news

News December 16, 2024

இரவு 1 மணி இந்த 4 மாவட்டங்களில் மழை

image

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று நள்ளிரவு 1 மணி வரை நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் நாளை மிக கனமழை பெய்யும் என IMD எச்சரித்துள்ளது.

News December 16, 2024

LICஇல் உரிமை கோரப்படாமல் கிடக்கும் ரூ.881 கோடி

image

LICஇல் உரிமை கோரப்படாமல் ரூ.881 கோடி பணம் கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் செளத்ரி தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 2023-24ஆம் நிதியாண்டில் 3,72,282 கணக்குகளில் காலம் முடிந்தபிறகும் அதில் இருக்கும் ரூ.880.93 கோடி பணம் உரிமை கோரப்படாமல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 2022-23இல் ரூ.815 கோடி உரிமை கோரப்படாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 16, 2024

குருபெயர்ச்சி 2025: அடித்து நொறுக்க போகும் 3 ராசிகள்!

image

குருபெயர்ச்சியால் 3 ராசிக்காரர்கள் தொழிலில் கொடிகட்டி பறக்க போகின்றனர். 1) ரிஷபம்: திடீர் பண வரவால் வாழ்க்கை மாறும். அலுவலகங்களில் நிலவி வந்த தொல்லைகள் நீங்கும். 2) துலாம்: வேலையில் முன்னேற்றம் உண்டு. திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடக்கும். மனநிம்மதி கிடைக்கும். 3) கும்பம்: குழந்தை பாக்கியம் உண்டு. வேலையிலும், தொழிலிலும் முன்னேற்றம் காண்பீர்கள். ஏழரை சனி நடப்பதால் முதலீட்டில் கவனம் தேவை.

News December 16, 2024

டங்ஸ்டன் சுரங்கம்: தொடங்கியது போராட்டம்!

image

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அதற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலம் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. இந்நிலையில், டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்யும் வரை மலை மீது ஏறி போராட்டம் நடத்தப் போவதாக அரிட்டாபட்டி கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

News December 16, 2024

CSK முன்னாள் வீரர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

image

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அன்கீத் ராஜ்புத், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகளில் விளையாடியுள்ளார். வேகப்பந்து வீச்சாளரான அவர் 29 போட்டிகளில், 24 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். அண்மையில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் அவரை ஏலம் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த அன்கீத், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.

News December 16, 2024

MGNREGA வேலை ஊதியம் உயருகிறது?

image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட ஊதியத்தை மத்திய அரசு விரைவில் உயர்த்தக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த திட்டத்தின்கீழ் பணிபுரியும் நபர்களுக்கு பல மாநிலங்களில் நாளொன்றுக்கு ரூ.200 ஊதியம் அளிக்கப்படுகிறது. இதை உயர்த்த வேண்டுமென்றும், வேலை நாளை 100இல் இருந்து 150ஆக அதிகரிக்க வேண்டுமென்றும் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறைக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்திருந்தது.

News December 16, 2024

காலை உணவுத் திட்டத்தால் நினைவாற்றல் அதிகரித்துள்ளது

image

பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவுத் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இத்திட்டம் அறிமுகமாகி கிட்டதட்ட ஒன்றரை வருடம் ஆகிவிட்ட நிலையில், இதுதொடர்பாக மாநில திட்டக்குழு சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில், காலை உணவுத் திட்டத்தால் 90% பிள்ளைகளின் நினைவாற்றல் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், பிள்ளைகளுக்கு கற்றல் ஆர்வம் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மாநில திட்டக்குழு கூறியுள்ளது.

News December 16, 2024

தலைமுடிக்கு இரவில் எண்ணெய் வைக்கலாமா?

image

பெண்கள் பலரும் இரவில் தலைமுடிக்கு எண்ணெய் வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், டாக்டர்கள் அதை தவிர்க்க சொல்கின்றனர். ஏனெனில் இதனால் பூஞ்சைத் தொற்று, பொடுகு ஏற்பட வாய்ப்புண்டு. குளிப்பதற்கு 1- 2 மணிநேரத்துக்கு முன் எண்ணெய் வைப்பதே சிறந்தது. முடியின் வேர்க்கால் வரை பரவுமாறு தேய்க்க வேண்டும். எண்ணெய் இளஞ்சூட்டில் இருந்தால், எளிதாக முடிக்குள் ஊடுருவும். முடியை அலச மைல்டான ஷாம்பு பயன்படுத்தலாம்.

News December 16, 2024

AI-ஆல் வேலை பறிபோகுமா? அமைச்சர் PTR பதில்

image

AI வளர்ச்சி ஊழியர்களின் வேலையை பறிக்கும் எனக் கருதப்படுகிறது. இது குறித்து பேசிய IT அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன், AI-க்கு தகவல்களை பதிவேற்றம் செய்யவே பல ஆண்டுகள் தேவைப்படும். அப்படி இருக்கையில் வேலை வாய்ப்புகள் எப்படி குறையும்? அதிகரிக்கவே செய்யும். தமிழகத்தில் திறன்வாய்ந்த ஊழியர்கள் அதிகமெனவும், துபாய் போலவே இங்கும் AI மாடல்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

News December 16, 2024

மீனவர்களை விடுவிக்க CM ஸ்டாலின் கோரிக்கை

image

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்கேவிடம், தமிழக மீனவர்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதை CM ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும், இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்குமாறும், திசநாயக்கேவை வலியுறுத்தியுள்ளார். இரு நாடுகளிடையே இணக்கமான எதிர்காலத்தை வளர்த்தெடுக்க, இது நல்ல தொடக்கமாக அமையும் எனவும் TN CM நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!