news

News December 15, 2024

விவசாயிகளுக்கான கடன் வரம்பு உயர்வு

image

சிறு, குறு விவசாயிகளை ஆதரிக்கும் வகையில், பிணையின்றி வழங்கப்படும் விவசாயக் கடனுக்கான உச்சவரம்பை ₹1.60 லட்சத்தில் இருந்து ₹2 லட்சமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இது வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 86%-க்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் பலனடைவார்கள் என வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News December 15, 2024

இன்று வருகிறது மகளிர் உரிமைத் தொகை

image

மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் ₹1000ஐ சுமார் 1.6 கோடி பேருக்கு வழங்கி வருகிறது தமிழக அரசு. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் தொகை, இன்று வரவு வைக்கப்படவுள்ளது. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பரிசீலித்து தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News December 15, 2024

இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்

image

சென்னை வானகரத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் 7 இடங்களில் டெபாசிட் இழந்தது குறித்து 10 பேர் கொண்ட குழு கள ஆய்வு நடத்தி தகவல்களை கொடுத்துள்ளது. அது குறித்தும் இந்த பொதுக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் வியூகம், கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

News December 15, 2024

சென்னை வருகிறார் உலக சாம்பியன்

image

உலக செஸ் சாம்பியன், குகேஷ் நாளை காலை தமிழகம் திரும்புகிறார். சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரெனை எதிர்கொண்ட அவர், 6.5-7.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக செஸ் சாம்பியன் என்ற பெருமைக்கும் குகேஷ் சொந்தக்காரரானார். இந்நிலையில், நாளை காலை 11 மணிக்கு சென்னை ஏர்போர்ட் வரும் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News December 15, 2024

அடுத்த 3 நாள்களுக்கு மழை அப்டேட்

image

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் நாளை தஞ்சை, திருவாரூர் உள்பட 6 மாவட்டங்களில் கனமழையும், நாளை மறுநாள் நாகை, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறையில் மிக கனமழையும் பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது.

News December 15, 2024

இன்று மாலை உடல் தகனம்

image

காங்கிரஸ் MLA ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்படவுள்ளது. நுரையீரல் தொற்றால் கடந்த மாதம் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு மேல் ஊர்வலமாக உடலை எடுத்துச் சென்று தகனம் செய்யப்படவுள்ளது.

News December 15, 2024

அப்போ மட்டும் தேவை; இப்போ வேண்டாமா? வேல்முருகன்

image

ஓட்டு கேட்கும்போது தேவைப்படும் கூட்டணி கட்சிகள், தேர்தலுக்கு பிறகு தேவைப்படுவது இல்லை என தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். கடலூரில் பேட்டியளித்த அவர், “தேர்தலின்போது முதல்வருடன் கூட்டணி கட்சித் தலைவர்களை அமர வைப்பார்கள். பிறகு ‘ப்ரோடோகால்’ எனக் கூறி புறம் தள்ளுகிறார்கள். இதற்கெல்லாம் தேர்தல் நேரத்தில் மக்கள் எதிர்வினையாற்றுவார்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

News December 15, 2024

பாட்டி வைத்தியமும்.. 10 பிரச்னைகளுக்கு தீர்வும்

image

*இரவு தூங்கச் செல்லும் முன் மிளகு, பட்டை, கிராம்பு தலா 1 ஸ்பூன் வீதம் எடுத்து தண்ணீரில் கொதிக்கவிட்டு மூடி வைக்கவும்.
*காலை எழுந்த உடன் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை பருகவும்
*தொடர்ந்து 5 நாள்கள் குடித்து வந்தால், இடுப்பு வலி, மூட்டு வலி, வாயுத்தொல்லை, தைராய்டு, சர்க்கரை வியாதி, உடல் சோர்வு, பாத எரிச்சல், கல்லீரல், கை கால் வலி, வயிறு சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

News December 15, 2024

சோதனையின்போது கோயிலை கண்டுபிடித்த UP போலீஸ்

image

உத்தரபிரதேசத்தில் 46 ஆண்டுகள் மூடப்பட்டு கிடந்த ஹனுமன் கோயிலை, போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் சம்பல் பகுதியில் மின்சாரம் திருட்டு, அரசு நிலம் ஆக்கிரமிப்பு புகார் தொடர்பாக போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது, தீபா சராய் என்ற பகுதியில் சுவர்கள் எழுப்பப்பட்டு மறைந்திருந்த கோயிலை கண்டுபிடித்த அதிகாரிகள், அதனை சுத்தம் செய்து பூஜை செய்வதற்கு ஏதுவாக திறந்துவிட்டுள்ளனர்.

News December 15, 2024

குற்றங்களின் தலைநகர் டெல்லி: கெஜ்ரிவால்

image

சமூக விரோதிகளின் தலைநகராக டெல்லி மாறிவிட்டதாக, அமித் ஷாவுக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியின் L&O-ஐ கவனிக்கும், நாட்டின் உள்துறை அமைச்சருக்கு வேதனையுடன் கடிதம் எழுதுவதாக கூறியுள்ள அவர், பாலியல் குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கொள்ளையர்களின் கூடாரமாக டெல்லி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அமித் ஷா தலைமையில் குற்றங்களின் தலைநகராக டெல்லி உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்

error: Content is protected !!