India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈஸ்டரை முன்னிட்டு உக்ரைன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. நாளை ( ஏப்ரல் 21 ) வரை தாக்குதல் நடத்தப்படாது என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரை முடிவு கொண்டுவர முடியும் என அமெரிக்கா கூறி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து 2022 பிப்ரவரி முதல் போர் நடைபெற்று வருகிறது.
இன்று (ஏப்ரல் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (ஏப்ரல் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
TN-ல் சுங்கச்சாவடிகளில் FAST TAG முறையில் வாகனங்களில் கட்டண வசூலிப்பு தொடரும் என்று NHAI தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள் அடிப்படையில் கட்டணம் வசூலிப்பு, நாடு முழுவதும் மே 1-ல் அமலாக இருப்பதாக வெளியான தகவலை மறுத்த NHAI, அத்திட்டம் சில சுங்கச்சாவடிகளில் மட்டுமே கொண்டு வரப்பட்டு உள்ளதாகக் கூறியுள்ளது. TN-ல் 72 சாவடிகளிலும் எந்த மாற்றமுமின்றி FAST TAG முறை தொடரும் என்றும் NHAI தெரிவித்துள்ளது.
நாட்டில் குழந்தைகள் கடத்தல், விற்றல் ஆகியவற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் CARA என்ற அமைப்பு இயங்கி வருகிறது. எவர் ஒருவர் குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என்றாலும் இந்த அமைப்பின் மூலமாக மட்டுமே தத்தெடுக்க வேண்டும். குழந்தையை தத்தெடுக்க விரும்புபவர்கள், <
இன்றைய ஐபிஎல் போட்டியில், LSG அணி அபார வெற்றி பெற்றிருக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த LSG அணியின் மார்க்ரம், பதோனி அடித்த அரைசதத்தால், அந்த அணி 20 ஓவர்களில் 180 ரன்கள் குவித்தது. அதனை சேஸ் செய்த RR அணியின் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 74 ரன்கள் குவித்தார். இறுதிவரை போராடியும் RR அணியால் வெற்றி பெறவில்லை. 2 ரன்கள் வித்தியாசத்தில் LSG த்ரில் வெற்றி பெற்றது.
➤மேஷம் – ஆர்வம் ➤ரிஷபம் – மகிழ்ச்சி ➤மிதுனம் – நட்பு ➤கடகம் – பாசம் ➤சிம்மம் – பரிவு ➤கன்னி – சோர்வு ➤துலாம் – கவலை ➤விருச்சிகம் – லாபம் ➤தனுசு – போட்டி ➤மகரம் – தனம் ➤கும்பம் – நிம்மதி ➤மீனம் – நலம்.
TN-ல் அடுத்த 3 நாள்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்று IMD தெரிவித்துள்ளது. TN-ல் நாளை முதல் 23-ம் தேதி வரை ஒருசில இடங்களில் வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகரிக்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் 21ம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது.
தனது அப்பா கொடுமைக்காரர் என்று குஷ்பூ குற்றஞ்சாட்டியுள்ளார். தனது அப்பா ஆணாதிக்கர், படப்பிடிப்பில் சாப்பிடக் கூடாது என்று திட்டுவார், படப்பிடிப்பு தளத்திலேயே தன்னை அப்பா அடிப்பார் என்றும் சாடியுள்ளார். அவரின் கொடுமை தாங்க முடியாமல் குடும்பத்தை தான் பார்த்து கொள்வதாகக் கூறியதாகவும், அவரிடம் திரும்பி வரும் நிலை வந்தால் தற்கொலை செய்வேன் என கூறியதாகவும் குஷ்பூ குறிப்பிட்டுள்ளார்.
மும்பையில் ரயிலில் சென்றபோது தன்னிடம் ஒரு நபர் முத்தம் கேட்டதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். விஜய்யின் மாஸ்டர், ரஜினியின் பேட்டை, தனுஷின் மாறன், விக்ரமின் தங்கலான் படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், கல்லூரிக் காலத்தில் மும்பை மின்சார ரயிலில் சென்றபோது ஒருவர் முத்தம் கேட்டதாகவும், இதை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.