news

News December 16, 2024

மாலை நேரத்தில் உடற்பயிற்சி

image

காலையில் உடற்பயிற்சி செய்வதைவிட மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது. காலை நேர உடற்பயிற்சி, தசை செல்களை தூண்டி உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. மாலை நேரத்தில் செய்யப்படும் உடற்பயிற்சியால், உடலின் முழு ஆற்றலும் அதிகரிக்கிறது. இதனால் நீண்டநேரம் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். மன அழுத்தத்தையும் குறைக்கும்.

News December 16, 2024

ரூ.2,000 UPI பரிவர்த்தனைக்கு 1.1% பணம் பிடித்தம்?

image

G-pay, Phone Pe உள்ளிட்ட UPI வசதியில் ரூ.2,000க்கும் அதிகமான பரிவர்த்தனைக்கு ஏப். 1 முதல் 1.1% பணம் பிடித்தம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகின. நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் அந்த வசதியை பயன்படுத்தும் நிலையில், இந்தத் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள NPCI, அந்தத் தகவலில் உண்மையில்லை எனவும், அதுபோல பணம் பிடிக்கும் திட்டம் இல்லை எனவும் கூறியுள்ளது.

News December 16, 2024

Gmail-க்கு போட்டியா X மெயில் வருகிறதா?

image

நம்.1 பில்லியனரான எலான் மஸ்க், X தளத்தில் பயனர்களின் போஸ்ட்க்கு அடிக்கடி ரியாக்ட் செய்வார். பயனர்களில் ஒருவர் XMail வந்தால் நல்லா இருக்கும் எனச் சொல்ல, அதுவும் லிஸ்ட்டில் இருக்கு என அதிரடி காட்டியுள்ளார் எலான் மஸ்க். மெயில் சேவைகள் அளிப்பதில் Apple Mail, Gmail முன்னணியில் இருக்கின்றன. இந்த நிலையில் எலான் XMail தொடங்கினால் ஆப்பிள், கூகுள் நிறுவனங்களுக்கு கடும்போட்டியாக அமையும்.

News December 16, 2024

மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: கார்கே வலியுறுத்தல்

image

நேரு குறித்த கருத்துக்கு மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசிய மோடி, நேருவையும், காங்கிரஸ் கட்சியையும் சாடியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த கார்கே, மோடி கற்பனையில் வாழ்வதாகவும், நிகழ்காலத்தில் அல்ல என்றும் சாடியுள்ளார்.

News December 16, 2024

மயோட் தீவில் புயலுக்கு ஆயிரக்கணக்கானோர் பலி?

image

பிரான்சிற்கு சொந்தமான மயோட் தீவைத் தாக்கிய சியோட் புயலுக்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முதலில் புயலுக்கு 1,000க்கும் மேற்பட்டாேர் பலியாகி இருக்கலாம் என கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது பல ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் வீசிய புயலால் அந்தத் தீவே பேரழிவைச் சந்தித்துள்ளது.

News December 16, 2024

“நான் சுயமரியாதைக்காரன்; வதந்தியை பரப்பாதீர்”

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இளையராஜா செல்வதை ஜீயர்கள் <<14895444>>தடுத்ததாக<<>> சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து இளையராஜா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், என்னை மையமாக வைத்து சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள். எந்த இடத்திலும் சுயமரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல. விட்டுக்கொடுத்ததும் கிடையாது. என்னை பற்றி வரும் வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News December 16, 2024

தருமபுரி நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்

image

தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரூர் சட்டமன்ற தொகுதியில் நாதக முக்கிய பொறுப்பாளர்கள் கட்சியில் இருந்து கூண்டோடு விலகியுள்ளனர். சமீப காலமாக அக்கட்சியில் இருந்து வெளியேறும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் அனைவரும் சீமானின் செயல்பாடு குறித்து சரமாரியாக குற்றஞ்சாட்டியுள்ளனர். அத்துடன், கட்சியில் உழைப்புக்கு அங்கீகாரம் இல்லை என்றும் ஆதங்கப்பட்டுள்ளனர்.

News December 16, 2024

மிரட்டும் ‘கண்ணப்பா’ மோகன்லால்!

image

தெலுங்கில் வரலாற்று நாவலை தழுவி உருவாகி வரும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் கதாபாத்திரத்தின் மிரட்டல் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கும் இந்தப்படத்தில் மோகன்பாபு, சரத்குமார், ஐஸ்வர்யா, அக்சய் குமார் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அண்மையில் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படம் வரும் ஏப்.25இல் வெளியாகவுள்ளது.

News December 16, 2024

இளையராஜாவுக்கே இந்த கதியா..? பொங்கிய அமீர்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இளையராஜா அனுமதிக்கப்படாதது குறித்து இயக்குநர் அமீர் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய திருநாட்டின் பிரதமராக இருந்தாலும், தேசத்தின் முதல் குடிமகனாக இருந்தாலும், உலக அரங்கில் இசைஞானியாக இருந்தாலும் கருவறைக்குள் அனுமதி இல்லை. சனாதனம் தலைவிரித்தாடும் இந்நாட்டில் சமத்துவம் எப்போது மலரும் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

News December 16, 2024

விஜய் சேதுபதி மீது போலீசில் புகார்

image

சர்ச்சை பேச்சை ஒளிபரப்பிய பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதற்காக விஜய் சேதுபதி மீது டைல்ஸ் நிறுவனம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி டிஎஸ்பியிடம் ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள், தாெழிலாளர்கள் புகார் அளித்துள்ளனர். அதில், ஆத்தங்குடி டைல்ஸ் குறித்து நடிகர் தீபக் தவறாக பேசியுள்ளதாகவும், இதை ஒளிபரப்பிய டிவி, தொகுப்பாளர் மீது வழக்குப்பதியுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

error: Content is protected !!