India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய தேர்வு முகமை (NTA) இனி உயர்க்கல்வி நுழைவுத் தேர்வுகளை மட்டுமே நடத்தும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “2025 முதல் எந்த அரசு பணிக்கான தேர்வுகளையும் NTA நடத்தாது. எதிர்காலத்தில் கணினி & தொழில்நுட்பம் சார்ந்து நுழைவுத் தேர்வுகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. 2025இல் NTA மறுசீரமைக்கப்படும். குறைந்தது 10 புதிய பதவிகள் உருவாக்கப்படும்” என்றார்.
விஷால் இயக்கி நடிக்கும் ‘துப்பறிவாளன் 2’ தொடர்ந்து தாமதமாகி வரும் நிலையில், ‘மார்க் ஆண்டனி 2′-வில் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘குட் பேட் அக்லி’ படத்தை முடித்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. கடந்த 2023 செப்டம்பரில் வெளியான ‘மார்க் ஆண்டனி’, ₹100 கோடியை வசூலித்தது. இதையடுத்து 2ஆம் பாகம் எடுக்கப்படும் என படக்குழு அப்போதே அறிவித்திருந்தது.
சென்னையில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த நிலையில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால், கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. ஏற்கனவே பெண் போலீசாரை ஆபாசமாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை ஐகோர்ட் அண்மையில் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர். இது தமிழக அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட ஜாமினுக்கு எதிராக தெலங்கானா போலீஸ் SCஇல் மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த 4ஆம் தேதி புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் அல்லு அர்ஜுன், தியேட்டர் ஓனர் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. கடந்த 13ஆம் தேதி கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத் HC ஜாமின் வழங்கியிருந்தது.
மார்கழி மாத பூஜைக்கு தேவை அதிகரித்திருப்பதாலும், பனியின் காரணமாக வரத்து குறைந்திருப்பதாலும் பூக்கள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. கோவையில் மல்லிப்பூ கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.2,000 வரை அதிகரித்துள்ளது. முல்லைப்பூ விலை ரூ.1800ஆகவும், அரளி ரூ.600ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னையில் மல்லிகைப்பூ ரூ.2,500ஆகவும், ஜாதிமல்லி மற்றும் முல்லை ரூ.800ஆகவும் அதிகரித்துள்ளது.
முட்டை பொதுவாக நீள் வட்டம் (Oval) வடிவில் தான் இருக்கும். ஆனால், வட்ட வடிவிலான முட்டையை நீங்கள் பார்த்தது உண்டா? கோடியில் ஒரு முட்டைதான் அப்படி இருக்கும். அத்தகைய அரிய முட்டை, ஸ்காட்லாந்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பெண்ணுக்கு கிடைத்துள்ளது. அதை Ed Pownall என்பவருக்கு அப்பெண்மணி விற்க, அவர் அதை Luventas Foundationக்கு நன்கொடையாக அளித்துள்ளார். அது ₹21,520க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
‘புஷ்பா 2’ திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 9ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் உலகளவில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வெறும் 11 நாள்களில் ₹1,400 கோடி வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. விரைவில் ₹2,000 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு பஸ்களில் கிரேட் 2 கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான போலீஸார் இலவசமாக பயணிக்கலாம் என்று மாநில உள்துறை அறிவித்துள்ளது. போலீஸார் இலவசமாக பயணிப்பது தொடர்பாக போக்குவரத்து, காவல்துறை இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இந்நிலையில் உள்துறை, போலீசுக்கு இலவச பஸ் பாஸ் அளிக்கவும், அதைவைத்து வருவாய் கோட்டத்தில் டவுன், புறநகர் பஸ்களில் இலவசமாக செல்லலாம் எனக் கூறியுள்ளது.
MP அரசின் சிறைத்துறை பணிகளுக்கு நடந்த தேர்வில் 100க்கு 101.66 மதிப்பெண் பெற்ற நபரால் இந்தூரில் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த 13ஆம் தேதி வெளியான தேர்வு முடிவில் மோசடி நடந்துள்ளதாகத் தேர்வர்கள், எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ‘process of normalisation’ சிஸ்டமில் அதிக மதிப்பெண் வருவதும், பூஜ்ஜியத்தை விடக் குறைவாகப் பெறுவதும் இயல்பு என தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.