுபோக்கு, வீடு பராமரிப்புக்கு, குடும்பத்தினர், நண்பர்களுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? இந்த நேரத்தை, நீங்கள் உங்கள் கணவன் (அ) மனைவியுடன் செலவிடும் நேரத்துடன் ஒப்பிடுங்கள். சமநிலையில் உள்ளதா? இல்லையெனில், இருவரும் உங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை யோசியுங்கள். உங்கள் பணி வாழ்க்கையைவிட, மண வாழ்க்கை முக்கியமானது. சரி தானே?
உலக செஸ் சாம்பியன் தமிழர் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஆந்திரா DY CM பவன் கல்யாண், அவரை தெலுங்கு சிறுவன் எனக் கூறியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. ஏற்கனவே செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் உள்ளிட்ட பல பட்டங்களை பெற்றவர் குகேஷ். அப்போதெல்லாம் அவரை யாரும் தெலுங்கர் எனக் கூறவில்லை. ஆனால், அவர் உலக சாம்பியன் ஆனதும் அவரை தெலுங்கர் என சொந்தம் கொண்டாடுவது நியாயமா என கேட்கின்றனர் நெட்டிசன்கள்.
குஜராத்தின் சூரத் நகரில் உள்ள உறவினரின் வைரக் கம்பெனியில் வேலை செய்துவந்தார் மாயூர் தரப்பரா. அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை பிடிக்கவில்லை. ஆனால், உறவினரிடம் சொல்ல பயம். இந்நிலையில், விரல் இருந்தா தானே வேலை செய்ய சொல்வீங்கன்னு தன் இடதுகையில் 4 விரல்களை துண்டித்துக் கொண்டார். ஒரு விபத்துக்குபின் விரல்கள் காணாமல் போனதாக இவர் போலீஸில் சொல்ல, CCTV உண்மையை போட்டுடைத்துவிட்டது.
அரசியலமைப்பின் 75 ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் மக்களவையில் விவாதம் நடந்து வருகிறது. அதில் பேசிய பிரதமர் மோடி, ஜனநாயகத்தை நேசிக்கும் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இது ஒரு பெருமையான தருணம் என குறிப்பிட்டார். மேலும், இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாக்க 370 சட்டப்பிரிவை நீக்கியதாகவும், ஆனால் இதில் கூட சிலர் விஷ கருத்துக்களை விதைத்து பிரிவினையை உருவாக்க முயற்சித்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
நடப்பாண்டில் தங்கத்தின் விலை 30% அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், இந்திய ரூபாயின் மதிப்பில், தங்கம் விலை ₹7,300ஐ எட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச உயர்வாகும். இதற்கு புவிசார் அரசியல், பங்குச்சந்தை ஏற்ற இறக்கம், அதிகரித்த முதலீடு, அமெரிக்காவின் கொள்கை முடிவு போன்றவையே காரணமெனக் கூறியுள்ளது. 2024 அக். நிலவரப்படி, RBI 77 டன் தங்கம் வாங்கியுள்ளது.
ஒரு தம்பதிக்கு ட்வின்ஸ் அல்லது 3,4 குழந்தைகள் கூட ஒரே பிரசவத்தில் பிறந்ததை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பாகிஸ்தானில் ஒரு குடும்பமே ஒரே தேதியில் பிறந்த ஆச்சரியம் நடந்துள்ளது. அமீர் அலி – கதிஜா தம்பதி மற்றும் அவர்களது 7 குழந்தைகளும் ஆண்டுதோறும் ஒரேநாளில் (ஆக.1ஆம் தேதி) பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். இத்தகைய தனித்துவம் வாய்ந்த அரிதான குடும்பம், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
கார்த்திகை திருநாளையொட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்கின்றனர். கூட்டம் அலைமோதுவதால் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களும், பஸ்களும் விடப்பட்டுள்ளன. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பிண்டல், இருமுடியுடன் 18 படி ஏறி வந்து ஐயப்பனை தரிசித்தார். அப்போது, அவருக்கு ஐயப்பன் விக்கிரகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.
இபிஎஸ்ஸை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக் கோரி ஐகோர்ட் கிளையில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இபிஎஸ் தலைமையேற்ற பின் தொடர் தோல்வியால், மக்கள் மத்தியில் அதிமுக நம்பிக்கை இழந்து வருவதாகவும், திருத்தப்பட்ட விதிகள் தொண்டர்களின் விருப்பத்திற்கு எதிராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியை காண சென்ற சாரா டெண்டுல்கர், கப்பா மைதானத்தில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஜாஹிர் கான் உள்ளிட்ட பலருடன் எடுத்த புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றன. மழை குறுக்கிட்டதால் முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில், 2ஆம் நாள் ஆட்டம் நாளை அதிகாலை 5.20 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்தியா- சீனா இடையேயான எல்லைப் பிரச்னையால் 2020-க்கு பிறகு இந்திய திரைப்படம் எதுவும் சீனாவில் வெளியாகவில்லை. பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியான முதல் படம் மகாராஜா. சீனாவில் அதிகம் வசூலித்த டாப் 10 இந்திய படங்களின் பட்டியலில் மகாராஜா இடம்பெறும் என கணிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து 12th ஃபெயில், லாப்படா லேடீஸ் ஆகிய பாலிவுட் படங்கள் சீனாவில் வெளியாக தயாராகி வருகின்றன.
Sorry, no posts matched your criteria.