India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஒடிசாவை வீழ்த்தி கோவா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் 2-1 என்ற கோல் கணக்கில் கோவா முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அந்த அணி மேலும் 2 கோல்களை அடித்து அசத்தியது. இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் கோவா அணி வெற்றி பெற்றது.
*முதலாளித்துவத்தின் ஒற்றுமையை, பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையால் மட்டுமே அசைக்க முடியும். *மன வலிக்கு ஒரே ஒரு சிறந்த மாற்று மருந்து உள்ளது, அது உடல் வலி. *மக்களை அவர்களின் வரலாற்றிலிருந்து விலக்கிவையுங்கள், அவர்கள் எளிதில் கட்டுப்படுவார்கள். *நாத்திகம் தொடங்கும் இடத்தில் கம்யூனிசம் தொடங்குகிறது. *எனக்கு பணத்தைப் பிடிக்காது, நாங்கள் போராடுவதற்கு பணம் தான் காரணம்.
‘இந்தியன் 3’ பஞ்சாயத்தால், ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு தமிழ்நாட்டில் தடை விதிக்க, லைகா நிறுவனம் சங்கத்தை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் லைகா-ஷங்கர் இடையே உள்ள பிரச்னையை, தனது படத்தின் மீது திணிப்பதாக, ‘கேம் சேஞ்சர்’ தயாரிப்பாளர் தில் ராஜு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 3ஆவது நபரான தன்னை இதில் இழுக்கக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை ▶குறள் எண்: 139 ▶குறள்: ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல். ▶பொருள்: தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.
அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோர் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் 2 நாள்களாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இந்நிலையில், அமைச்சரின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பேசுப் பொருளாக மாறியுள்ளது. டெல்லி பயணத்திற்கான காரணம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
குஜராத்தில் 10 வயது சிறுமி, பக்கத்து கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவனுடன் இன்ஸ்டாவில் ரகசியமாக பழகி வந்துள்ளார். திடீரென சிறுமி மாயமாக, போலீஸ் விசாரணையில், சிறுமியை தன் வீட்டுக்கு கடத்திச் சென்ற சிறுவன், பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரிய வந்தது. சிறுமியை மீட்ட போலீஸ், சிறுவனை கைது செய்து சீர்த்திருத்த இல்லத்தில் சேர்த்தது. பெற்றோர்களே, குழந்தைகள் கைகளில் போன் கொடுக்கும் முன் யோசியுங்கள்.
இந்த BGT தொடரில் அதிக ஓவர்களை வீசியதே, பும்ரா இன்று ஹாஸ்பிடலில் அட்மிட்டாக காரணம் எனக் கூறப்படுகிறது. இதில் அவர் 151.2 ஓவர்களை வீசியுள்ளார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டே, ரோஹித் கேப்டனாக இருந்தபோது, அவருக்கு குறைவான ஓவர்களை வீச வாய்ப்பளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், பும்ராவை அவர் ஓரங்கட்டியதாக விமர்சனம் எழுந்தது. தற்போது ரோஹித்தின் கணிப்பு உண்மையாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
▶ஜனவரி 5 ▶மார்கழி- 21 ▶கிழமை: ஞாயிறு ▶ நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM, 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 01:30 PM – 02:30 PM ▶ராகு காலம்: 04:00 PM – 06:30 PM ▶எமகண்டம்: 12:00 PM – 01:30 PM ▶குளிகை: 03:00 AM – 04:30 AM ▶திதி: சஷ்டி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶நட்சத்திரம்: பூரட்டாதி ▶சந்திராஷ்டமம்: ஆயில்யம் மகம்
மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராவார். அதனால் தனது தலைவனுக்கு கோயில் கட்டி, அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி வந்துள்ளார். இதை கேள்விப்பட்ட ரஜினி, உடனே தனது ரசிகரையும், அவரது குடும்பத்தினரையும் சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அனைவரிடமும் பேசி மகிழ்ந்து, புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
இன்று (ஜன. 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
Sorry, no posts matched your criteria.