India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
UGC புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அதன் மீது பேசிய அவர், பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்கள் நியமனத்தில் கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது கூட்டாட்சி தத்துவம், மாநில உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறினார். இது, மாநில அரசை சிறுமைப்படுத்தும் செயல் எனவும், அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் தெரிவித்தார்.
<<15104294>>ஜெயக்குமார் <<>>ஒரு பெண்ணுடன் பேசியதாக கூறப்படுவது போன்ற ஆடியோவை திமுக ஐடி விங்க் வெளியிட்டுள்ளது. இதற்கு அதிமுக ஐடி விங்க், பதிலடி கொடுத்துள்ளது. அமைச்சர் பெரிய கருப்பன் படத்துடன் பதிவு வெளியிட்டு, எங்க கிட்டயும் சீப்பு இருக்குன்னு, இந்த மாதிரி மார்பிங் ஆடியோ போடாம, உங்க அமைச்சரோட ஒரிஜினல் வீடியோவையே போட்டுடலாம் தான். ஆனா ரொம்ப அசிங்கமா போய்டும்ன்னு பார்க்குறோம் என எச்சரித்துள்ளது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக, முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு (EC) சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ், ஓபிஎஸ் என இருப்பு தரப்பும் உரிமை கொண்டாடி வருகிறது. இந்த விவகாரம் குறித்து 4 வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என EC அறிவித்த நிலையில், வழக்கை விசாரித்த ஐகோர்ட், விசாரணை நிலுவையில் இருக்கையில் எப்படி முடிவெடுக்க முடியும் எனக் கூறி தடை விதித்தது.
அண்ணா பல்கலை., மாணவி விவகாரத்தில் அதிமுகவினரை திமுகவினரும், திமுகவினரை அதிமுகவினரும் மாறிமாறி விமர்சிக்கின்றனர். இந்நிலையில், <<15104294>>ஜெயக்குமாரின் <<>> பதிவில், அதிமுகவிற்கு மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை எனத் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் சாரின் வெட்கங்கெட்ட ஆட்சிக்கு வேங்கைவயலே சாட்சி. திமுகவின் அலங்கோல ஆட்சிக்கு அண்ணா பல்கலை. பாலியல் வழக்கே சாட்சி என்றும் சாடியுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 தாெடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடிடும் வகையில், ரூ.1,000 முன்கூட்டியே டெபாசிட் செய்ய CM ஸ்டாலின் உத்தரவிட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து 1.14 கோடி பேர் வங்கிக்கணக்கில் ரூ.1,000 டெபாசிட் செய்யும் பணி தொடங்கி உள்ளதாகவும், இன்று அனைவரின் வங்கிக்கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆல் ரவுண்டர் பிரிவில் ஜடேஜா முதல் இடத்தில் நீடிக்கிறார். அவர் மட்டுமே இந்த பட்டியலில் உள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா முதல் இடத்திலும், ஜடேஜா 9வது இடத்திலும் உள்ளார்கள். பேட்டிங் தரவரிசையில் ஜோ ரூட் முதல் இடத்தில் நீடிக்கும் நிலையில், ஜெய்ஸ்வால் 4வது இடத்திலும், ரிஷப் பண்ட் 3 இடங்கள் முன்னேறி 9வது இடத்தில் இருக்கிறார். இப்பட்டியலில் விராட் 25வது இடத்திற்கு வெளியே இருக்கிறார்.
TNPSC குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 4வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. VAO, இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கடந்தாண்டு ஜூன் 9ஆம் தேதி தேர்வு நடந்தது. 6,244 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று முறையே 480, 2,208, 559 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில், மேலும் 41 பணியிடங்கள் சேர்த்து 9,532ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் முடிந்த நிலையில், இன்று முதல் ரேஷன் கடைகளில் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதையொட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்கு தங்குத் தடையின்றி கிடைக்க அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு ஏற்பாடுகளில் ஒன்றாக, மாநிலம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.
அண்ணா பல்கலை., மாணவி விவகாரத்தை அடுத்து, திமுகவுக்கு எதிராக அதிமுகவினரும், அதிமுகவினருக்கு எதிராக திமுகவினரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில், #இவன்தான்_அந்தSIR என்ற பதிவுடன், ஜெயக்குமார் ஒரு பெண்ணின் தாயாருடன் பேசியதாக கூறப்படும் ஆடியோவை திமுக ஐடி விங்க் மீண்டும் வைரலாக்கி வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு இதே ஆடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் விடுமுறைக்கு மக்கள் சொந்த ஊர் செல்வதால் இதை பயன்படுத்தி, தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்ட பேருந்துகளுக்கான டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூ.4,000ம், நாகர்கோவிலுக்கும் ரூ.4,000ம் டிக்கெட் கட்டணம் பெறப்படுகிறது. சென்னையிலிருந்து கோவைக்கு ரூ.2,800 வரை வசூலிக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.