India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சத்தீஸ்கரை சேர்ந்த ஆனந்த் யாதவுக்கு(35) திருமணமாகி 10 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை இல்லை. இதனால் விரக்தியடைந்த ஆனந்த், அங்குள்ள ஜோதிடரை நாடவே, கோழிக்குஞ்சை உயிருடன் விழுங்கும்படி கூறியுள்ளார். அதைக் கேட்டு ஆனந்த் கோழிக்குஞ்சை விழுங்க, அது தொண்டையில் சிக்க, மூச்சுத்திணறி உயிரிழந்தார். எனினும், அவரது தொண்டையில் சிக்கிய கோழிக்குஞ்சை மருத்துவர்கள் உயிருடன் மீட்டனர். எதற்கும் மூடநம்பிக்கை தீர்வல்ல.
₹5 நாணயங்கள் புழக்கத்தில் நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் இது உண்மையில்லை. கனமான பழைய ₹5 நாணயத்தை சிலர் வங்கதேசத்துக்கு கடத்திச் சென்று உருக்கி 5 பிளேடுகளாக்கி ₹10க்கு விற்பதாக தெரிகிறது. ₹5 நாணயத்தை தயாரிக்க ஆகும் செலவை விட இது குறைவு ஆகும். ஆதலால் இதை கவனத்தில் காெண்டு கனமான ₹5 பழைய நாணயத்தை மட்டுமே ரிசர்வ் வங்கி நிறுத்துவதாக கூறப்படுகிறது.
வணிக வாரத்தின் 2ஆம் நாளான இன்று இந்தியப் பங்குச் சந்தை Sensex (1,064 புள்ளிகள் சரிந்தது), Nifty (332 புள்ளிகள் சரிந்தது) வீழ்ச்சி அடைந்துள்ளன. இதற்கு கிறிஸ்துமஸ் விடுமுறை, FII/FPI-களின் வரத்து குறைந்தது, வட்டி விகிதம் போன்றவையே காரணங்களாகக் கூறப்படுகிறது. அத்துடன், அமெரிக்க FED-இன் நிதிக்கொள்கை கூட்டம் இன்று நடக்க இருப்பதால் அந்நிய முதலீட்டாளர்கள் அதீத முன்னெச்சரிக்கையுடன் உள்ளனர்.
கல்லூரிக்கு சென்று படிக்க முடியாதவர்கள் Bachelor, Masters, Diploma படிப்புகளை பெறத் தொடங்கப்பட்டதே தொலைதூரக்கல்வி. திறந்தநிலை பல்கலைக்கழகமான IGNOU, 2025 ஜனவரி பேட்ச்க்கான ஆன்லைன், தொலைதூரக் கல்வி அட்மிஷனை தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் 2 முறை அட்மிஷன் நடத்தப்படுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் ignouadmission.samarth.edu.in என்ற இணையத் தளத்தை அணுகலாம். கடைசி தேதி ஜன.31,2025.
பொதுவாக மின்வாரிய கவுண்டர்களில் EB கட்டணத்தை மக்கள் செலுத்துகின்றனர். முன்பு ரூ.10,000 வரை நேரில் கட்டணம் செலுத்தலாம் என இருந்தது. பிறகு இந்தத் தொகை ரூ.5,000ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில், ஆன்லைனில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், இக்கட்டணம் தற்போது ரூ.4,000 ஆக குறைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கும் கூடுதலான தொகையை ஆன்லைனில் கட்டலாம் எனச் சொல்லப்படுகிறது.
ஆளுநர் மாளிகையை நாளை முற்றுகையிடப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு அனுமதி மறுத்ததை எதிர்த்து, நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. அதன்படி நாளை காலை சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ஒருகாலத்தில் கிரிக்கெட் உலகை மிரள விட்டவர் ரோஹித் ஷர்மா. ஆனால், சமீபகாலமாக அவரது பெர்ஃபார்மன்ஸ் மிக மோசமாக இருப்பதை மறுக்க முடியாது. குறிப்பாக, தற்போதைய BGT டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்ஸில் அவர் 10 ரன்களை கூட தாண்டவில்லை. இது அவரையே விரக்தியடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரோஹித் ஷர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வு அறிவிப்பாரா என நெட்டிசன்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
தனது திருமண வாழ்க்கை குறித்து நயன்தாரா மனம் திறந்து பேசியுள்ளார். யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், சில நேரங்களில் நாங்கள் ஒன்றாக இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றும். நான் இல்லையென்றால் விக்னேஷுக்கான அடையாளம் அப்படியே இருந்திருக்கும். மக்கள் அவரை கொண்டாடி இருப்பார்கள். நான்தான் அவரை உறவுக்குள் இழுத்தேன். அந்தக் குற்ற உணர்வு எனக்கு இருக்கிறது எனக் கூறினார்.
WI அணியின் அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட் பயிற்சியாளராக முன்னாள் வீரர் டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் மற்றும் T20களில் சமி தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் நிலையில், தற்போது டெஸ்ட் அணிக்கும் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஏப்ரல் வரை அவர் பொறுப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமி கேப்டன்சியில் WI இரண்டு முறை, T20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம், அதிபர் ஆட்சி முறைக்கு கொண்டு செல்லும் என கனிமொழி எம்பி சாடியுள்ளார். மாநிலக் கட்சிகளை வலுவிழக்கச் செய்யக்கூடிய தேர்தலை நோக்கித்தான் இந்த மசோதா இட்டுச்செல்லும் எனவும், மாநில, மக்களின் உரிமைகளுக்கு எதிரானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இது முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்கான வேலையாகக் கூட இருக்கலாம் எனவும் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.