India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொடைக்கானலில் சுற்றுலா சென்ற இளைஞர்கள் அங்கு போதைக் காளானை தேடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாவதை தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், இப்படி மற்ற போதைகளை தேடி அலைவது “நாடு எங்கே செல்கிறது?” என்று கேட்க வைக்கிறது. இதற்கெல்லாம் யார்தான் வேலி போடுவது? நீங்களே சொல்லுங்க.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹520 குறைந்தது. நேற்று ₹57,080ஆக இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று ₹56,560ஆக குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்று ₹7,135க்கு விற்பனையான நிலையில் இன்று ₹65 குறைந்து ₹7,070க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹99க்கு விற்பனையாகிறது.
இந்தியப் பெருங்கடலில் உருவான ‘சீடோ’ புயல் தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் பகுதிகளில் 1000க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியிருக்கிறது. மிக தீவிர புயலாக இருந்த சீடோ, அப்பகுதியில் இருந்த தீவுக்கூட்டங்கள், மொசாம்பிக்யூ ஆகிய நாடுகளில் கோர தாண்டவம் ஆடியிருக்கிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தங்களது உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்திய பங்குச்சந்தைகள் நான்காவது நாளாக இன்றும் கடும் சரிவினை சந்தித்திருக்கின்றன. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்திலேயே தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 300 புள்ளிகளை இழந்து 23,883 புள்ளிகளிலும் சென்செக்ஸ் சுமார் 900 புள்ளிகளை இழந்து 79,160 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆகிறது. கடந்த 5 நாள்களில் இந்திய பங்குச்சந்தைகள் சுமார் 5% சரிந்திருக்கின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்வது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்ற அவைகளில் காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. அம்பேத்கர் பற்றி அமித் ஷா தவறாக பேசியதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்நிலையில், அமித் ஷா அவையில் மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
அம்பேத்கரை அவமதித்ததாக கூறி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக இன்று காலை 11.30 மணிக்கு திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அமித் ஷாவை கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுகவினர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பார்லிமென்ட்டில் அவர் அம்பேத்கர் குறித்து பேசியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார் நடிகர் Y.G.மகேந்திரன். ”தேர்தல் நேரத்தில் யாருக்கு பிடிக்குதோ அவங்களுக்கு ஓட்டு போட்டுட்டு போயிட்டே இருக்கனும். எதுக்கு ரெண்டு தடவை, மூனு தடவை ஓட்டு போடனும்?” என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்த உங்களது கருத்தை பதிவு பண்ணுங்க.
தன்னிடமிருந்து 2 மடங்கிற்கு மேல் கடன் வசூலித்துள்ளதாக விஜய் மல்லையா குற்றம் சாட்டியுள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வட்டியுடன் சேர்த்து தான் பெற்ற கடன் மதிப்பு ₹6,203 கோடி எனவும், தனது சொத்துகளை விற்றதன் மூலம் ED ₹14,131 கோடியை வங்கிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதை மத்திய அரசு நியாயப்படுத்தாவிடில், சட்டப்பூர்வமாக நிவாரணம் தேட முயற்சிப்பேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் பாலா திரைத்துறையில் காலடி பதித்து 25 ஆண்டு ஆனதை கொண்டாடும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது பாலா “சூர்யா இருக்கும்பொழுது புகைபிடிக்க மாட்டேன். அதற்குக் காரணம் சிகரெட் பிடிக்கும் பொழுது அதை பார்க்கும் மற்றவர்கள் அட்வைஸ் தான் செய்வார்கள். ஆனால் சூர்யா மட்டும்தான் வருத்தப்படுவார். ஒரு நடிகரால் வருத்தப்பட முடியாது, தம்பியாக இருந்தால் மட்டுமே வருத்தப்பட முடியும்” என்றார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பீஜிங்கியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, இருநாட்டு உடனான எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கைலாஷ் – மானசரோவர் யாத்திரை, நாதுலா எல்லை வர்த்தகம், இரு நாடுகளுக்கான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட 6 விவகாரங்களுக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.