India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அஸ்வினுக்கு பிரிவு உபச்சாரப் போட்டியை BCCI ஏற்பாடு செய்ய வேண்டுமென, கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் வலியுறுத்தியுள்ளார். 130 கோடி மக்களின் முகத்தில் வெற்றி புன்னகையை ஒளிர செய்த இந்திய கிரிக்கெட் அணிக்கு பங்களித்த சேவாக், VVS லக்ஷ்மண், தோனி, கம்பீர், ஜாகீர் போன்ற சிறந்த வீரர்கள் பலர் ஓய்வு பெற்றபோது, BCCI முறையாக பிரிவு உபச்சாரம் செய்ததில்லை. அந்த குறையை BCCI வருங்காலத்திலாவது தீர்க்குமா?
பெஞ்சல் புயலால் பெய்த கனமழையின் காரணமாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 12ஆம் தேதி நடைபெறவிருந்த 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது அந்த மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பியதையடுத்து, ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் அங்கு நாளை மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
சிவா இயக்கத்தில் 5வது முறையாக அஜித் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அவர் இயக்கிய ‘கங்குவா’ படம் அதிர்ச்சி தோல்வியடைந்ததால் சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே மீண்டும் அஜித்தை சந்தித்து வெங்கட் பிரபு ஒரு கதையை சொல்லி இருக்கிறார். இதன் காரணமாக இருவரில் யாருடைய இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத் (NHRC) தலைவராக ஓய்வுபெற்ற SC தலைமை நீதிபதி சந்திரசூட்டை நியமிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 4 பேர் கொண்ட தேர்வுக் குழுவில் உள்ள பிரதமர் மோடி, அமித்ஷா முன்மொழிவுக்கு அதே குழுவில் இடம்பெற்றுள்ள ராகுல், கார்கே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நியமனத்தை எதிர்க்கும் காரணங்களை விளக்கி, குழுத்தலைவரிடம் விரிவான அறிக்கையை இருவரும் சமர்ப்பிக்க உள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் பாரத் ஹீரோவாகவும், ‘கட்சி சேரா’ சம்யுக்தா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பொம்மை துப்பாக்கிகளுடன் இருவரும் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளிவந்த இந்த ப்ரோமோவில் வரும் லோகேஷ், படத்தில் துப்பாக்கி இருக்காது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1,176 புள்ளிகள் சரிவை சந்தித்து 78,041 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி குறியீடு 364 புள்ளிகள் சரிந்து 23,587 புள்ளிகளாக இருந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை அதிகம் விற்றதே வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. பங்கு மதிப்பு சரிவால் முதலீட்டாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
<
நாதகவில் இருந்து விலகும் நிர்வாகிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி விலகுவோர் சீமான் மீது சரமாரியாக குற்றச்சாட்டை வைக்கின்றனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட நாதகவினர் 500-க்கும் மேற்பட்டோர் இன்று கட்சியிலிருந்து விலகியுள்ளனர். கட்சிக்காக உழைத்த தங்களை எச்சில் என சீமான் கூறுவதாகவும், புதிதாக வருவோரை தூக்கி வைத்து கொண்டாடுவதாகவும் அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட CSK கேப்டன் ருதுராஜ், பேச தொடங்கியதும் அவரின் மைக் ஆஃப் ஆனது. உடனே தொகுப்பாளர் மைக்-ஐ யார் ஆஃப் செய்தது என கேள்வி எழுப்ப, உடனடியாக ருதுராஜ் RCB ரசிகர்கள் யாராவது ஆஃப் செய்திருப்பார்கள் எனக் கிண்டலாக கூறினார். காமெடியாக அவர் இப்படி கூறினாலும், இரு அணிகளின் ரசிகர்களும், இதை வைத்து இணையத்தில் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பார்லிமென்ட் நடவடிக்கைக்கு ஏற்பட்ட இடையூறு மூலம் மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகிறோம் என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மக்களின் நன்மைக்காக சேவை செய்ய கிடைத்த பொன்னான வாய்ப்பை வீணடித்தோம். எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான இடையூறுகள், ஜனநாயக அமைப்புகளின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைத்து வருகின்றன. இது கவலை அளிக்கிறது என்றார்.
Sorry, no posts matched your criteria.