news

News January 10, 2025

சிறுதொழில்களுக்கு ₹100 கோடி வரை கடன் உத்தரவாதம்

image

MSMEகளுக்கு ₹100 கோடி வரை கடன் உத்தரவாதம் அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. சிறு நிறுவனங்கள் இயந்திரங்கள், உபகரணங்களை பிணையின்று வாங்க வழிவகை செய்யப்படும் என கடந்த பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்நிலையில், நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலும், ஊரகப் பகுதிகளில் தொழில் முனைவை ஊக்குவிக்கும் வகையிலும் இத்திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்தர உள்ளது.

News January 10, 2025

இந்த 2 மாவட்டங்களில் நாளை முதல் 9 நாட்கள் விடுமுறை

image

2 மாவட்டங்களுக்கு மட்டும் நாளை முதல் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை வருகிறது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர், உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசனத்தையொட்டி ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜன.13ஆம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஜன.11ஆம் தேதி சனிக்கிழமை முதல் 19ஆம் தேதி வரை தொடர்ந்து விடுமுறை வருகிறது.

News January 10, 2025

மக்களால் நேசிக்கப்பட்டவர் இந்திரா காந்தி!

image

மக்களால் பெரிதும் போற்றப்பட்ட தலைவர் இந்திரா காந்தி என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ‘எமர்ஜென்சி’ திரைப்படம் இந்திரா காந்தியின் வாழ்க்கையை உணர்வுப்பூர்வமாக சித்தரித்துள்ளதாகக் கூறினார். அவரை கண்ணியத்துடன் காட்சிப்படுத்த விரும்பியதாகவும், எமர்ஜென்சி காலத்தை தவிர்த்து, அவர் மக்களால் நேசிக்கப்பட்டவராக இருந்ததாகவும் தெரிவித்தார்.

News January 10, 2025

தவெக இன்று முக்கிய ஆலோசனை

image

தவெக மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மார்ச்சில் இருந்து விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியானது. இது குறித்தும் நிர்வாகிகளுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

News January 10, 2025

பொங்கல் விடுமுறை: இன்று முதல் சிறப்பு பேருந்துகள்

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையில் இருந்து 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்பு பேருந்துகள் என 4 நாள்களுக்கு மொத்தம் 14,104 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 7,800 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மொத்தமாக 21,904 பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News January 10, 2025

ஈரோடு(கி) இடைத்தேர்தல்: இன்று முதல் வேட்புமனு தாக்கல்

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அத்தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் காலமானார். இதைத் தொடர்ந்து, பிப். 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என EC அறிவித்தது. இந்நிலையில், பொங்கல் மற்றும் வார இறுதி நாள்கள் நீங்கலாக ஜன. 10, 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 10, 2025

ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

image

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலையில் நம்பெருமாள் கோயிலில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்தனர். ரத்னாங்கி அலங்காரத்தில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளிய நம்பெருமாளை கண்ட பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா…” என முழக்கமிட்டு, பக்தி பரவசம் அடைந்தனர்.

News January 10, 2025

இதுதான் ஜீனீ… The robot..!

image

அமெரிக்காவைச் சேர்ந்த TOMBAT என்ற நிறுவனம் ‘ஜீனீ’ என்ற ரோபோ நாய்க்குட்டியை உருவாக்கியுள்ளது. பார்ப்பதற்கு லாப்ரடார் வகை நாய் வகையைபோல காட்சியளிக்கும் இந்த ரோபோ, அல்சைமர் மற்றும் டிமென்ஷியா மறதி பாதிப்புள்ள வயதானவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடுதல் மற்றும் குரல் கட்டளைகளுக்கு பதிலளிக்கும் இந்த நாய் ரோபோ, AI மூலம் உருவாக்கப்பட்ட குரலில் குரைக்கும்.

News January 10, 2025

ஒரே நாளில் 3 படங்கள் ரிலீஸ்!

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ஒரே நாளில் 3 திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’, பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வணங்கான்’, சோனு நிகம், கலையரசன் ஆகியோர் நடித்துள்ள ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இதில் நீங்கள் பார்க்க விரும்பும் திரைப்படம் எது? கமெண்டில் சொல்லுங்க.

News January 10, 2025

மியான்மர் ராணுவ தாக்குதலில் 40 பேர் பலி

image

மியான்மர் ராணுவம் விமானப்படை மூலம் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவத்திற்கும், ஆயுதம் ஏந்திய இன சிறுபான்மையினர், புரட்சி குழுக்கள் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதில் பல பகுதிகளை ஆயுதக் குழு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்நிலையில், ராம்லீ தீவில் மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

error: Content is protected !!