India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஷால் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அதை அவரின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் மறுத்துள்ளார். ஹாஸ்பிட்டலில் விஷால் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்று அவர் கூறியுள்ளார். காய்ச்சல் வந்த காரணத்தினால் உடல் வலி, சோர்வும் இருப்பதால் டாக்டர்கள் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வெடுக்கிறார். ஓரிரு நாள்களில் விஷால் குணமடைந்து விடுவார் என்றும் அவரின் மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பாக பேரவையில் அதிமுக, காங்., பாமக, பாஜக, இடதுசாரி கட்சிகள் நோட்டீஸ் அளித்திருந்தன. இந்நிலையில், கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்கப்பட்டு விவாதம் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் வெளியானதற்கு பல்கலை. வேந்தரான ஆளுநரே பொறுப்பேற்க வேண்டுமென வேல்முருகன் கூறியுள்ளார். யார் அந்த சார் என்பது குறித்து ஆளுநர் வாய் திறக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையிலிருந்து இஸ்ரோ தலைவராக உயர்ந்துள்ள உங்களது கடின உழைப்பை எண்ணி வியக்கிறேன் என வி.நாராயணனுக்கு CM ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த நாராயணன் ISRO தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், உங்கள் தலைமையில் இந்திய விண்வெளித் துறை புதிய உயரங்களைத் தொடும் என்றும் வாழ்த்தியுள்ளார்.
‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனிருத்துக்கு AR ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார். விழாவில் பேசிய அவர், “நன்றாக இசையமைக்கும் அனிருத்துக்கு ஒரு வேண்டுகோள். கிளாசிக்கல் இசை படித்துவிட்டு, அதில் நீங்கள் நிறைய பாடல்கள் பண்ண வேண்டும். அதை நீங்கள் செய்தால் இளம் தலைமுறையினருக்கு அந்த இசை போய் சேரும்” என்று குறிப்பிட்டார். ரஹ்மானின் இப்பேச்சு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாதக போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். ஈராேடு கிழக்குத் தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல் குறித்து முதல் கட்சியாக நாதக தனது முடிவை அறிவித்துள்ளது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இடைத்தேர்தலில் நாதக தனித்து போட்டியிட இருப்பதாக தெரிவித்தார்.
➛ நிர்வாகத்தின் கொள்கை, வழிகாட்டுதலை பின்பற்றுங்கள் ➛ வதந்திகளில் இருந்து விலகுங்கள் ➛ சக ஊழியரை விட சிறப்பான வேலையை வெளிப்படுத்துங்கள் ➛ அனைவரிடமும் நல்லுறவை வளர்த்து கொள்ளுங்கள், அதுவே உங்களை தலைமை நிலைக்கு முன்னேற்றும் ➛ வேலையை சரியான நேரத்தில் செய்து முடியுங்கள் ➛ தவறை ஏற்றுக்கொண்டு திருத்தி கொள்ளுங்கள் ➛ வேலையில் புது உத்திகளை முயற்சியுங்கள் ➛ முக்கியமானது கடின உழைப்பாளியாக இருங்கள்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI, தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு கடன்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், SBI- GLOBAL ED-VANTAGE LOAN என்ற கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் கல்வி பயில ரூ.3 கோடி வரை கல்விக்கடன் அளிக்கிறது. இதற்கு ஆண்டுக்கு 9.65% முதல் வட்டி வசூலிக்கிறது. இந்தத் திட்டத்தில் 80 (E)ன் கீழ் வரிச் சலுகையும் உண்டு.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE)ல் Superintendent, Junior Assistant பதவிகளுக்கான 212 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18 – 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம் தகுதிக்கேற்ப ₹19,900 – ₹1,12,000 வரை. <
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி சுதாகரை கட்சியில் இருந்து நீக்கி இபிஎஸ் அறிவித்துள்ளார். சைதாப்பேட்டை 103ஆவது அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவதாக கூறியுள்ளார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட பெண் ஆய்வாளர் ராஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 2வது நாளாக இன்றும் பங்கேற்கவில்லை. 2 நாட்களாக யார் அந்த சார் பேட்ஜ் அணிந்து சென்ற அதிமுகவினர் இன்று கறுப்புச் சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர். அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி ADMK தரப்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.