India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காயம் காரணமாக மருத்துவமனைக்கு சென்ற கேப்டன் பும்ரா மைதானத்திற்கு திரும்பியுள்ளார். இது, இந்திய அணிக்கு சாதமானதாக பார்க்கப்படுகிறது. எதற்காக வெளியே சென்றார்? என்ன காயம் ஏற்பட்டது போன்ற தகவல்களை பிசிசிஐ வெளியிடவில்லை. இருப்பினும், மொத்த தொடரையும் பும்ராவே தாங்கிச் செல்வதால் அவர் இல்லாமல் ஜெயிப்பது கடினம் என்ற நிலை இருந்தது. தற்போது அவர் திரும்பியிருப்பதால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
மணிப்பூரில் நேற்று கங்போக்பி மாவட்ட போலீஸ் நிலையத்தின் மீது குக்கிகள் நடத்திய <<15059253>>தாக்குதலில்<<>> எஸ்பி மனோஜ் பிரபாகர் உள்பட போலீஸார் காயமடைந்தனர். இந்நிலையில், நகரத் தெருக்களில் நவீன ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் அச்சமின்றி நடமாடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதை கண்டித்து ‘#IndiaUnderAttack’ என்ற ஹேஷ்டேக்கில், இது இந்தியா தானா என்று கேள்வி எழுப்புகின்றனர் நெட்டிசன்கள். மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?
அண்ணா பல்கலை. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து சிக்கிய ஞானசேகரன் குறித்து திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மாணவி மட்டுமல்லாமல் காதலிக்கும் பல பெண்களை குறிவைத்து மிரட்டி வன்கொடுமை செய்துள்ளான் ஞானசேகரன். அதோடு, பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளையடிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கின்றான். அவனை கைது செய்ய போலீஸ் தேடிவந்த நிலையில்தான் அண்ணா யுனிவ் விவகாரத்தில் கைதாகியிருக்கிறான்.
இந்தியாவின் முன்னணி அணு அறிவியலாளர் இரா.சிதம்பரம் என்கிற ராஜகோபாலன் சிதம்பரம் (88) மும்பையில் காலமானார். சென்னையில் பிறந்த இவர், பொக்ரான் அணுகுண்டு சோதனையில் அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றினார். மத்திய அரசின் அறிவியல் அறிவுரைஞராக பணியாற்றி வந்த அவர், பாபா அணு ஆய்வு மையத்தின் இயக்குநராகாவும் இருந்துள்ளார். இவருக்கு மத்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கியுள்ளது.
அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் 5 முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* தனி நபருக்கான வருமான வரி குறைப்பு
* பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு
* இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகப்படுத்துதல்
* அனைத்து மக்களுக்கான உணவுத் தேவையை பூர்த்தி செய்தல்
* சீனாவால் பாதிக்கப்படும் இந்திய ஏற்றுமதியை சரி செய்தல்
சாத்தூர் அருகே அப்பைய நாயக்கன்பட்டியில் செயல்படும் சாய்நாத் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் பணிபுரியும் இந்த பட்டாசு ஆலையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் சிக்கியதாகவும், இதில் 4 பேரது சடலங்களை மீட்புப் படையினர் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக நடைபெறும் வழக்கில் அதிபர் (தேர்வு) டிரம்புக்கு எதிராக வரும் 10ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. 2016ஆம் ஆண்டு தேர்தல் நிதியில் இருந்து டிரம்ப் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக நடந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் அதிபராக தேர்வாகியிருப்பதால் சிறை தண்டனை விதிக்கப்படாது என்று தெரிகிறது.
சீனாவில் பரவும் HMPV வைரசால் ஆபத்து ஏதும் இல்லை என்று மருத்துவத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், இதேபோல 2020ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிப்பில்லை என்று அரசு கூறிய X போஸ்ட் வைரலாகி வருகிறது. ஆகையால், அலட்சியமாக இருக்காமல் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுகிறது. இன்னொரு லாக்-டவுனை நாடு தாங்காது இல்லையா?
காயம் காரணமாக கேப்டன் பும்ரா மைதானத்தை விட்டு வெளியேறியிருக்கிறார். ஒருவேளை அவரால் மீண்டும் வர முடியாவிட்டால் சப்ஸ்டிட்யூட் பிளேயரை வைத்து விளையாடலாம். ஆனால், சப்ஸ்டிட்யூட் வீரர்கள் பேட்டிங், பவுலிங் செய்ய முடியாது. பும்ரா திரும்பி வந்தால், அவர் எவ்வளவு மணி நேரம் வெளியே இருந்தாரோ, அவ்வளவு நேரத்திற்கு பவுலிங் போட முடியாது. இதனால், இந்திய அணி பாதிக்கப்படும்.
சென்னை அண்ணா யுனிவர்சிட்டிக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சுமார் 2 மணிநேர தீவிர சோதனைக்குப் பிறகு, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில், அண்மையில் மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.