India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆண்டுதோறும், 24 இந்திய மொழிகளில் (ஆங்கிலம் உள்பட) இலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பு செய்பவர்களுக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. 1955-ஆம் முதல் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விருதுடன் சான்றிதழ், ரூ.1 லட்சம் சேர்த்து வழங்கப்படுகிறது. தமிழில் முதல் விருது ‘தமிழ் இன்பம்’ நூலுக்காக ரா.பி.சேதுபிள்ளைக்கு வழங்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளான டிச. 26ஆம் தேதி, ‘Boxing Day’ அதாவது பரிசு வழங்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் மெல்போர்ன் மைதானத்தில் AUS கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் போட்டியை நடத்துகிறது. அதற்கு ‘Boxing Day Test’ எனப் பெயர். IND vs AUS மோதும் 4ஆவது டெஸ்ட், ‘Boxing Day Test’ஆக நடைபெற உள்ளது. இதில், கடந்த 12 ஆண்டுகளாக IND ஒரு தோல்வியைக் கூட சந்திக்கவில்லை.
அம்பேத்கர் பற்றி அமித் ஷா பேசிய பேச்சால் அரசியல் களமே கொந்தளித்து போயுள்ளது. அம்பேத்கர் கோஷத்துக்கு பதிலாக கடவுளின் பெயரை கூறினாலாவது சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என அமித் ஷா பேசியதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்த சூழலில், அம்பேத்கரை தனது கொள்கை வழிகாட்டியாக அறிவித்த விஜய், இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
அம்பேத்கர், அம்பேத்கர் எனக் கூறுவது ஃபேஷனாகவிட்டது எனக் கூறிய அமித்ஷாவுக்கு உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிவில், அம்பேத்கரின் பெயரை எப்படியாவது சிதைக்கலாம் என நினைக்கும் ஃபாசிஸ்டுகளுக்கு அம்பேத்கர் பெயரை கேட்டாலே எரிச்சல் வருவது நியாயம்தான். அப்படி அந்த ஃபாசிஸ்டுகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறு முறை அம்பேத்கர் பெயரை சொல்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
2024-ம் ஆண்டுக்கான தேசிய சாகித்ய அகாடமி விருது, தமிழில் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.,யும் 1908” என்ற அவரது நூலுக்காக இந்த விருதைப் பெறுகிறார். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான ஆ.இரா.வேங்கடாசலபதி, 25-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சென்னை MIDS நிறுவனத்தில் ஆய்வாளராக பணியாற்றுகிறார்.
‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன ஒன் லைன் சிம்புவிற்கு பிடித்துபோக, அதை டெவலப் செய்ய சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் காரணமாக தேசிங்கு பெரியசாமி இயக்கும் படம் தள்ளிப்போய் கொண்டே இருப்பதால், சிம்பு இந்த முடிவை எடுத்துள்ளாராம். அவர் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்து வருகிறார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி இல்லை என அதிமுக Ex அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகக் மறுத்துள்ளார். அதிமுகவின் தொடர் தோல்வி பாவத்தைக் கழிக்க NDA கூட்டணியில் இணைய வேண்டும் என TTV தினகரன் பேசியிருந்த நிலையில், ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார். டிடிவி தினகரன் முழுமையாக பாஜகவில் சரணடைந்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.
புதிய வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியை போல் செகண்ட் ஹண்ட் வாகனங்களுக்கும் 18% GST விதிக்க GST கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இதனால், உதிரிபாகங்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு 12% GST விதிக்கப்படும் நிலையில், அதனை 18% ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பால் செகண்ட் ஹேண்ட் வாகனங்களை வாங்கும்போது, அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும்.
டெஸ்டில் பவுலிங்குக்கு இணையாக பேட்டிங்கிலும் டீமுக்கு பங்களித்தவர் அஸ்வின். 106 டெஸ்ட்களில் 3503 ரன்கள் குவித்துள்ள அவர், 6 சதங்களையும் விளாசியுள்ளார். 15 அரை சதங்களும் அடித்துள்ளார். ODI-இல் 707, T20I-இல் 184 ரன்கள் எடுத்துள்ளார். முதல்தரக் கிரிக்கெட்டில் அறிமுகமான போது பவுலராக மட்டுமல்ல, ஓபனிங் பேட்ஸ்மேனாகவும் அஸ்வின் இருந்துள்ளார். பின்னர், பவுலிங்கில் முழுக் கவனத்தையும் திருப்பினார்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக தவெக தலைவர் விஜய்யின் நிலைப்பாடு என்னவென்று திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். நாடு முழுவதும் இன்றைக்கான பேசுபொருளாக இருப்பது இந்த மசோதாதான். ஆனால், ஒரு அரசியல் கட்சியின் தலைவர் இதுகுறித்து வாய் திறக்காமல் இருப்பது எந்த வகையில் சரி என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக விஜய் பொதுத் தளத்தில் பேச வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.