India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எதிர் எதிர் துருவங்களாக இருந்த இரு கார் தயாரிப்பாளர்கள் இணைய முடிவு செய்துள்ளனர். ஜப்பான் கார் நிறுவனங்களான ஹோண்டா மற்றும் நிஸான் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. சீனாவில் எலெக்ட்ரிக் கார் ட்ரென்டால் இருவரும் சந்தையில் சரிவை சந்தித்தனர். US-ல் நிஸானுக்கு மோசமான சரிவு. இந்த நிலையில் எதிர்கால R&D-ல் ஒன்றாக செயல்படவும் ஒருவரை ஒருவர் காக்கவும் இந்த முடிவு எனக் கூறப்படுகிறது.
அண்ணாமலை பல்கலை., துணைவேந்தரைத் தேர்வு செய்வது பற்றிய அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டுமென ஆளுநர் R.N.ரவி வலியுறுத்தியுள்ளார். துணைவேந்தரை தேர்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்தது குறித்து வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் UGC தலைவர் பரிந்துரைத்த நபர் இல்லாதது விதிமீறலாகும். விதிகளுக்குப் புறம்பான இம்முடிவை கைவிட்டு, தான் அமைத்த குழுவை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றார்.
பத்திரிகையாளர்களின் குடும்ப நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, 20 ஆண்டுகள் பத்திரிகைகளில் பணிபுரிந்து இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ₹ 10 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டு பணிபுரிந்து இறந்தால் ₹ 7.5 லட்சமும், 10 ஆண்டு பணிபுரிந்து இறந்தால் ₹ 5 லட்சமும், 5 ஆண்டு பணிபுரிந்து இறந்தால் ₹ 2.5 லட்சமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் குறித்து அமித்ஷா கூறிய கருத்துக்கு மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “பாஜகவின் மதவெறி, சாதிவெறி, தலித் எதிர்ப்பு மனநிலையை அமித்ஷாவின் பேச்சு காட்டுகிறது. 240 இடங்கள் வைத்துள்ள போதே இப்படி பேசும் பாஜகவினர், ஒருவேளை 400 இடங்களை வென்றிருந்தால், அம்பேத்கரின் பங்களிப்பை முற்றிலும் அழித்து, வரலாற்றை மாற்றி எழுதியிருப்பர்” என சாடியுள்ளார்.
அம்பேத்கரின் பெயருக்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும் என அமித்ஷா பேசியதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அம்பேத்கருக்கும், அவரது கொள்கைகளுக்கும் பாஜகவினர் எதிரானவர்கள். அமித்ஷாவின் பேச்சு இதைத்தான் காட்டுகிறது. அம்பேத்கர் ஏற்படுத்திய சமூக மாற்றத்தை ஒழித்துக்கட்டுவதே பாஜகவின் ஒரே வேலைத்திட்டம் என சாடியுள்ளார்.
அம்பேத்கர் பெயரை கூறுவது ஃபேஷனாகிவிட்டது என விமர்சித்த அமித் ஷாவுக்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஓயாமல் கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள்தான் அயோத்தியில் தோற்றீர்கள். அண்ணல் அம்பேத்கர் பெயரை உச்சரித்தவர்தான் அயோத்தியில் வென்றார். அறிவாசான் அம்பேத்கர் பெயரை சொன்னாலே, வாழும் பூமியை சொர்க்கமாக்கி விடலாம் என சீமான் கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் மட்டும் 28 வீரர்கள், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். அஷ்வின், தவான், ரித்திமான் சஹா, கேதர் ஜாதவ், சித்தார்த் கவுல், சௌரப் திவாரி, தினேஷ் கார்த்திக், வருண் ஆரோன், வார்னர், பரிந்தர் சரன் உள்ளிட்ட 22 வீரர்கள், அனைத்து ஃபார்மெட்களிலும் ஓய்வு பெற்றுள்ளனர். கோலி, ரோஹித், ஜடேஜா உள்ளிட்ட 6 பேர் குறிப்பிட்ட ஃபார்மெட்களில் மட்டும் ஓய்வு அறிவித்துள்ளனர்.
உலகில் மருந்து கண்டுபிடிக்கப்படாத நோய்களில் புற்றுநோயும் ஒன்றாக இருந்தது. இதனால் அந்நோயில் இருந்து குணமடைவது மிகவும் அரிதாக இருந்தது. இந்நிலையில், புற்றுநோயை குணப்படுத்தும் தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா தற்போது அறிவித்துள்ளது. MRNA அடிப்படையிலான அந்த தடுப்பூசி 2025ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும். அதை நோயாளிகளுக்கு இலவசமாக அளிப்போம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
TNPSC குரூப் 2, 2ஏ மெயின் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இதற்கு ஆன்லைனில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும், தேர்வு மையத்தை தேர்வு செய்யவும் TNPSC இன்று வரை அவகாசம் அளித்திருந்தது. இந்த அவகாசம் இன்னும் சில மணி நேரத்தில் முடிவடையவுள்ளது. ஆதலால் உடனடியாக பதிவேற்றம் செய்யும்படியும், தேர்வு மையத்தை தேர்வு செய்யுமாறும் TNPSC வலியுறுத்தியுள்ளது.
BGT தொடருக்கு மத்தியில், அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்தது பேசுபொருளாகியுள்ளது. இந்த தொடரில் IND அணியில் இடம்பெறுவது சவாலானது. 3ஆவது டெஸ்ட்டில் ஜடேஜா சிறப்பாக செயல்பட்டதால், மீதமுள்ள 2 டெஸ்ட்களில் தனக்கு இடம் கிடைக்காது என அஸ்வின் நினைத்திருக்கலாம். மேலும், ஆல்ரவுண்டர் லிஸ்ட்டில் இளம் வீரர்களான சுந்தரும், நிதிஷும் இருப்பதால், இதுதான் ஓய்வு பெறுவதற்கான சரியான தருணம் என அஸ்வின் நினைத்திருப்பார்.
Sorry, no posts matched your criteria.