India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான BGT தொடரின் 3ஆவது போட்டி, பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, ஆஸி., அணி பேட்டிங் ஆடியது. 13.2 ஓவர்களில் 28/0 ரன்கள் எடுத்தபோது கனமழை குறுக்கிட ஆட்டம் தடைபட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், 2வது நாள் ஆட்டம் நடக்குமா? வருண பகவான் வழிவிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. போட்டி நடக்குமா? CMT HERE.
▶டிச.15 (கார்த்திகை 30) ▶ஞாயிறு ▶நல்ல நேரம்: 07:45 – 08:45 AM, 03:15 – 04:15 PM ▶கெளரி நேரம்: 01:45 – 02:45 AM, 01:30 PM – 02:30 PM ▶ராகு காலம்: 04:30 – 06:00 PM ▶எமகண்டம்: 12:00 – 01:30 PM ▶குளிகை: 03:00 – 04:30 PM ▶திதி: 03:13 PM வரை பெளர்ணமி பின்பு பிரதமை ▶ சூலம்: மேற்கு ▶ பரிகாரம்: வெல்லம் ▶ நட்சத்திரம்: மிருகசீரிஷம் ▶சந்திராஷ்டமம்: விசாகம். ▶அமிர்தாதி யோகம்: சித்தயோகம்.
அரசுப் பணிக்கான தேர்வுகளை நடத்துவதில் திமுக அரசு அலட்சியம் காட்டுவதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், TNPSC நடத்திய அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வில் நடந்த குளறுபடிகளை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தேர்வாணையம் நடத்தும் இதர தேர்வுகளை நம்பி அரசுப் பணிக்கான தேர்வுகள் எழுத காத்திருக்கும் பல லட்சம் இளைஞர்களின் நிலை என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனக்கென்று தனி மொழி நடை, எழுத்து நடையை கொண்ட மொழி “தமிழ்” என்பது நிரூபணமாகியுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். அசோகர் காலத்திற்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்பே, தனக்கென தனி முறையை பின்பற்றிய இனம் தமிழினம் எனக் குறிப்பிட்ட அவர், அசோகரின் பிராமி எழுத்துகளில் இருந்துதான் தமிழ் மொழி வந்தது என்ற கோட்பாட்டை தற்போது, தொல்லியல் ஆய்வுகள் அறிவியல்பூர்வமாக நிரூபித்து உடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
▶குறள் பால்: பொருட்பால்
▶குறள் இயல்: குடியியல்
▶அதிகாரம்: குடிசெயல்வகை
▶குறள் எண்: 1021
▶குறள்:
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
▶பொருள்: உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.
*1970 – சோவியத் யூனியனின் வெனேரா 7 விண்கலம், வெள்ளி கோளின் மேற்பரப்பில் இறங்கிய முதல் விண்கலம் என்ற பெருமையை பெற்றது.
*1995 – ஈழப்போரின்போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து, திருச்சியை சேர்ந்த அப்துல் ரவூஃப் என்பவர் தீக்குளித்து இறந்தார்.
*2001 – பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரம், 11 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.
*இன்று சர்வதேச தேயிலை தினம்.
9ஆவது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் அணியை இந்தியா எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2ஆவது அரையிறுதி போட்டியில் தென் கொரியாவை சீனா எதிர்கொள்கிறது. இதில் வெல்லும் அணியுடன் இறுதிப் போட்டியில் இந்திய அணி மோத உள்ளது.
இன்று (டிச.15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (டிச.15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
நடப்பு நிதியாண்டில், 91 MSME தொழில் நிறுவனங்களுக்கு ₹1,964 கோடி நிதி ஆதரவு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே, “2020 மே மாதத்தில் ₹50,000 கோடி நிதியில் சுயசார்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் MSME நிறுவனங்களுக்கு ₹2,000 கோடி நிதி (மொத்த நிதியில் இது 4%ஆகும்) வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
Sorry, no posts matched your criteria.