news

News December 15, 2024

அர்ஷ்தீப் சிங்கின் ஆசையை நிறைவேற்றுமா BCCI?

image

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட அர்ஷ்தீப் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார். 3 ஃபார்மெட்களிலும் இந்தியாவிற்காக வெற்றி ஈட்டித் தரவேண்டும் எனவும், இதைவிட தனக்கு வேறு எதுவும் பெரியது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். தனது விருப்பம் குறித்து பும்ராவிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2022 ஜூலை முதல், T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அர்ஷ்தீப் விளையாடி வருகிறார்.

News December 15, 2024

தென்கொரியாவில் அடுத்து என்ன நடக்கும்?

image

தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் பதவி நீக்கப்பட்டதை அடுத்து அவர் மீதான விசாரணை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அடுத்த 180 நாள்களுக்குள் நீதிமன்றம் இந்த மசோதாவுக்கு ஆதரவாகவோ எதிராகவோ தீர்ப்பளிக்கலாம். ஆதரவான முடிவு எடுக்கப்பட்டால் அடுத்த 60 நாள்களுக்குள் புதிய அதிபருக்கான தேர்தல் நடக்கும். அதுவரை பொறுப்பு அதிபர் ஆட்சியில் தொடர்வார்.

News December 15, 2024

POK-வை மீட்க வேண்டும்: உமர் அப்துல்லா அதிரடி

image

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும் என்பதுதான் தங்களுடைய நிலைப்பாடும் கூட என, J&K முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். பாக். உடனான மோதல்களை பேச்சுவார்த்தையின் மூலம்தான் தீர்க்க வேண்டுமே தவிர, போர் தீர்வாகாது எனவும், பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய பொறுப்பு அவர்களுக்கும் உண்டு என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 15, 2024

விண்வெளிப் பொருளாதாரம் 3 மடங்காக உயரும்!

image

இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் அடுத்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிக்கும் என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், “விண்வெளி, கடல் & இமயமலை வளங்கள் தொடர்பான ஆய்வுகள் இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு (8%-9%) கணிசமான அளவில் பங்களித்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது” என்றார்.

News December 15, 2024

டிரம்ப் வருகை: ஈரானை தாக்க தயாராகும் இஸ்ரேல்

image

இஸ்ரேலின் விமானப்படை மீண்டும் ஈரானின் அணு ஆயுதகிடங்குகள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே அதிகரிக்கும் பதற்றத்தால் ஈரானின் அணு ஆயுத வளர்ச்சியை தடுக்கும் முனைப்பில் டிரம்ப்பின் “Maximum pressure 2.0” முன்னெடுப்புகளில் இதுவும் ஒன்று எனப்படுகிறது. பைடன் ஆட்சியில், இது போன்ற தாக்குதல்களில் இஸ்ரேல் ஈடுபடக்கூடாது என தெரிவிக்கபட்டிருந்தது.

News December 15, 2024

ராசி பலன்கள் (15-12-2024)

image

➤மேஷம் – அச்சம் ➤ ரிஷபம் – சோர்வு ➤மிதுனம் – பயம் ➤கடகம் – பக்தி ➤சிம்மம் – களிப்பு ➤கன்னி – சுகம் ➤துலாம் – கவலை ➤விருச்சிகம் – வெற்றி ➤தனுசு – நன்மை ➤மகரம் – சாதனை ➤கும்பம் – லாபம் ➤மீனம் – ஜெயம்.

News December 15, 2024

நிவாரணம் எப்போது.. அமைச்சர் சொன்ன தகவல்

image

ஃபெஞ்சல் புயலும், அதனைத் தொடர்ந்து பெய்து வரும் மழையால், கிட்டதட்ட வட மாவட்டங்களே சின்னாபின்னமாகி விட்டன. குறிப்பாக, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. பல லட்சம் ஏக்கரிலான பயிர்கள் மழை வெள்ளத்தால் நாசமாகிவிட்டன. இந்நிலையில், கடலூரில் மழை சேதங்களை பார்வையிட்ட அமைச்சர் பன்னீர்செல்வம், வயலில் தேங்கியுள்ள நீர் வடிந்த பிறகு கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

News December 15, 2024

10 ரூபாயில் இளமையாகலாம்..!

image

வெறும் 10 ரூபாயில் நமது அன்புக்குரிய தாத்தா, பாட்டிகளை ஆரோக்கியமாக வாழ வைக்கலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். காலை, மாலை என ஒருநாளைக்கு 2 பலூன்களை ஊதி பேரக்குழந்தைகளுக்கு கொடுக்கச் சொல்லுங்கள். இது ஒரு நாளைக்கு 200மீட்டர் நடப்பதற்கு சமமானது எனக் கூறுகின்றனர். இதயம், நுரையீரலுக்கான சிறந்த உடற்பயிற்சி இதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை எனவும் டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News December 15, 2024

பாராசிட்டமால் எடுக்குறீங்களா?

image

தலைவலி, காய்ச்சல் என்றதும் உடனடியாக பாராசிட்டமால் மாத்திரைகள் உட்கொள்வோர் ஏராளம். பாராசிட்டமால் மாத்திரையை 65 வயதிற்கு மேற்பட்டோர் அடிக்கடி பயன்படுத்தினால், மோசமான பக்க விளைவுகள் ஏற்படும் என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வயதானோர் இந்த மாத்திரையை அடிக்கடி எடுத்துக்கொள்வதால், சிறுநீரக பாதிப்பு 19%, மாரடைப்பு 9%, உயர் ரத்த அழுத்தம் 7% அதிகரிக்க காரணமாக இருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

News December 15, 2024

பிரதமரிடம் நிறைய எதிர்பார்த்தேன்: பிரியங்கா

image

பிரதமர் மோடியால் ஊழலை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால், நாடாளுமன்றத்தில் அதானி குறித்து விவாதித்திருக்க வேண்டும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையில் பிரதமர் புதிதாக ஏதாவது பேசுவார் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவரது பேச்சு சலிப்பை ஏற்படுத்தியதாகவும் பிரியங்கா கூறியுள்ளார். அரசியலமைப்பின் மீதான இன்றைய விவாதத்தில் காங்கிரஸை பிரதமர் கடுமையாக சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!