India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லேசாக உயர்த்தியுள்ளன. சென்னையில் இன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 23 காசுகள் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.03க்கு விற்கப்படுகிறது. டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 22 காசுகள் உயர்த்தியதையடுத்து, ரூ.99.61க்கு விற்கப்படுகிறது. உங்கள் ஊரில் பெட்ரோல், டீசல் என்ன விலைக்கு விற்கப்படுகிறது?
திருச்சியில் நுனி நாக்கை துண்டித்து டாட்டூ குத்திய வழக்கில் கைதான ஏலியன் பாய் குறித்த போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. உடலின் அந்தரங்க பாகங்களில் டாட்டூ போட ₹30,000 முதல் ₹50,000 வரை வசூலித்து மாதத்திற்கு சுமார் ₹3 லட்சம் வரை சம்பாதித்துள்ளார். இதுவரை 3 பேருக்கு நாக்கு அறுவை சிகிச்சை செய்து டாட்டூ போட்டதும் தெரியவந்துள்ளது.
பார்லிமென்ட்டுக்கு பிரியங்கா காந்தி எடுத்துவரும் ஹேண்ட் பேக்குகள் விவாத பொருளாகின்றன. ஆம், நேற்று பாலஸ்தீனம் எனப் பதித்த பையை எடுத்துவந்தவர், இன்று Stand Minorities of Bangladesh என அச்சிடப்பட்ட பையை பங்களாதேஷில் சிறுபான்மையினரான ஹிந்து. கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எதிர்க்கும் விதமாக எடுத்து வந்துள்ளார். ‘பாலஸ்தீனம்’ பையை எதிர்த்த பாஜக எம்பிக்கள், இதையும் எதிர்ப்பார்களா?
அரசுப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் A.I. பாடங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆய்வுகள் தற்போது நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார். A.I. தொழில்நுட்பத்துக்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதிகரித்துள்ளது. அந்தத் தொழில்நுட்பத்தை அடுத்தடுத்து முன்னணி நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளில் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால் வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். டெல்லியில் இது தொடர்பாக பேசிய அவர், நிபுணர் குழு அறிக்கையின் படி, நீட் தேர்வில் மாற்றங்கள் செய்யப்பட்டு, AI உதவியுடன் நவீன முறையில் நடத்த திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார். NTA நடத்தும் நீட் தேர்வு ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியது கவனிக்கத்தக்கது.
நாடாளுமன்றக்கூட்டுக் குழு என்பது நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்படும் தற்காலிக குழுவாகும். அதிகபட்சமாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உட்பட15 பேர் JPCஇல் இடம்பெறுவர். அமைச்சரவையால் முன்மொழியப்பட்ட மசோதாவை ஆய்வு செய்து, திருத்தப் பரிந்துரைகளை இக்குழு வழங்கும். இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட ‘ONOE’ மசோதாவை JPC-க்கு அனுப்பத் தயார் என அமித்ஷா அறிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு இன்று நடந்த மக்களவையே முன்மாதிரி என சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார். மசோதாவிற்கு வாக்களிக்கும் போது, பாதி பேரின் இருக்கையில் மட்டுமே EVM வேலை செய்ததாகவும், மீதி பேர் வாக்குச்சீட்டுலேயே வாக்களித்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஒரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு, நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்தலை நடத்தப்போவதாக கூறுவதாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. 128 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் மீண்டும் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் பழுதுபார்க்கும் பணி தாமதமானதால், பயணிகளை வேறு விமானங்கள் மூலம் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் 3 ஆண்டு பதவிக்காலம் ஜூலையுடன் முடிந்தது. இதையடுத்து புதிதாக ஒருவர் அந்தப் பதவியில் நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது. எனினும், அண்ணாமலை வெளிநாடு செல்ல, ஒருங்கிணைப்புக் குழு மட்டும் நியமிக்கப்பட்டது. இந்நிலையில், அண்மையில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் அண்ணாமலையை மீண்டும் தலைவராக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று நடந்த பயங்கர வெடிகுண்டுத் தாக்குதலில், அந்நாட்டின் கதிர்வீச்சு, ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் பாதுகாப்பு படைத்தலைவர் இகோர் கிரிலோவ் பலியானார். ஸ்கூட்டரில் வைக்கப்பட்ட குண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இதில் அவர் உதவியாளர் ஒருவரும் உயிரிழந்தார். இந்த தாக்குதலின் பின்னணியில் உக்ரைனின் SBU உளவு அமைப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.