India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் நடப்பதால், இது ஆட்சியை எடை போடும் தேர்தலாக இருக்கும். அதனால், இப்போதே தேர்தல் பணிகளை DMK முடுக்கியுள்ளது. அதேநேரம், இடைத்தேர்தலில் தவெக போட்டியிட வேண்டும் என முன்னணி தலைவர்கள் விஜய்யிடம் வலியுறுத்தியுள்ளனர். இதனால், தொகுதியின் செல்வாக்கு குறித்து அறிய அவசர சர்வே எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளாராம்.
தமிழ் திரையுலகில் இளையராஜாவுக்கு இருக்கும் ரசிகர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். அவருடைய இசையில் லயித்துக் கொண்டே அவர் பேசும் விஷயங்களை தொடந்து விமர்சித்துக் கொண்டிருப்பர். அந்த வகையில், நேற்று ஆண்டாள் கோயிலில் அவருக்கு நடந்த அநீதியை முதலில் தட்டிக் கேட்டவர்கள் அவர்கள்தான். ஆனால், இளையராஜாவே அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை என்று சொன்ன பின்பு வழக்கம்போல அவரை விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.
மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும். குறிப்பாக, மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த அடுத்த 100 நாட்களுக்குள் நாடு முழுவதும் 89,194 நகர்ப்புற உள்ளாட்சி இடங்களுக்கும், 31 லட்சத்து 89 ஆயிரம் கிராமப்புற உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும். இது சாத்தியமா? கமெண்ட் பண்ணுங்க..
இந்தாண்டு இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ஹீரோக்கள் விஜய் சேதுபதி, அல்லு அர்ஜூன், விக்ரம், பிரித்வி ராஜ் தான். படத்தின் கதை வலுவாக இருந்தாலும், அதை நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களை கவரவில்லை என்றால் அவர்களின் உழைப்பு அனைத்தும் வீண் தான். ஆனால் படத்தின் கதாபாத்திரமாகவே வாழ்ந்து நம் அனைவரையும் வியக்க வைத்த இவர்களில் 2024 சிறந்த நடிகருக்கான தேசிய விருது யாருக்கு வழங்கலாம்? கமெண்ட்ல சொல்லுங்க.
பிரிஸ்பேனில் நடைபெறும் இந்தியா – ஆஸி., இடையேயான BGT போட்டியில் கே.எல்.ராகுல் நூலிழையில் சதத்தை தவறவிட்டார். முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் அனைவரும் பேட்டிங்கில் சொதப்பினாலும், தன் நிதான ஆட்டத்தால் இந்திய அணியை காப்பாற்றிய ராகுல் 84 ரன்களில் அவுட் ஆனார். தற்போது வரை இந்திய அணி 158/6 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் தவிர்க்க 88 ரன்கள் தேவை.
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதன் தாக்கத்தால், நாளை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள், விழுப்புரம், கடலூரில் மிக கனமழை பெய்யும் என்று IMD தெரிவித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கனமழைக்கும் வாய்ப்புண்டு.
அபுதாபியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதி பாரம்பரிய உடையில் கலந்துக் கொண்டு கவனம் ஈர்த்தனர். தேசிய எண்ணெய் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இந்த மாரத்தானில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அந்த வகையில், நாகர்கோவிலைச் சேர்ந்த லிடியா ஸ்டாலின் – விபின் தாஸ் தம்பதி வேட்டி, சட்டை மற்றும் பாவாடை தாவணி அணிந்து 42.2 கி.மீ. தொலைவை 4 மணி நேரம் ஓடி நிறைவு செய்தனர்.
ஆந்திராவின் பல்நாடு அருகே இறந்துபோன தந்தையின் அரசு வேலை, பென்சனுக்காக அண்ணன், தம்பியை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். வருவாய்த்துறையில் பணிபுரிந்த போலராஜு, உடல்நலக்குறைவால் கடந்த மாதம் காலமான நிலையில், அவரது வாரிசு ஒருவருக்கு பணி வழங்க அரசு திட்டமிட்டிருந்தது. இதனால் போட்டியிலிருந்த சகோதரர்களை கொலை செய்து ரூட்டை கிளியர் செய்ய நினைத்த கிருஷ்ணவேணி தற்போது ஜெயிலில் கம்பி எண்ணுகிறார்.
மீண்டும் பயன்படுத்தக் கூடிய Plastic பாட்டிலில், பால் விற்பனை செய்வது குறித்து ஆய்வு செய்ய ஆவின் நிறுவனத்திற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதன் விசாரணையில், Plastic Bottleல் விற்பனை செய்தால் செலவு அதிகரிக்கும் எனவும், தனியார் நிறுவனங்களே Plastic பைகளில் தான் விற்பதாகவும் அரசு தரப்பு வாதிட்டது. இதனை ஏற்க மறுத்த தீர்ப்பாயம், ஆவின் இதை முன் மாதிரியாக செய்யலாம் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தது.
செந்தில் பாலாஜி ஜாமினுக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அவரது ஜாமினை மறு ஆய்வு செய்யுமாறு சீனிவாசன் என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை 2 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்கிறது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் மோசடி செய்த வழக்கில், செந்தில் பாலாஜி 2023 ஜூன் 14ல் கைது செய்யப்பட்டார். பின் 2024 செப்.26ல் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
Sorry, no posts matched your criteria.