India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி, கேரள சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டது. இதனால் எவ்வளவு நஷ்டம் தெரியுமா? நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த கேரள அரசின் வணிக பார்ட்னரான ரிப்போர்ட்டர் பிராட்காஸ்டர் நிறுவனம், அர்ஜென்டீனா கால்பந்து கூட்டமைப்புக்கு (AFA) ₹130 கோடி கொடுத்துள்ளதாம். அப்படியும், எங்களால் இந்த ஆண்டு வரமுடியாது, வேண்டுமானால் அடுத்த ஆண்டு பாக்கலாம் என AFA கூறியுள்ளதாம். So sad!
நண்பர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியதாக PM மோடி தன் X பதிவில் தெரிவித்துள்ளார். உக்ரைன் விவகாரம் பற்றி தகவல்களை பகிர்ந்ததற்காக, புடினுக்கு நன்றி சொன்ன மோடி, இந்தியா- ரஷ்யாவின் சிறப்புவாய்ந்த உறவையும், நெருக்கத்தையும் மேலும் வளர்க்க உறுதி பூண்டதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் மோதல் வலுக்கும் சூழலில், நம்பகமான கூட்டாளியான ரஷ்யாவுடன் இந்தியா நெருங்குவதையே மோடி-புடின் பேச்சு உணர்த்துகிறது.
CBSE உள்ளிட்ட எந்த போர்டாக இருந்தாலும் தமிழை இனி கட்டாயமாக படிக்க வேண்டுமென அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் 11-ம் வகுப்பை மாணவர்கள் பயன்படுத்த வேண்டுமெனவும் கூறினார். கல்வியாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டு மாநில கல்வி கொள்கை தயாரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
PM மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் MP கனிமொழி. இது தொடர்பாக தனது X பதிவில், பிரதமரை இன்று நேரில் சந்தித்து தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு மாற்று முனையம் அமைக்க உதவ வேண்டும் என தான் கோரிக்கை வைத்ததாகவும், மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்த அளித்த ஆதரவுக்கும் தான் நன்றி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
*அபிமன்யு ஈஸ்வரன் நன்றாக விளையாடுகிறார். அவரது உழைப்புக்கான பலன் நிச்சயமாக கிடைக்கும் என கம்பீர் கூறியுள்ளதாக தகவல்.
* டெஸ்டில் அதிக ரன்கள் அடித்த சச்சினின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பதோடு 18,000 ரன்கள் குவிப்பார் என முன்னாள் இங்கி., வீரர் மண்டி பனேசர் கணிப்பு.
*ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி அசத்தியுள்ளார் டெவான் கான்வே.
*WI vs PAK முதல் ODI நாளை துவங்குகிறது.
பிரபல நடிகர் பிரபாகர் கல்யாணி, வீட்டில் மயங்கி விழுந்து காலமானார். இவர் 2 நாள்களுக்கு முன் தான் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘காந்தாரா’ படத்தின் மூலம் பெரும் பிரபலமடைந்த பிரபாகர், மேடை நாடகங்களிலும் மக்களை பெருமளவில் கவர்ந்தார். முன்னதாக, காந்தாரா 1’ படத்தில் நடித்து வந்த 3 நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருந்தது.
டிரம்ப்பை எப்படி டீல் செய்வதென்று PM மோடிக்கு சில ஆலோசனைகளை வழங்கப் போவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். மோடியும் டிரம்ப்பும் தனக்கு நெருங்கிய நண்பர்கள் என்பதால், இதை செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். விரைவில் இந்தியா வரவுள்ளதாக தெரிவித்த அவர், இந்திய- அமெரிக்க உறவு மிகவும் உறுதியானது என்றும், வரிவிதிப்பு விவகாரத்துக்கு இருநாடுகளும் தீர்வு காண வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
விநாயகர் சதுர்த்தி (ஆகஸ்ட் 27) கொண்டாட்டம் தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, *பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்பட்ட சிலைகளை பயன்படுத்த வேண்டும். *சிலைகளை அலங்கரிக்க பிளாஸ்டிக், தெர்மோகோல் உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்த தடை. *ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பூஜை பொருள்களை பயன்படுத்த அனுமதி இல்லை. *அனுமதியில்லாத இடங்களில் சிலைகளை கரைக்க கூடாது. SHARE IT.
பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த அமித்ஷா, அரசியலமைப்பு புத்தகத்தை சுமந்து செல்லும் ராகுல் அதனை திறந்து படிக்க வேண்டுமெனவும், அதில் இந்தியாவில் பிறக்காதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவில்லை என்றும் கூறினார். பீகார் மக்களின் வேலைகளைப் பறிக்கும் வங்கதேசத்தினரைக் காப்பாற்ற ராகுல் விரும்புவதாகவும் விமர்சித்தார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம், சிம்புவின் சம்பளப் பிரச்னை காரணமாக டிராப் ஆனதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் ‘தொடங்கியது.. மற்றவர்களின் அலறலை தாண்டி தொடரும்.. சிங்கத்தின் ஆட்டம் விரைவில்’ என குறிப்பிட்டு சிம்பு, வெற்றிமாறனை டேக் செய்துள்ளார். இப்படப் பணிகள் துவங்கி விட்டது என்பதை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.