India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தான் ஓய்வை அறிவித்ததற்கான காரணம் குறித்து மனம் திறந்திருக்கிறார் அஷ்வின். BGT தொடரில் முதல் 2 டெஸ்டுகளில் ஒன்றில் மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டதால் தன் கிரியேட்டிவிட்டி மறைந்துவிட்டதாக அவர் கூறுகிறார். இன்னும் விளையாட ஆர்வம் இருந்தாலும், வாய்ப்பு இருந்தால் தானே முடியும்? farewell டெஸ்ட் ஆட மட்டுமே டீமில் இருக்கிறோம் என்றால்? ஆகவே, பிளேயர்கள் ஏன் ஓய்வு பெறுகிறார்கள் என்பதையும் கேளுங்கள் என்றார்.
ராகுலும், அவரை சுற்றியுள்ளவர்களும், இந்தியாவை அவமதிக்க விரும்பும் அர்பன் நக்சல்களுடன் தொடர்பில் இருப்பது ஒன்றும் ரகசியம் அல்ல என மத்திய அமைச்சர் நட்டா விமர்சித்துள்ளார். பாஜக, RSS மட்டுமின்றி, இந்திய அரசையும் எதிர்த்து போராடுவதாக ராகுல் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த அவர், இவர்களின் அதிகார பேராசை நாட்டின் ஒருமைப்பாட்டை சமரசம் செய்வதையும், நாட்டு மக்களின் நம்பிக்கையை கெடுப்பதிலும் உள்ளது என்றார்.
லாஸ்ஏஞ்செல்சில் எரியும் காட்டுத் தீயால் இந்தாண்டுக்கான ஆஸ்கர் விழா ரத்து செய்யப்படும் சூழல் நிலவுவதாக பிரிட்டனை சேர்ந்த தி சன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இதை மற்ற ஊடகங்களும் வெளியிட்டன. ஆனால் இந்த செய்திகளை ஆஸ்கர் அகாடமி உறுதியாக மறுத்துள்ளது. ஏற்கெனவே திட்டமிட்டபடி மார்ச் 2ஆம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட TN அரசே காரணம் என வெளியான தகவலுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார். அதில், இத்திட்டத்தில் TN அரசிடம் எந்த நிலப்பிரச்னையும் இல்லை என்று கூறிய அவர், தூத்துக்குடி குறித்த கேள்வியை, தான் தனுஷ்கோடி என புரிந்துகொண்டு பதிலளித்ததாகவும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இந்த வருடம் வெளிவரவுள்ள தமிழ் படங்களில் பெரிய படங்களை நெட்ஃபிளிக்ஸ் தன்வசம் ஈர்த்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் பண்டிகை என்ற பெயரில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதில், அஜித்தின் விடாமுயற்சி, GBU, சூர்யாவின் ரெட்ரோ, பிரதீப் ரங்கநாதனின் டிராகன், பெயரிடப்படாத மற்றொரு படம், மாரிசெல்வராஜின் பைசன், துல்கர் சல்மானின் காந்தா என தற்போது வரை 8 படங்களை உள்ளன. இன்னும் எத்தனை படங்கள் லிஸ்ட்ல இருக்கோ?
குவாலியரில் போலீஸ் கண்முன்பு மகளை சுட்டுக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார். மகேஸ் குர்ஜார் தனது மகள் தனுக்கு திருமணம் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் தனு, விக்கி என்பவரை காதலிப்பதாகவும், குடும்பத்தினர் மிரட்டுவதாகவும் கூறி வீடியோ வெளியிட்டார். போலீசார், பஞ்சாயத்தார் சென்று பேச்சு நடத்தியபோது, ஆத்திரமடைந்த மகேஸ் சுட்டுக் கொன்றார். திருமணத்திற்கு 4 நாள்களே இருந்தது குறிப்பிடத்தக்கது.
திடீர் Heart Attack-ஆல் உயிரிழப்பதை தடுக்க, ‘Ram Kit’-ஐ கான்பூர் ஹாஸ்பிடல் பரிந்துரைக்கிறது. இதில் Ecosprin, Rosuvastatin, Sorbitrate ஆகிய 3 tablets மட்டும் இருக்கும். இதன் மொத்த விலையே ₹7 தான். நெஞ்சுவலி வந்தால், உடனே இவற்றை உட்கொண்டால், இதய செயல்பாட்டை அது சீராக்கும். உடனே ஹாஸ்பிடலுக்கு சென்றால், உயிரிழக்கும் ஆபத்தை தடுக்கலாம். டாக்டரிடம் ஆலோசித்து, இந்த ‘kit’ஐ எப்போதும் கையில் வைத்திருங்கள்.
ஆதார் பயோ மெட்ரிக் சரிபார்த்த பிறகே, சிம் விற்பனை செய்வதை உறுதி செய்யும்படி தொலைத் தொடர்பு துறைக்கு பிரதமர் அலுவலகம் (PMO) உத்தரவிட்டுள்ளது. சிம்கார்டு மூலம் முறைகேடு நடைபெறுவதை தடுக்க, ஆதார் பயோ மெட்ரிக் சரிபார்ப்பை மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இதையும் மீறி முறைகேடுகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க PMO உத்தரவிட்டுள்ளது.
WHATSAPP செயலியில் உள்ள கேமராவில் புதிய அப்டேட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் WHATSAPP கேமரா மூலம் நாம் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து, பிறருக்கு அனுப்பும் முன்பு, அதில் 30 வகை பேக்ரவுண்டுகளை தேர்வு செய்து சேர்க்கலாம். அதை பில்டர் செய்யவும், பிறகு மாற்றங்களை செய்யவும் முடியும். செல்பி ஸ்டிக்கரையும் சேர்க்கலாம். முதல்கட்டமாக ஆன்ட்ராய்டில் இது அறிமுகமாகியுள்ளது.
ஆட்சியில் இருப்பவர்களுக்கு தேசியக் கொடி மீதும், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லை என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். அவர்கள் இந்தியாவைப் பற்றி மாறுபட்ட பார்வைக் கொண்டுள்ளதாகவும், நாடு ஒரு மனிதனால் மட்டுமே வழிநடத்தப்பட வேண்டுமென விரும்புவதாகவும் சாடினார். அவர்களை தடுக்கும் எந்த கட்சியும் நாட்டில் இல்லை என்று கூறிய அவர், காங்., மட்டுமே அவர்களை எதிர்க்கும் ஒரே கட்சி எனவும் கூறினார்.
Sorry, no posts matched your criteria.