news

News December 17, 2024

BGT: 3வது போட்டியை டிரா செய்யுமா இந்தியா?

image

ஆஸி., அணிக்கு எதிரான 3வது போட்டியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆட்டம் டிரா ஆகுமா என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இப்போட்டியில் இதுவரை 4 நாள்கள் கடந்துள்ள நிலையில், இரு அணிகளும் முதல் இன்னிங்ஸ் மட்டுமே விளையாடியுள்ளனர். இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமுள்ளதால் follow-on தவிர்த்து போட்டியை இந்திய அணி டிரா செய்யுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

News December 17, 2024

இரட்டை இலை சின்னம்: டெல்லி ஐகோர்ட் முக்கிய உத்தரவு

image

இபிஎஸ் தரப்புக்கு ‘இரட்டை இலை’ சின்னம் ஒதுக்கியதற்கு எதிரான புகழேந்தியின் மனுவை விரைவாக விசாரித்துத் தீர்வு வழங்குமாறு ECI-க்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராகப் புகழேந்தி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி மனோஜ் ஜெயின் தள்ளுபடி செய்தார்.

News December 17, 2024

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா மக்களவையில் அறிமுகம்

image

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் அறிமுகம் செய்தார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளிக்கு இடையே பார்லிமென்ட்டில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியலமைப்பை சிறுமைப்படுத்துவது போல் இருப்பதால் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி கூறியுள்ளார்.

News December 17, 2024

உலக செஸ் சாம்பியன்ஷிப் காய்களை செதுக்கிய இந்தியர்

image

இளம் உலக செஸ் சாம்பியன் குகேஷ் தான் இன்று டாக் ஆஃப்த டவுண். ஆனால் இறுதிப்போட்டியில் பயன்படுத்தப்பட்ட செஸ் போட்டை உருவாகியது ஒரு இந்தியர் என்பது தெரியுமா? ஆம். அமிர்தசரஸில் 34 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவமுள்ள ஒரு தலைசிறந்த சிற்பியான பல்ஜித் சிங் தான் அது. மேலும் உலக செஸ் சாம்பியன்ஷிப் செட்டுகளுக்கான knight(குதிரை) செதுக்கும் உலகின் தலைசிறந்த 2 கைவினைஞர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 17, 2024

அமைச்சர் பொன்முடியிடம் ED விசாரணை

image

கனிமவள முறைகேடு புகார் தொடர்பான வழக்கு விசாரணைக்கு சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜராகியுள்ளார். 2006ம் ஆண்டு அமைச்சராக இருந்தபோது சட்டவிரோத சுரங்கங்கள் மூலம் அரசுக்கு ₹28 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் அவர் மீது ED வழக்கு பதிவு செய்திருந்தது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக தற்போது அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

News December 17, 2024

பாக்ஸராக களம் இறங்கும் அருள்நிதி

image

முத்தையா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அருள்நிதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவர் பாக்ஸராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘டிமான்டி காலனி 2’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, செல்வகுமார் இயக்கத்திலும், கணேஷ் விநாயகம் இயக்கத்திலும் அவர் பிசியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News December 17, 2024

‘தெனாலி’ பாணியில் இபிஎஸ்ஸை விளாசிய K.N.நேரு

image

இபிஎஸ்-க்கு, மோடி என்றால் பயம், ED ரெய்டு பயம், சின்னம் போய்விடுமோ என்ற பயம் என ‘தெனாலி’ பட பாணியில் மினிஸ்டர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார். ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த உதய் மின் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களுக்கு பயம் காரணமாகவே இபிஎஸ் ஆதரவு அளித்தாகக் குறிப்பிட்டுள்ள அவர், விவசாயி எனக் கூறிக்கொண்டு 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு கொடுத்த விஷவாயு இபிஎஸ் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

News December 17, 2024

இளைஞர்களை எச்சரித்த RBI

image

Buy Now Pay Later திட்டங்கள், கிரெடிட் கார்டு ஆகியவை இளைஞர்களின் சேமிப்பைக் குறைப்பதாக RBI துணை கவர்னர் மைக்கேல் தேபப்ரதா பத்ரா தெரிவித்துள்ளார். இந்தியாவில் நுகர்வு எளிதாக இருப்பதால் பணவியல் கொள்கைகளை உருவாக்குவதில் புதிய சவால்களை எதிர்கொள்வதாக கூறினார். வீடுகளில் அதிகரிக்கும் கடன், தனிமனிதனின் நிதி அழுத்தத்தை அதிகரிக்கும் என எச்சரித்த அவர், பணம் சார்ந்த கல்வியறிவு அவசியம் என்றார்.

News December 17, 2024

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

image

கரன்சி சந்தையில் இன்று காலை ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரு பைசா குறைந்து ₹84.92க்கு வர்த்தகம் ஆனது. டாலருக்கு மாற்றான கரன்சியை உருவாக்கக் கூடாது என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததில் இருந்து ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. மேலும், அன்னிய நாட்டு பணம் இந்தியாவை விட்டு வெளியேறுவதும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

News December 17, 2024

நக்கீரன் கோபாலுக்கு பிடி வாரண்ட்

image

நித்தியானந்தா – ரஞ்சிதா வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி கோடிக் கணக்கில் பணம் கேட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. ஆசிரமத்தில் நித்தியானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ 2010ஆம் ஆண்டு வெளியானது. அப்போது, இது தொடர்பாக கோபால் உள்ளிட்ட 8 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்திருந்தது.

error: Content is protected !!