India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆதவ் அர்ஜுனாவின் விளக்கம் கட்சி நடைமுறைக்கு ஏற்புடையதாக இல்லை என திருமாவளவன் கூறியுள்ளார். எவ்வளவு ஆற்றல் பெற்றவராக இருந்தாலும், கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் கட்சிக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், <<14889338>>ஆதவ்வை<<>> நீக்க வேண்டுமென்பது தங்கள் நோக்கமில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். மேலும், அமைப்புக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டுமே தவிர, அவசரம் கூடாது என்றும் கூறியுள்ளார்.
உலக அளவில் அறியப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய தபேலா இசைக் கலைஞர், ஜாகிர் ஹுசேன் ஆவார். கம்போசர், பெர்குஷனிஸ்ட், நடிகர் எனப் பல பரிமாணங்கள் கொண்ட கலைஞரான இவர், கிராமி விருது வென்றவர். இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளது. இந்துஸ்தானி, ஃபியூஷன் என ஏராளமான இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இவரது மனைவி அண்டோனியா கதக் நடனக் கலைஞர்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷுக்கு பரிசுத்தொகையாக ₹11.45 கோடி கிடைத்துள்ளது. ஆனால் பணத்திற்காக தான் செஸ் விளையாடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சிறுவயதில் அருமையான பொம்மையாக செஸ் போர்டு தோன்றியதில் இருந்து, அது தரும் அளவற்ற மகிழ்ச்சிக்காகவே தொடர்ந்து விளையாடிவருவதாக கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு முறை விளையாடும்போது, அது பற்றி புதிய விஷயத்தை கற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் (73) இன்று காலமானார். இதயம் தொடர்பான பிரச்னையால் அமெரிக்காவில் உள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜாகிர் உசேன் மறைவால் இந்திய திரையுலகமும், உலக அளவிலான இசை ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்துஸ்தானி இசைக்கலைஞரான ஜாகிர் உசேன், பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள அனுர குமார திசநாயகா, இந்தியா வருகை தந்துள்ளார். 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அவரை, மத்திய அமைச்சர் எல். முருகன் வரவேற்றார். பிரதமர் மோடியை அவர் நாளை சந்தித்து பேசவுள்ளதாக தெரிகிறது. இருநாட்டு பொருளாதாரம், தமிழக மீனவர் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
டிராவிஸ் ஹெட் பேட்டிங் செய்ய களம் இறங்கிய உடன் ரோகித் சர்மா, பும்ராவை பந்துவீச அழைத்திருக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், BGT பிரிஸ்பேன் டெஸ்டில் ஹெட் பேட்டிங் செய்ய உள்ளே வந்த பொழுதே இந்தியா சிறப்பாக செய்திருக்கலாம். பும்ரா, ஹெட்டுக்கு எதிராக தொடக்கத்திலேயே சில ஓவர்கள் பந்துவீசி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் என்றார்.
திமுக அமைச்சர்கள் மகாராஜா மனப்பான்மையில் வாழ்ந்து வருகிறார்கள் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் காட்டமாக கூறியுள்ளார். கோவையில் பேசிய அவர், “திமுக அரசு பல துறைகளில் தோல்வியை சந்தித்து வருகிறது. மத்திய அரசை எதிர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். அமைச்சர்கள் செல்லும்போது மக்கள் வெளிப்படுத்தும் கோபம் வெறும் 5% மட்டுமே. இந்த ஆட்சியை தூக்கி எறிய மக்கள் காத்திருக்கிறார்கள்” என்றார்.
புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் (73) உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் உள்ள ஹாஸ்பிடலில் ICUவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதயம் தொடர்பான பிரச்னையால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். விரைவில் அவர் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். USல் தற்போது வசித்து வரும் அவர், பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை பெற்றுள்ளார்.
ராமதாஸ் எழுதிய ‘போர்கள் ஓய்வதில்லை’ நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அன்புமணி பேசுகையில், ஐயா ராமதாஸை அங்கீகரிக்கவில்லை என்றாலும், அவரை யாரும் கொச்சைப்படுத்தாதீர்கள். எந்த சமுதாயத்துக்கு பிரச்னை என்றாலும், முதலில் வந்து நிற்பது அவர்தான். ராமதாஸ் வந்த பின்னரே, வட தமிழகம் அமைதியாக இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் வரை தினமும் வட தமிழகத்தில் கலவரம் நடந்தது எனக் கூறினார்.
விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகியது குறித்து இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், தாமாகவே கட்சியில் இருந்து நீக்குவார்கள், அதிலிருந்து அரசியல் செய்யலாம் என நினைத்த செல்வந்தருக்கு, திருமாவின் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. அதனால் தானாகவே கட்சியில் இருந்து விலகி விட்டார். எதுவாயினும். விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியதே நன்று என அமீர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.