India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் KTCC மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று கணித்துள்ளது. இதனால், தாழ்வான பகுதியைச் சேர்ந்தவர்கள் கவனமாக இருக்குமாறு தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக TN எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். கேரள அரசுடன் உறவாடிக் கொண்டிருக்கும் திமுக அரசு இதனைக் கண்டும் காணாததுபோல் இருப்பதோடு, குப்பை கொட்டும் இடமாக அனுமதித்துள்ளதாகவும் சாடியுள்ளார். TN அரசு இதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இனியும் இதே நிகழ்வு தொடர்ந்தால் குப்பை லாரிகளுடன், தான் கேரளா செல்ல உள்ளதாக எச்சரித்துள்ளார்.
இந்திய பங்குச்சந்தையில் மும்பை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 1,015 புள்ளிகள் சரிந்து 80,732 என்ற Intraday low-ஐ தொட்டது. ஃபைனான்ஸ், மெட்டல், FMCG, IT உள்ளிட்ட துறை சார் நிறுவனங்களின் பங்குகளும் வெகுவாக சரிந்துள்ளன. இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் சரிந்ததும், FII சந்தையில் அதிகளவில் பங்கேற்காததும் இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக TN சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. அத்தொகுதி MLA EVKS இளங்கோவன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தால், தொகுதி காலியானதாக TN சட்டமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது. இதையடுத்து, 6 மாதத்தில் அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். 2025 ஜன., பிப்., மாதத்தில் நடைபெற உள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலுடன் ஈரோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் நாளை (18.12.2024) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று MET. இம்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறவுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்கு எதிராக அடுத்த இரண்டு BGT போட்டியில் இருந்து ஆஸி., வீரர் ஹேசல்வுட் விலகியுள்ளார். இன்று 4ஆம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது, காலில் ஏற்பட்ட காயத்தால் விலகியுள்ளார். தற்போது தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் என்ற நிலையில், அவரின் விலகல் ஆஸி., பெருமை பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பான்மை இல்லாத பாஜக அரசு எப்படி இந்த மசோதாவை அறிமுகம் செய்ய முடியும் என திமுகவும், தனிநபர் விருப்பத்திற்காகக் கொண்டுவரப்படுவதாக திரிணாமுல் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் NDA கூட்டணியில் உள்ள TDP நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளது.
அதிமுக அழியாமல் இருக்க பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்று டிடிவி தினகரன் அழைப்பு விடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் அதிமுக பலமாக இருக்க வேண்டும் என்றே பாஜக நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பின் அவர்களுக்கு கூட்டணியில் இருந்து வரும் முதல் அழைப்பு இதுவாகும். செவி சாய்ப்பாரா EPS?
பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் மிருணாள் தாக்கூர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ ஆகிய படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் இப்படத்தில் கொரியன் சூப்பர் ஸ்டார் மா டோங் சியோக் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சைப் அலிகான், கரீனா கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் 8 மொழிகளில் வெளியாகவுள்ளது.
கஞ்சா வைத்திருந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்திருக்கிறது மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம். தேனியில் தங்கியிருந்தபோது, தடை செய்யப்பட்ட கஞ்சாவை அவர் வைத்திருந்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன் விசாரணைக்கு சவுக்கு சங்கர் தொடர்ந்து ஆஜராகாமல் தவிர்த்து வந்ததால், தற்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.