India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பூமியை பேரழிவு ஏற்படுத்தும் சூரிய சூப்பர் ஃப்ளேர் தாக்க உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதன் தாக்கம் பில்லியன் கணக்கான அணுகுண்டுகளை விட சக்திவாய்ந்ததாக இருக்கும். இந்த சூப்பர்ஃப்ளேர்களால் செயற்கைக்கோள்கள், மின்சாரம் பாதிக்கப்படும் எனவும், இதுபோன்ற பேரழிவு நிகழ்வுகள் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழ்கின்றன என்றும் தெரிவிக்கின்றனர்.
ஆண்டாள் கோவில் அர்த்த மண்டபத்தில் இளையராஜா அனுமதிக்கப்படாதது குறித்து இந்து அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “அர்த்த மண்டபம் வரை அர்ச்சகர், மடாதிபதிகள், பரிசாரகர் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. அர்த்த மண்டபத்தின் வாசலில் நின்று தரிசனம் செய்யலாம் என்று ஜீயர் சொன்னதை இளையராஜா ஏற்றுக் கொண்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் அடுத்த பாடல் இன்று வெளியாகிறது. அடுத்த பாடல் கேம் சேஞ்சரை சவுண்ட் சேஞ்சராக மாற்றும் என இசையமைப்பாளர் தமன் ட்வீட் செய்துள்ளார். DHOP என்ற இப்பாடல் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தில் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளார்கள்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வினாடி வினாப் போட்டியை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. முதல் நிலைப்போட்டி அந்தந்த மாவட்டங்களில் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த குழுக்கள் கலந்து கொள்ளும் இறுதிப்போட்டி விருதுநகரில் வரும் 28ஆம் தேதி நடைபெறும். முதல் பரிசு ₹2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு மிக கனமழை பெய்யும் என IMD எச்சரித்துள்ளது. நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூரில் கனமழையும் பெய்யலாம். டிச.18ல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரத்தில் மிக கனமழையும், தி.மலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயி்லாடுதுறையில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் பாஜக மையக்குழு கூட்டம் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில், புதிய உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சித் தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அண்மையில் அண்ணாமலை டெல்லி சென்று திரும்பிய நிலையில், தேசிய தலைமையின் அறிவுறுத்தல்களை நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார். ஜனவரிக்குள் தமிழக பாஜகவில் நிர்வாகிகள் மட்டத்தில் முக்கிய மாற்றம் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய – ஆஸி., இடையேயான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸி., அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 4, கில் 1, கோலி 3, பண்ட் 9 ரன்களில் அவுட் ஆகினர். இந்தியா தற்போது 51/4 ரன்களுடன் 394 ரன்கள் பின்தங்கி உள்ளது.
இந்தியப் பெருங்கடலில் கோர தாண்டவம் ஆடிவரும் ’சீடோ’ புயலால் ’மாயோட்’ தீவில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பிரெஞ்சு நாட்டின் அங்கமான அத்தீவு, மடகாஸ்கர் தீவின் அருகே உள்ளது. அங்கு நிலை கொண்டிருக்கும் சீடோ புயலால் 200 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால், வறுமையின் பிடியில் இருக்கும் மயோட் தீவில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
கூரையை பிச்சிட்டு கொட்டும் என்பது போல, பெங்களூருவில் டீ கடை நடத்தும் பிரபாகரனின் மனைவி வங்கி கணக்கில் ₹999 கோடி டெபாசிட் ஆனது. தம்பதிகளின் ஆச்சரியம் தீருவதற்குள், 48 மணி நேரத்தில் பணம் மீட்கப்பட்டு, கணக்கும் முடக்கப்பட்டது. வங்கியின் தவறால் தினசரி வருமானத்தில் வாழும் பிரபாகர் தற்போது பரிவர்த்தனையை பண்ண முடியாமல் தவிக்கிறார். முறையிட்டும் எப்பயனும் இல்லை. என்னவென்று சொல்வது வங்கியின் செயல்பாடுகளை?
‘சொர்க்கவாசல்’ திரைப்படம் வரும் 27ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சித்தார்த் விஸ்வநாதன் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. செல்வராகவன், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நாளில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
Sorry, no posts matched your criteria.