India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாய்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சண்டிகர் மாநகராட்சியில் 6 வகை நாய்களை வளர்க்கவும், வாங்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. American bulldog, American Pitbull, Bull Terrier, Rottweiler, Cane Corso, Dogo Argentino போன்ற நாய்கள் உயிருக்கு அச்சுறுத்தலான விலங்கு என பட்டியலிடப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இது போன்ற நடவடிக்கை தேவையா?

தவெக பொதுக்கூட்டங்கள், பிரசாரம், மக்கள் சந்திப்பு நிகழ்வுகளில் பாதுகாப்பு திட்டமிடலுக்காக காவல் துறையில் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை உருவாக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற IB இயக்குனர், DGP, ADGP உள்ளிட்ட 15 அதிகாரிகள் இடம்பெறுகின்றனர். இந்த அதிகாரிகள் குழு பாதுகாப்பு திட்டமிடல், கட்சியின் தொண்டர் அணிக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்குவார்கள்.

கேரள மாநிலம் இடுக்கியில், கொலை வழக்கில் 82 வயது முதியவரான ஹமீத்துக்கு மரண தண்டனை விதித்து தொடுபுழா கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ல் ஹமீத் சொத்து தகராறில், உறங்கி கொண்டிருந்த தனது மகன், மருமகள் மற்றும் 2 பேரக்குழந்தைகளை எரித்து கொலை செய்தார். வழக்கு விசாரணையின் போது, இந்த கொலை அரிதிலும் அரிதானது என்ற பிரிவுக்குள் வருவதாக கூறி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

பெரும் வெற்றி பெற்ற ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநரும், நடிகருமான அபிஷன் ஜீவிந்துக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தனது நீண்ட நாள் காதலியான அகிலாவை பெற்றோர்கள் சம்மதத்துடன் அபிஷன் கரம் பிடித்தார். டூரிஸ்ட் பேமிலி படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்த அபிஷன், தற்போது செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற நாடுகள் மீது டிரம்ப் விதிக்கும் வரிகளுக்கு எதிராக 3வது முறையாக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் டிரம்ப்பின் சொந்த கட்சியினர்(குடியரசு கட்சி) 4 பேர் அவருக்கு எதிராக வாக்களித்திருப்பதுதான் ஹைலைட். ஆனால் எந்த தீர்மானத்தையும் நிராகரிக்கும் Veto அதிகாரம் அதிபரிடம் இருக்கிறது. இதனால் டிரம்ப் இதனை நிராகரிப்பார், இது வரி விதிப்பு நடவடிக்கைகளை நிறுத்தாது என கூறப்படுகிறது.

மெல்பர்னில் நடக்கும் 2-வது T20-யில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, பும்ரா. வெல்லுமா இந்த படை?

கடந்த 2022-ல், ஏற்றுமதி சரிந்ததால் Ford நிறுவனம், TN-ல் செயல்பட்டு வந்த தனது ஆலையை மூடியது. இந்நிலையில், சமீபத்தில் CM ஸ்டாலின் அமெரிக்கா சென்றபோது, TN-ல் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க Ford நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று TN-ல் மீண்டும் தனது கார் உற்பத்தியை தொடங்குகிறது Ford. ₹3,250 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், தலைமைச் செயலகத்தில் CM முன்னிலையில் கையெழுத்தானது.

நெல்லை BJP ஆபீஸில் நயினாருடன் அதிமுக ex அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியுள்ளனர். பசும்பொன்னில் OPS, TTV, செங்கோட்டையன் ஆகிய மூவரும் இணைந்து பேட்டியளித்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஆர்.பி.உதயகுமார், அந்த மூவர் சந்திப்பால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை; ஒருநாள் பரபரப்புக்காக 3 பேரும் சந்தித்துள்ளனர் என்று விமர்சித்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச laptop வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மார்ச்சுக்குள் இலவச லேப்டாப்கள் விநியோகம் செய்யப்படும் என TN அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்களை வழங்க HP, Dell, Acer ஆகிய நிறுவனங்களுக்கு தமிழக அரசு கொள்முதல் ஆணை வழங்கியுள்ளது. laptop விநியோக திட்டத்தை தொடங்குவது குறித்து DCM உதயநிதி தலைமையிலான குழு முடிவெடுக்கும்.

டிவி ஷோவில், தான் கொல்ல திட்டமிட்டுள்ளவர்களின் லிஸ்ட்டை கொடுக்கும் சைக்கோ வில்லனிடம் இருந்து, அவர்களை விஷ்ணு விஷால் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே ‘ஆர்யன்’ ✱பிளஸ்: முதல் 20 mins அட்டகாசம். விஷ்ணு விஷால், செல்வராகவன் தேர்ந்த நடிப்பால் மிரட்டுகின்றனர். ஜிப்ரானின் BGM அசத்தல் ✱பல்ப்ஸ்: 2-ம் பாதி ஸ்லோ. ஹீரோ பிளாஷ்பேக் ஒட்டவில்லை. இன்னொரு ராட்சசன் இல்லை என்றாலும், ஆர்யன் ஓரளவு ரசிக்க வைக்கிறான்.
Sorry, no posts matched your criteria.