India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுக்கிரன் டிச.28இல் கும்பத்துக்கு இடம்பெயர்வதால் 3 ராசிகள் உச்சத்துக்கு போகப் போகின்றன. 1) மேஷம்: வருமானம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் லாபத்தை அள்ளி தரும். வசீகரமும், ஆளுமையும் கூடும். 2) சிம்மம்: தொட்டதெல்லாம் துலங்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும். வாழ்க்கை துணை கிடைப்பார்கள். 3) விருச்சிகம்: அதிர்ஷ்ட காலம் ஆரம்பம். புதிய சொத்து வாங்குவீர்கள். சமூகத்தில் மரியாதை கூடும்.
20க்கும் மேற்பட்ட MPக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப BJP முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று ‘ஒரே நாடு ஒரே தேர்தல் (ONOE)’ மசோதாவை அறிமுகம் செய்வதால், அனைத்து BJP MPக்களும் அவைக்கு வர கொறடா உத்தரவிட்டிருந்தார். ஆனால், அதையும் மீறி அவைக்கு வராத MPக்கள் மீது நடவடிக்கை எடுக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது. சொந்த கட்சியினருக்கே ‘ONOE’ல் நம்பிக்கை இல்லையா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு சென்னையில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. அதில் நம்ம பையன், சென்னை பையன் என கூறி குகேஷ் உலக சாதனையை முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்தார். உலக சாம்பியனாக குகேஷ் எடுத்துக் கொண்ட காலம் 11 ஆண்டுகள் எனவும், அவரின் விடாமுயற்சியை தமிழக இளைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
கர்ப்பிணிகள் விவரங்களை பிக்மி தளத்தில் பதிவேற்றம் செய்யும்படி தனியார் ஹாஸ்பிடல்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. குழந்தை பிறப்புக்கு பிந்தைய ரத்தக் கசிவு, உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளிட்டவற்றால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுத்து, போதிய சிகிச்சை அளிக்கும் வகையில் PICME தளத்தில் (கர்ப்பிணி பதிவு தளத்தில்) கர்ப்பிணிகள் விவரங்களை பதிவேற்ற பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
அஜித்குமார் கோட் சூட் அணிந்து கோலிவுட் ஜேம்ஸ் பாண்ட் போல் காட்சியளிக்கும் போட்டோவை வெளியிட்டு, ‘விடாமுயற்சி’ படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு என்ற அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அஜித் – த்ரிஷா இடையிலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. 2025 பொங்கலுக்கு படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான டீசர் பெரும் வரவேற்பை பெற்றதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக கவனத்துடன் இருக்க வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். கோவையில் அல் உம்மா தலைவர் பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தது யார் என கேள்வி எழுப்பிய அவர், இந்த விவகாரத்தை ஆளுங்கட்சி கையாண்ட விதம் சரியில்லை என்றார். பயங்கரவாதிகளை தியாகிகளாக சித்தரிப்பது, குண்டுவைத்ததைக் காட்டிலும் படுபாதகம் எனவும் கண்டித்துள்ளார்.
அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதேபோல், தேனி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக ஒருபுறம் கலவரம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அந்நாடு மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறது. வங்கதேசத்தின் மியான்மர் எல்லையையொட்டி செயல்பட்டு வரும் ‘அராக்கன் ஆர்மி’ என்ற கிளர்ச்சிக் குழு, அந்நாட்டின் தெக்னாப் பிராந்தியத்தின் சில பகுதிகளை கைப்பற்றியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து, அப்பகுதிக்கு வங்கதேச ராணுவம் அவசரமாக சென்றுள்ளது.
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க இந்த குணங்கள் கொண்டவர்களை தவிருங்கள்:
1)உங்களிடம் பொய் சொல்பவர்கள் 2) உங்களை அவமதிப்பவர்கள், உங்களுக்கு மரியாதை கொடுக்காதவர்கள் 3)உங்களை தம் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்பவர்கள் 4)உங்களின் தன்னம்பிக்கையை கெடுப்பவர்கள், தலைகுனிய செய்பவர்கள். வேறு எந்த மாதிரி நபர்களை தவிர்க்க வேண்டும்? உங்கள் அனுபவத்தில் இருந்து சொல்லுங்களேன்.
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று பெய்ஜிங் சென்றடைந்தார். அங்கு அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் வாங் யி-யை சந்திக்கும் அவர், எல்லைப் பிரச்னைகளை தீர்ப்பது குறித்து விரிவாக விவாதிப்பார். 2019-க்கு பின் எல்லைத் தொடர்பாக நடக்கும் முதல் பேச்சுவார்த்தை இதுவாகும். இரு நாடுகளுக்கு இடையே 3,488 கிமீ நீளம் கொண்ட கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் (LAC) அமைதியை கொண்டுவரும் முயற்சியாக இது அமையும்.
Sorry, no posts matched your criteria.