India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று இது வலுப்பெற்று தமிழகம் நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், உருவாக தாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் அடுத்த 3 நாள்களுக்கு தமிழகத்தில் 3 நாள்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அரசுப் பள்ளிகளில் 9-12ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களையும், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாக நியமிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில், ஏற்கெனவே உள்ள உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுடன், புதிய ஆசிரியர் ஒருவரை கூடுதலாக நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் +2 வரை படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி படிப்பது குறித்து இந்த குழு வழிகாட்டும்.
தினமும் குளிர் பானங்கள் குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தால், எலும்பு பாதிப்புகள் ஏற்படும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குளிர்பானங்களில் பாஸ்போரிக் (Phosphoric) அமிலம் உட்பட பிற ரசாயனங்கள் இருக்கின்றன. இவை எலும்புகளில் டிகால்சிஃபிகேஷனை அதிகரித்து பலவீனமடைய செய்கிறது. இதனால், எலும்புகள் அடர்த்தி குறைந்து பலவீனமடைகின்றன. இப்படி பலவீனமடைவதால், ஆஸ்டியோபோரோசிஸ் என்ற பாதிப்பு உண்டாகும்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு மாயாவதி திடீர் ஆதரவு அளித்துள்ளார். இதன் மூலம் அரசின் செலவுகள் குறையும், மக்கள் நலத்திட்டங்களைத் தடையின்றி செயல்படுத்த முடியும் எனக் கூறியுள்ள அவர், அரசியல் கருத்து வேறுபாடின்றி இதற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். BSPஇன் திடீர் மனமாற்றம் BJP அரசுக்குக் கூடுதல் வலு சேர்த்துள்ளது. ஏற்கெனவே அதிமுக தங்களது ஆதரவை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம் கட்டுவதில் அளிக்கப்படும் சலுகை காலத்தை கருணைக் காலம் (Grace Period) என்கின்றனர். பாலிசிதாரர் Due date-க்குள் பிரீமியம் கட்டவில்லை எனில், பாலிசியை செயல்பாட்டுக்கு கொண்டுவர Grace Period (மாத பிரீமியம் -15 நாள்கள்; மற்ற பிரீமியம்- 30 நாள்கள்) வழங்கப்படும். இதன் பின்னரும் பிரீமியம் கட்டவில்லை எனில், பாலிசி காலாவதி (Lapsed) ஆகிவிடும். காலக்கெடுவில் கவனம் வைக்கவும்!
இந்தியாவைச் சேர்ந்த பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் (73) காலமானார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஐசியு-வில் இருந்த அவர் நேற்று காலமானதாக தகவல் வெளியான நிலையில், அவரது குடும்பத்தினர் மறுத்திருந்தனர். தற்போது அவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டின் பிரபலமான இந்திய திரைப்படங்களின் பட்டியலை IMDb வெளியிட்டுள்ளது. இதில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘கல்கி 2898 AD’ திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. ‘ஸ்ரீ2’, ‘மகாராஜா’, ‘சைத்தான்’, ‘ஃபைட்டர்’, ‘மஞ்சுமெல் பாய்ஸ்’, ‘Bhool Bhulaiyaa 3’, ‘கில்’ ‘சிங்கம் அகெய்ன்’, ‘லாபடா லேடீஸ்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. டாப் 10இல் 7 படங்கள் ஹிந்தி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சியில் இந்தாண்டு வெறும் 59 ஆண்கள் மட்டுமே கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளனர். இதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவிப்பதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் வீடு தேடிச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது, “நாங்கள் கருத்தடை செய்துகொள்கிறோம். எங்கள் கணவர்களுக்கு வேண்டாம்” என்று மனைவிகள் கூறுகிறார்களாம். என்னானு சொல்றது இதை?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி திணறி வருகிறது. முதல் இன்னிங்ஸ் ஆஸி., அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டார்க் வீசிய முதல் ஒவரில் 2வது பந்தில் ஜெய்ஸ்வால் 4 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் கில் 1 ரன்னில் அவுட் ஆனார். தற்போது இந்தியா 7/2 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகையாளரை சந்தித்த நடிகர் மோகன் பாபு, அவரிடம் மன்னிப்பு கேட்டார். கடந்த வாரம் மோகன் பாபு இல்லத்தில் நடந்த தாக்குதலில் பத்திரிகையாளர் ரஞ்சித் குமாருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மோகன் பாபு மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், ரஞ்சித்தை மருத்துவமனையில் சந்தித்து மன்னிப்பு கேட்டதோடு, டிஜ்சார்ஜ் ஆனதும் வீட்டில் சந்திப்பதாகவும் கூறினார்.
Sorry, no posts matched your criteria.