India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது, அடுத்த 2 தினங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தமிழ்நாடு நோக்கி நகரும் என்று MET அறிவித்துள்ளது. இதனால், அடுத்த 3 நாள்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை பற்றி அச்சப்பட தேவையில்லை என்கின்றனர் மருத்துவர்கள். காரணம், *சிகிச்சைக்கு பின் லேசான வலி(அ) வலியே இருக்காது. *3-4 நாட்களுக்குள் ஆபீஸ் வேலை, ஒரு வாரத்தில் உடலுறவு & உடற்பயிற்சி, 15 நாளில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் *இது விந்தணுக்களை மட்டுமே தடுக்கும். மற்றபடி இயல்பான செக்ஸ் செயல்பாடு அப்படியே இருக்கும். உச்சநிலையில் விந்து வெளியாவதும் இயல்பாக இருக்கும்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் அமலுக்கு வந்தால் நாட்டின் பன்முகத்தன்மை சீர்குலைந்துவிடும் என CM ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பார்லிமென்ட்டில் பெரும்பான்மை இல்லாத போதிலும், மாநிலக் கட்சிகளை அழிக்கும் நோக்கில், பாஜக அரசு
கொண்டுவரத் துடிக்கும் இந்த ஆபத்தான திட்டத்தை ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தங்கள் நிறுவனத்தின் பேரில் தவறான செய்தியை ஆப்பிளின் AI வெளியிட்டதாக BBC புகார் அளித்துள்ளது. யுனைடெட் ஹெல்த்கேர் CEO கொலை வழக்கின் விசாரணையில் இருப்பவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்தியை ஆப்பிள் AI Notificationஆக அனுப்பியது. இச்செய்தியை தங்கள் வெளியிடவில்லை என்று மறுத்த BBC ஆப்பிள் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளது. இது வளர்ந்து வரும் AI டெக்னாலஜி மீதான நம்பகத்தன்மையை கேள்வி குறியாக்குகிறது?
ஒரே படம் தான் தென்னிந்தியாவில் பல ரசிகர்களின் ஃபேவரிட்டாக மாறிவிட்டார். இந்திய அளவில் ட்ரெண்டான இவரை சீதாவாக கொண்டாடாத தமிழ் ரசிகரே இருக்க மாட்டார். இதில், குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இவர் இதுவரை நேரடி தமிழ் படத்தில் நடிக்கவே இல்லை. ஒரே ஒரு டப்பிங் படம் தான் வந்தது. தமிழில் எப்போது இவரின் என்ட்ரி என்று தான் பலரும் வெய்ட்டிங். இன்னுமா யார் என தெரியவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் EVKS இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் ஈ.வெ.ரா 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்ததால், அத்தொகுதிக்கு நடந்த இடைதேர்தலில் சஞ்சய் சம்பத் போட்டியிட இளங்கோவன் விரும்பினார். ஆனால், அப்போது அதனை விரும்பாத காங். தலைமை இளங்கோவனை போட்டியிட வைத்தது.
இந்த நூற்றாண்டின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களான விராட், ஸ்மித், ரூட், வில்லியம்சனை FAB4 என அழைக்கின்றனர். இவர்களில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 2021-ல் 27 சதத்துடன் முதலிடத்தில் இருந்த கோலி, தற்போது 30 சதத்துடன் 4வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஆனால், 2021-ல் 17 சதத்துடன் 4வது இடத்தில் இருந்த ரூட், இந்த காலகட்டத்தில் 19 சதம் அடித்து 36 சதங்களுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கடந்த 12 ஆம் தேதி நடைபெற்று முடிந்த திருமணத்தில் கீர்த்தி சுரேஷ் மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் தங்க ஜரிகை கொண்ட மடிசார் புடவையை அணிந்திருந்தார். அனிதா டோங்ரே என்ற பிரபல வடிவமைப்பாளரின் மேற்பார்வையில் நெய்யப்பட்ட காஞ்சி பட்டு புடவையான இதனை நெய்ய 405 மணி நேரம் ஆனதாம். இதில் கீர்த்தி சுரேஷ் எழுதிய கவிதை ஒன்றும் சேர்த்து நெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ₹3 லட்சம் என்கிறார்கள்.
விசிகவில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணையவிருப்பதாக தகவல் உலா வருகிறது. இதுகுறித்து பதிலளித்த அவர், “எதிர்கால திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன். இணைப்பு என்பதை தாண்டி என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி யோசனை செய்து கொண்டு இருக்கிறேன். விரைவில் செய்தியாளர்களை சந்தித்து முடிவை அறிவிக்கிறேன்” என்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்தில் இருந்து இசைஞானி இளையராஜா வெளியேற்றப்பட்ட விவகாரம் பற்றி எரிந்த சூழலில் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அர்த்தம் மண்டபத்தையும் கருவறை போன்றே பாவிப்பதாகவும், அதனுள் ஜீயர்கள் தவிர யாருக்கும் அனுமதி இல்லையென்றும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனை, இளையராஜா ஏற்றுக் கொண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.