India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மக்களுக்கு விநியோகிக்கப்படும் நீரின் தரத்தை முழுமையாக பரிசோதித்து வழங்க மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுரை வழங்கியுள்ளது.
2025ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை நிலையான & மிதமான வளர்ச்சியை காணும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதன் அறிக்கையில், “உலகளாவிய GDP, தங்கப் பத்திரம் வருமானம், போர், பணவீக்கம் போன்ற முக்கிய பொருளாதார சூழல்கள் தங்கத்தின் விலை மீது தாக்கம் செலுத்தும்” எனக் கூறப்பட்டுள்ளது. தங்கத்தை அதிகளவில் வாங்கி கையிருப்பு வைக்கும் வழக்கத்தை சீனா தொடர்ந்தால் தங்கத்தின் விலை அதீதமாக உயரலாம் எனக் கூறப்படுகிறது.
பிரதமர் ஆயுள் காப்பீடு திட்டத்தில் 21 கோடி பேர் பதிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த PMJJBY திட்டத்தில், தலா ₹2 லட்சம் ஆயுள் காப்பீட்டை உறுதி செய்துள்ளதாக மத்திய அரசுக் கூறியுள்ளது. ஆண்டுக்கு ₹436 பிரீமியம் செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம். அதேபோல பிரதமர் விபத்து காப்பீடு திட்டத்தில் 48 கோடி பேரும், பிரதமர் சேமிப்பு கணக்கு திட்டத்தில் 54 கோடி பேரும் சேர்ந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தென் மாவட்டங்களை உலுக்கிய கனமழையால் நெல்லை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்வி நிலையங்கள் செயல்படும் என்று கூறியிருக்கும் ஆட்சியர், மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளார்.
இந்தியா-ஆஸி., அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸி., அணி 445 ரன்கள் எடுத்துள்ளது. முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டாலும், இரண்டாம் நாளில் ஆஸி., வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர். குறிப்பாக ஸ்மித் 101, ஹெட் 152 ரன்கள் எடுத்தனர். இறுதியில் ஆஸி., 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பவுலிங் செய்த பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உயர்கல்வி சேர்க்கையில் தேசிய சராசரியை விட தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாக AICTE பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அதன் தலைவர் சீதாராம், தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை 52 சதவீதத்துடன் சிறப்பாக இருப்பதாக கூறினார். மேலும், 2035ஆம் ஆண்டுக்குள் தேசிய சராசரியை 50 சதவீதமாக உயர்த்த இலக்கு வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
வாரத்தின் முதல் நாளான இன்று, எந்த ஒரு புதிய செயலையும் சிந்தித்து தொடங்குவது மிகவும் உகந்தது. சந்திர பகவானுக்கு உரிய நாளான திங்கட்கிழமையில் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை வாங்கலாம். அதே நேரத்தில், இரும்பு போன்ற உலோகங்களை வாங்க உகந்த நாள் அல்ல. வெளியூர் பயணங்கள் மேற்கொண்டால் அதன் மூலம் அனுகூலமான பலன்களைப் பெறலாம். இன்றைய சிவ வழிபாடு மிகுந்த நன்மையை கொடுக்கும் என்று ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர்.
உலக செஸ் சாம்பியன், குகேஷ் இன்று காலை தமிழகம் திரும்புகிறார். சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், சீன வீரர் டிங் லிரெனை எதிர்கொண்ட அவர், 6.5-7.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக செஸ் சாம்பியன் என்ற பெருமைக்கும் குகேஷ் சொந்தக்காரரானார். இந்நிலையில், காலை 11 மணிக்கு சென்னை ஏர்போர்ட் வரும் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மார்கழி மாதம் பிறந்துவிட்டது. இந்த மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது கடவுளை வழிபடும் மாதமாக மார்கழி கருதப்படுகிறது. இதன் காரணமாகவே, இந்த மாதத்தில் எந்த விதமான மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. சைவ மற்றும் வைணவ ஆலயங்களில், சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனைகள் செய்யப்படும். மேலும் தற்போதும் கூட அதி காலையில் மார்கழி பஜனை நடத்தப்படுகிறது.
தென்கிழக்கு வங்கக்கடலில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல நாளை, கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், நாளை மறுநாள் கடலூர், விழுப்புரத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.