India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசிய பேச்சுக்கு ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், அம்பேத்கர் என சொல்வது ஃபேஷனாகிவிட்டது என நாடாளுமன்றத்திலேயே அமித் ஷா பேசியது கண்டனத்துக்குரியது. அந்த அம்பேத்கர் கொண்டுவந்த அரசமைப்புச் சட்டம்தான் பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட பல ஏழைத்தாயின் மகன்களை அதிகாரத்தை அடையச் செய்திருக்கிறது எனக் கூறியுள்ளார்.
இந்தியாவின் சீனியர் கிரிக்கெட் வீரர்கள் பலரும் BGT தொடரின் போது தங்கள் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் சுவாரஸ்ய தகவல் கவனம் ஈர்க்கிறது. இன்று ஓய்வு அறிவித்த அஸ்வின் முதல் கேப்டன் கூல் தோனி, கும்ப்ளே, டிராவிட், கங்குலி, லக்ஷ்மண், சேவாக் உள்ளிட்டோர் BGT தொடரில் தான் தங்கள் கடைசி டெஸ்ட் ஆட்டத்தை விளையாடி உள்ளதாக ஒரு தகவல் அதிகம் பகிரப்படுகிறது. அடுத்து யாராக இருக்கும்? நீங்களே சொல்லுங்க.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான எஸ்.ஏ. பாஷா, இரு தினங்களுக்கு முன்பு காலமானார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில், சீமான் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அகில பாரத் இந்து சபா, கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
எத்தனை பேர் சுற்றி இருந்தாலும், ஒரு சிலரை மட்டுமே கொசுக்கள் அதிகம் கடிப்பதற்கு சில காரணங்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல் வெப்பம் அதிகமாக உள்ளவர்கள் மற்றும் வியர்வை வாசனையையும் உணர முடியும் என்பதால், அதிக வியர்வை சுரக்கும் நபர்களை கொசுக்கள் அதிகம் டார்கெட் செய்கின்றன. அதேபோல், பீர் குடிப்பவர்களை குறிவைத்தும் கடிக்கின்றன. மேலும், O, AB வகை ரத்த வகைகளை கொண்டவர்களையும் ருசிக்கின்றன.
அந்நிய நிதி வெளியேற்றம் & இன்றிரவு வெளியாகும் அமெரிக்க FED வங்கி வட்டி விகித முடிவு குறித்து முதலீட்டாளர்கள் எச்சரிக்கை உணர்வுடன் உள்ளனர். இதனால் வாரத்தின் 3வது நாளாக இன்றும் Sensex & Nifty சரிவுடன் முடிந்தது. எனர்ஜி, வங்கி, மெட்டல், மீடியா பங்குகள் 0.5% – 2% வரையிலும், Midcap & Smallcap குறியீடுகள் 0.5% வரையும் சரிந்தன. இந்திய பங்குச்சந்தை மட்டுமின்றி, டோக்கியோ பங்கு சந்தையும் சரிவு கண்டது.
கேரளாவில் சேரும் மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டிச் செல்வதை அம்மாநிலம் வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை இன்று விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், கேரளாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை கொட்டப்பட்ட மொத்த மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கான செலவுகளை கேரள அரசிடமே வசூலிக்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கர்ப்பமாக இருப்பது தெரிந்தவுடன் பயங்கர ஷாக் ஆனதாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து தாங்கள் யோசிக்கவில்லை எனவும், கர்ப்ப காலத்தில் உடலின் எடை அதிகரித்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தன் உடலை பேணுவதற்கு கஷ்டப்பட்டதாகவும், குழந்தை பெற்றுக் கொள்வதற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெண்கள் தயாராக வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
நாடெங்கும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ பற்றி பேசுகையில், மது பிரியர்களின் கோரிக்கை வேறாக உள்ளது. இதுபற்றி X-ல் IRAS அதிகாரி ஒருவர் நகைச்சுவையாக பகிர்ந்துள்ள பதிவில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல் இருக்கட்டும். ஒரு ஒயின் பாட்டில் கர்நாடகாவில் ரூ.920க்கு விற்கிறது. ஆனால், கோவாவில் அதன் விலை ரூ.320 மட்டுமே. மது விலைகளையும் ஒரே நாடு ஒரே விலை என மாற்றினால் என்ன?’ என்று கேள்வி எழுப்பப்படுகிறது. உங்க கருத்து?
இரவு 1 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 1 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. அதேபோல், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. SHARE IT.
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித்ஷா பேசிய விவகாரத்தில் பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மும்பையில் பேசிய அவர், “அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சு பாஜகவினரின் உண்மையான முகத்தையும், ஆணவத்தையும் காட்டுகிறது. அவர் மீது பாஜக மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர் பதவி விலக வேண்டும்” என்றார்.
Sorry, no posts matched your criteria.