India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் T20 போட்டியில், இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற WI, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய IND அணி, ஜெமிமா ரோட்ரிக்ஸ் (73), ஸ்மிரிதி மந்தனா (54) அதிரடியாlல்195 ரன்கள் குவித்தது. 196 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய WI, 146 ரன்கள் மட்டுமே எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
*1928 – சென்னை மாகாண முதல் CM பனகல் அரசர் நினைவு நாள்
*1971 – வங்கதேச விடுதலைப் போர்
*1971 – இந்தியா-பாகிஸ்தான் போர்: பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்ததால் போர் முடிந்தது.
*இந்நாள் இந்தியாவிலும், வங்கதேசத்திலும் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
*1971 – பிரிட்டனிடம் இருந்து பக்ரைன் அரசு விடுதலை பெற்றது.
1991 – சோவியத் யூனியனில் இருந்து கஜகஸ்தான் விடுதலை பெற்றது.
ப்ரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. புனேவில் நடைபெற்ற போட்டியில், ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியை TT அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 34-27 என்ற கோல் கணக்கில், TTயை வீழ்த்தி JPP அணி வென்றது. இதுவரை 19 போட்டிகளில் விளையாடியுள்ள TT அணி, 6 வெற்றி 12 தோல்வி ஒரு டிராவுடன் புள்ளி பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது.
இன்று (டிச.16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (டிச.16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
எமெர்ஜென்சி காலத்தில் இருந்ததுபோல் தற்போது நமது தேசம் இருப்பதாக வினேஷ் போகத் கவலை தெரிவித்துள்ளார். உயிரை பணையம் வைத்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஒட்டு மொத்த நாடும் துணை நிற்க வேண்டும் எனவும், எப்போதும் பிரதமர் பேசுவதற்கு அப்படியே நேர் எதிராக அவரது செயல்பாடுகள் இருப்பதாகவும் வினேஷ் விமர்சித்துள்ளார். மேலும், விவசாயிகளின் பிரச்னைகளுக்கு அரசு தீர்வு காணவும் வலியுறுத்தியுள்ளார்.
ராமதாஸின் ‘போர்கள் ஓய்வதில்லை’ நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நீ யார் என்று என்னிடம் யாராவது கேட்டால், அடிப்படையில் விவசாயி, பின்னர் மருத்துவர், கடைசியில்தான் அரசியல்வாதி என்பேன். அதுவும் பதவியை விரும்பாத அரசியல்வாதி. கடவுள் என்னிடம் வந்து வரம் கேட்டால், ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாடும், ஒரு சொட்டு நீர் கடலுக்கு போகக்கூடாது என 2 வரங்களை கேட்பேன் என்றார்.
2023-24ஆம் நிதியாண்டில், அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, ₹6.55 லட்சம் கோடியை எட்டியதாக, Bank of Baroda தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், கடந்த 30 ஆண்டுகளாக அந்நாட்டுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி, 10% ஆண்டு கூட்டு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஏற்றுமதியில் மருந்துகள், விலையுயர்ந்த கற்கள், பெட்ரோலிய பொருட்கள், தொலைதொடர்பு கருவி உள்ளிட்டவை 40% பங்கு வகிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கடந்த 2012ஆம் ஆண்டு தாய்களை இழந்த போரிஸ், ஸ்வெட்லயா என்ற 2 புலிக்குட்டிகளை ஆராய்ச்சியாளர்கள் எடுத்து வளர்த்து வந்துள்ளனர். இளம் வயது வந்த உடன் புலிகளை தனித்தனியாக காட்டுக்குள் விட்டுள்ளனர். தனிமையில் அவதிபட்ட போரிஸ், ஸ்வெட்லயாவைத் தேடி பெரும் பயணம் மேற்கொண்டது. பல தடைகளைத் தாண்டி 200 கி.மீ.களை கடந்து தன் இணையை கண்டுபிடித்துள்ளது. இப்போது அவர்களுக்கு ஒரு குட்டியும் பிறந்துள்ளது.
ஆதவ் அர்ஜுனாவிற்கு ஆர்வம் அதிகமாக இருப்பதால், உடனே சாதிக்க துடிப்பதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். விளிம்பு நிலை மக்கள் நலனுக்கு போராட வேண்டும், பொது வாழ்க்கைக்கு வரவேண்டும் என்ற அவரது எண்ணங்கள் வரவேற்கக் கூடியதாக இருந்தாலும், அமைப்பின் நடைமுறையை உள்வாங்காமல் அவசரம் காட்டியதாக திருமா தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு பக்குவம் அவசியம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.