India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை- வாரணாசிக்கு ஜன.16ஆம் தேதி மகா கும்பமேளா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் கட்டணமில்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதை ரயில்வே நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இலவசமாக பயணிகள் செல்ல ரயில்வேயில் எந்த விதியும் இல்லை. அது அடிப்படை முகாந்திரமில்லாத தகவல் மற்றும் பொய்யான தகவல் என்று ரயில்வே விளக்கமளித்துள்ளது.
எலான் மஸ்கின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. US அரசியல் மாற்றம், ட்ரம்ப் வருகை ஆகியவை அவரது கம்பெனியின் ஸ்டாக் வேல்யூவை கன்னாபின்னாவென ஏற 500 பில்லியன் USD-க்கு (ரூ.42.46 லட்சம் கோடி) சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக Bloomberg Index தெரிவித்துள்ளது. மனிதகுல வரலாற்றிலேயே இந்தளவு காசு யார் கிட்டயும் இருந்தது இல்லையாம்! 2-வது பணக்காரர் ஜெஃப் பெசோஸ் சொத்து மதிப்பு ரூ.21.32 லட்சம் கோடி.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, வசதி இருந்தால், வாய்ப்பு இருந்தால் செய்யலாம் என நடிகர் விஜய் ஆண்டனி பதிலளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “முடிந்தால் ஒரே நாடு, ஒரே சாதி என எல்லாவற்றிலும் செய்து, நடைமுறைக்கு கொண்டுவரலாம்” என சர்காஸ்டிக்காக கூறியுள்ளார். அரசியல் விவகாரங்களில் விஜய் ஆண்டனி தனது நிலைப்பாட்டை அவ்வப்போது கூறிவருவது கவனிக்கத்தக்கது.
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் டிராவிஸ் ஹெட் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில், இடுப்புப் பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதாகவும், முழுவதும் குணமானால் மட்டுமே 4ஆவது டெஸ்ட்டில் விளையாடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 26ஆம் தேதி 4ஆவது டெஸ்ட் தொடங்குகிறது.
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் ஆ.இரா. வெங்கடாசலபதிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.,யும் 1908” என்ற அவரது நூலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. தனது வாழ்த்துச் செய்தியில் திருநெல்வேலி கலகம் என பொதுவாக கூறப்பட்டதை, ‘திருநெல்வேலி எழுச்சி’ என அழைத்ததற்காகவே எழுத்தாளர் ஆ.இரா. வெங்கடாசலபதியை பாராட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அமித்ஷா கூறிய ‘<<14910754>>அம்பேத்கர்<<>>’ கருத்தை, KA CM சித்தராமையா கண்டித்துள்ளார். தன் X பக்கத்தில், உங்கள் பேச்சு எங்களுக்கு ஆச்சரியம் தரவில்லை; அரசியலமைப்பு சிற்பி மீது உங்களுக்கு மரியாதை இல்லாததை நாடே பார்க்கிறது. அம்பேத்கர் இல்லையெனில், நான் CM ஆகியிருக்க முடியாது, மாடு மேய்த்திருப்பேன். PM மோடியும் டீ விற்றுக் கொண்டிருப்பார். ஏன் நீங்களே ஊரில் ஸ்கிராப் பிசினஸ் செய்திருப்பீர்கள் என்று விமர்சித்துள்ளார்.
நிரந்தர வேலையில் கிடைக்கும் வருமானம் போதாது, கூடுதல் வருமானம் ஈட்ட வேண்டும் என விரும்பி PART TIME வேலையில் சேர சிலர் விரும்புவர். இவர்களை குறிவைத்து சில மோசடி கும்பல் களமிறங்கியுள்ளது. லிங்குகளை அனுப்பி கிளிக் செய்யக் கூறியும், UPI-யில் பணம் அனுப்பச் சொல்லியும் ஏமாற்றுவதாக மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து www.cybercrime.gov.in , 1930இல் புகார் அளிக்கவும் வலியுறுத்தியுள்ளது.
அம்பேத்கர் குறித்த கருத்துக்காக அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம் என்றும், அம்பேத்கர் பெயரை உள்ளமும், உதடுகளும் மகிழ உச்சரித்துக் கொண்டே இருப்போம் என்றும் விஜய் கூறியுள்ளார். அம்பேத்கரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சரை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று விஜய் கூறியுள்ளார்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் கனமழை வெளுத்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் , தி.மலை, தருமபுரி ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி. யும் 1908’ நெல்லை & தூத்துக்குடியில் வ.உ.சி., கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த மக்கள் கிளர்ச்சியைப் பற்றி பேசும் நூலாகும். அதில், ஆங்கிலேய அரசு நடத்திய துப்பாக்கிச்சூடு, 4 பேர் உயிரிழப்பு, 1000-க்கும் மேற்பட்டோர் கைது, வரி விதிப்பு என நடந்த வரலாறு அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எழுச்சியில் பங்களித்த எளிய மக்களின் கதையினையும் மீட்டுருவாக்கம் செய்துள்ளது.
Sorry, no posts matched your criteria.