India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் இன்றோடு நிறைவடைகிறது. இதுவரை இதற்கான தேர்தல் அறிவிப்பு வெளிவராததால், அரசுப் பணிகளை ஊராட்சி மன்ற செயலாளர்கள்தான் இனி கவனிப்பார்கள். ஊரகப் பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு என்று மக்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு எந்தவொரு முயற்சியையும் அரசு செய்யவில்லை.
BGT தொடரின் கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 162 ரன்கள் இலக்குடன் விளையாடி வரும் அவ்வணியின் விக்கெட்டுகளை அனைத்தையும் வீழ்த்தினால் இந்தியா வெற்றி பெறும். இதில், கேப்டன் பும்ரா விளையாடாததால் சோர்வாய் இருந்த ரசிகர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் பும்ரா பந்துவீச வராததால் நடப்பு போட்டி களையிழந்துள்ளது. மொத்த தொடரில் 30க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் பும்ராவால் இப்போட்டியில் வெற்றி சாத்தியம் என்று கருதப்பட்டது. ஆனால் அவருக்கு முதுகு பிடிப்பு காரணமாக முதல் ஓவர்களை சிராஜும் கிருஷ்ணாவும் வீசினர். பும்ரா எப்போது மீண்டும் பந்துவீச வருவார் என்று தெரியாததால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
உணவு அல்லாத பொருட்களுக்கு இந்தியர்கள் அதிகம் செலவிட தொடங்கியுள்ளதாக SBI அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 12 ஆண்டுகளில் கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி நுகர்வு வழக்கத்தில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. 2011-12 நிதி ஆண்டில் 52.90%ஆக இருந்து உணவுக்கான செலவு 2023-24இல் 47.04%ஆக குறைந்துள்ளது. கிராமத்தில் உணவுக்கான செலவு 5.86% குறைந்த நிலையில், நகரங்களில் 2.94% குறைந்துள்ளது.
BGT தொடரின் கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்களும் ஆஸ்திரேலியா 181 ரன்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய இந்திய அணி 157 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து, 162 என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியிருக்கிறது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 8 மாதங்களில் இல்லாத அளவில் சரிந்துள்ளது. இது டிச. 27ஆம் தேதி நிறைவடைந்த வாரத்தில் $4.11 பில்லியன் குறைந்து, $640.27 பில்லியனாக உள்ளது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதைத் தடுத்து நிறுத்தும் வகையில் RBI டாலரை விற்று வருகிறது. அதேநேரம், தங்கத்தை தொடர்ந்து வாங்குவதால், அதன் கையிருப்பு $541 மில்லியன் உயர்ந்து $66.26 பில்லியனாக இருக்கிறது.
பாஜக கூட்டணியில் நிதிஷ்குமார் நீடிப்பது சந்தேகம் என உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பிஹாரில் கூட்டணிக் கட்சியை பாஜக முதுகில் குத்தியுள்ளதாகவும், ஐக்கிய ஜனதா தளத்தின் 10 எம்.பி.க்களை வேட்டையாடும் வேலையைத் தொடங்கியுள்ளதாகவும் கூறினார். இதனால் கலக்கத்தில் இருக்கும் நிதிஷ், அக்கூட்டணியில் தொடர்வது சந்தேகம்தான் என்றும் தெரிவித்தார்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரமும், 2 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வைல்டு கார்டு என்ட்ரியில் BB வீட்டிற்குள் சென்ற மஞ்சரி மற்றும் ராணவ் ஆகியோர் போட்டியில் இருந்து வெளியேறியதாக தெரிகிறது. அவர்களை சக போட்டியாளர்கள் கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள BB சீசன் 8 டைட்டில் வின்னராக யார் வருவார்? கமெண்ட்ல சொல்லுங்க.
உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் தனது காதலி விக்டோரியா மலோனை திருமணம் செய்து கொண்டார். நார்வேயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், உலகம் முழுவதில் இருந்தும் ரசிகர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கார்ல்சன் 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
*1664 – சிவாஜி தலைமையிலான மராத்தியப் படையினர் சூரத்துப் போரில் முகலாயரை வென்றனர். *1918 – ஜெர்மன் தொழிலாளர் கட்சி அமைக்கப்பட்டது. *1940 – பண்பலை வானொலி முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. *1971 – உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்பேர்ணில் நடைபெற்றது. *2014 – இந்தியாவின் ஜிசாட் 14 செயற்கைகோள் விண்ணில் பாய்ந்தது.
Sorry, no posts matched your criteria.