India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் ‘கங்குவா’ இடம் பிடித்தது பலருக்கும் ஆச்சரியமளித்தது. இதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்ய கதை உள்ளது. மத்திய அரசு சார்பில் ஒரு படம் தான் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் (இந்த ஆண்டு ‘லாபட்டா லேடீஸ்’). ஆனால், படக்குழுவினர் விரும்பினால், சொந்தமாக பணம் செலுத்தி விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அப்படிதான் கங்குவாவும் இப்பட்டியலில் இணைந்துள்ளது.
ரோஹித், கோலிக்கு யாரும் எந்த அட்வைஸும் கூறத் தேவையில்லை என முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார். ரோஹித் ஃபிட்னஸில் கவனம் செலுத்தினால் போதுமானது என நினைப்பதாகவும், கோலிக்கு அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய அணியின் எதிர்கால வெற்றிகளில், இவர்கள் இருவரது பங்களிப்பும் இன்றியமையாததாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி ஒன்றில் எல்கேஜி படித்து வந்த லியா லட்சுமி (4) என்ற மாணவி, சில தினங்களுக்கு முன்பு பள்ளி செப்டிங் டேங்கில் விழுந்து இறந்ததாக செய்தி வெளியானது. இந்நிலையில், தற்போது ஆசிரியை அடித்தே சிறுமி இறந்ததாக அதன் பெற்றோர், விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே, மாணவி பயின்ற பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மறைந்த பாடகர் ஜெயச்சந்திரன், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 16,000க்கு அதிகமான பாடல்களை தன் இனிய குரலில் பாடியுள்ளார். 1965-ல் பாடத் தொடங்கிய அவருக்கு எண்ணற்ற விருதுகள் தேடிவந்தன. 1986-ல் சிறந்த பாடகருக்கான தேசிய விருது, கேரள அரசின் 6 விருதுகள், தமிழக அரசின் 2 விருதுகள் முக்கியமானவை. MSV, இளையராஜா, ARR, வித்யாசாகர் உள்பட பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. • மாத சம்பளம் பெறும் பெண்களுக்கான வருமான வரி குறைப்பு • பெண்கள் நிர்வகிக்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கு குறைந்த அளவிலான வரி • வீட்டுக் கடன் வாங்கும் பெண்களுக்கு பெருமளவில் வரி விலக்கு • கல்விக்கடனுக்கு வரிச்சலுகை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளையராஜாவின் பல பாடல்கள் நம்மை கொள்ளை கொண்டாலும், அவற்றில் சிலவற்றை மட்டுமே ‘மாஸ்டர் பீஸ்’ என கூறுவோம். அதில், மூடுபனி படத்தில் வெளியான ‘என் இனிய பொன் நிலாவே..’ பாடல் முதன்மையானது. எவர்கிரீனான இந்தப் பாடலை யுவன் தற்போது ரீ-க்ரீயேடே் செய்துள்ளார். பா. விஜய் இயக்கத்தில் உருவாகும் அகத்தியா படத்திற்காக இது ரீ-க்ரீயெட் ஆகியுள்ளது. இப்பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர TNSTC உத்தரவிட்டுள்ளது. ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான வார விடுமுறையை மாற்றியமைக்கவும், அத்தியாவசிய தேவைக்கு கிளை மேலாளர், மண்டல மேலாளரிடம் முன் அனுமதிபெற்று விடுப்பு எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய அணியின் தலைமை பொறுப்பை ஏற்காததற்கு ஏன் என்ற கேள்விக்கு முன்னாள் வீரர் அஸ்வின் சுவாரசியமாக பதிலளித்துள்ளார். “தன்னால் இதை சாதிக்க முடியாது என யாராவது கூறினால், அதை சாதிக்க வேண்டும் என்று வேலை செய்வேன். ஆனால் இந்திய அணிக்கு கேப்டனாகும் தனக்கு தகுதி இருப்பதாக பலர் தன்னிடம் கூறியதால் அதில் அக்கறை இல்லாமல் தூங்கிவிட்டேன்” என ஜாலியாக தெரிவித்துள்ளார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானை, அந்நாட்டு அரசு மாற்ற முடிவு செய்துள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மக்ரானை புது தலைநகராக மாற்றத் திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழல், தண்ணீர், மின் பிரச்னைகள், அதீத மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பிரச்னைகளால் இம்முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மத்திய ஆசியாவை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும், சர்வதேச வர்த்தகப் பாதையாக மக்ரானை உருவாக்க ஈரான் விரும்புகிறது.
வாரத்திற்கு 90 மணி நேரம் ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும் என L&T தலைவர் சுப்ரமணியன் பேசியதற்கு, தீபிகா படுகோன் ரியாக்ட் செய்துள்ளார். ஒரு பெரிய பதவியில் இருப்பவர், இது போன்று பேசுவது அதிர்ச்சி அளிப்பதாக, ‘Mental Health Matters’ என்ற ஹேஷ்டேக்குடன் அவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, கடந்த 2015ல் டிரஸ்ட் தொடங்கி, தீபிகா சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.