India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜன.12இல் BCCIக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ICC தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்ற நிலையில், அவர் வகித்துவந்த BCCI செயலாளர் பதவி காலியானது. இந்நிலையில், செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை நிரப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது. செயலாளர் பதவிக்கு தேவ்ஜித் சைகியா, அனில் படேல், ரோகன் ஜெட்லி ஆகியோர் களத்தில் உள்ளனர். தற்போது, சைகியா இடைக்கால செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு, தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் இருப்பது தெரிந்ததே. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், இந்த வழக்கு பூதாகரமாக மாறலாம். கடந்த இடைத்தேர்தலின்போது, பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தது. இதன் காரணமாக EPS – OPS இடையே மோதல் முற்றாமல் இருந்தது. தற்போது நிலைமை அப்படியில்லை என்பதால், அதிமுக மேலிடம் கலக்கத்தில் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
22 கேரட் தங்கம் விலை 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023இல் 15%மும், 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024இல் 22%மும் அதிகரித்துள்ளது. இந்த விலையுடன் ஒப்பிடுகையில், 18 கேரட் தங்கத்தின் விலை மிகக் குறைவாகும். அத்துடன் 22 கேரட் தங்கத்துடன் ஒப்பிடுகையில் 18 கேரட் தங்கம் வலுவானதாகும். ஆதலால் நகை பிரியர்கள் தற்போது 18 கேரட் தங்கத்திற்கு மாறி வருவதால், அதன் விற்பனை 5%இல் இருந்து 15%ஆக அதிகரித்துள்ளது.
சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற புழுத்துப்போன பொய்யை எதிர்க்கட்சித் தலைவர் EPS மீண்டும் பாடத் தொடங்கியிருக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார். அதிமுக ஆட்சியில், தூத்துக்குடியில் போராடிய அப்பாவி மக்கள் 13 பேரை சுட்டுக் கொன்ற EPS-க்கு, திமுக அரசைப் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என சாடிய அவர், அப்போது குற்றச்செயல்கள் பெருகி மக்கள் தவித்துக் கிடந்ததை EPS மறந்து விட்டாரா எனவும் வினவியுள்ளார்.
பெட்ரோல், கேஸ் விலை தொடங்கி மளிகை, காய்கறிகள், எலக்ட்ரானிக்ஸ், பால், போன் என வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளின் விலையும் அதிவேகத்தில் உயர்கின்றன. ஏன், அரசாங்கம் விதிக்கும் வரிகளும்தான். ஆனால், சாதாரண மக்களின் வருமானமோ உயரவே இல்லை. மாறாக இன்னும் குறைந்து வருகிறது. விலையேற்றத்துக்கு காரணம் சொல்லும் அரசுகள், மக்களின் வருமானம் உயராததற்கு காரணம் சொல்வதில்லையே ஏன்?
குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். *இரவில் தயிர் சாப்பிடுவதை தவிருங்கள். பதிலாக மோர் குடிக்கலாம். *அளவோடு சாப்பிடுங்கள். அதிக உணவு வேண்டாம். *பருப்பு, பச்சை காய்கறிகள் போன்ற புரத உணவு சாப்பிடலாம். *இஞ்சி சேர்த்த பாலை குடிக்கலாம். *அதிக உப்பு உணவை எடுக்க வேண்டாம்
விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரிசியை குறைந்த விலையில் “பாரத் அரிசி” என்ற பெயரில் மத்திய அரசு விற்று வருகிறது. அதேபோல், சமையலுக்கு தினசரி பயன்படுத்தும் பருப்பையும் “பாரத் தால்” என்ற பெயரில் விற்கிறது. தற்போது அந்த பருப்பை அமேசான், பிளிப்கார்ட், பிக்பாஸ்கட், ஸ்விக்கி உள்ளிட்ட ஆன்லைன் தளங்களிலும் விற்கவுள்ளது. என்ன HAPPY தானே இல்லத்தரசிகளே?
கோவை குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான பாஷா அண்மையில் காலமானார். அப்போது சீமான் அவரை ‘அப்பா’ எனக் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை, கோவை குண்டுவெடிப்பில் இறந்துபோன 50 பேருக்கு அப்பா இல்லையா எனக் கேள்வியெழுப்பினார். மேலும், பாஷாவை அப்பா என சொல்லி, வெட்கமே இல்லாமல் சீமான் ஓட்டுப் பிச்சை வாங்குவதாகவும் அண்ணாமலை விமர்சித்தார்.
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில், கடந்த 43 ஆண்டுகளில் 12 முறை விவாகரத்து செய்து மீண்டும் இணைந்து வாழ்ந்துவரும் தம்பதியினர் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர். கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு, அந்நாட்டு அரசு வழங்கும் ₹24 லட்சம் உதவித்தொகை கொடுக்கிறது. அதை வாங்கவே விவாகரத்து முறையை சாதகமாக பயன்படுத்தி, இத்தம்பதி 12 முறை மறுத்திருமணம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இப்படி ஒரு திட்டம் இருந்தால்?
அஸ்வினுக்கு பிரிவு உபச்சாரப் போட்டியை BCCI ஏற்பாடு செய்ய வேண்டுமென, கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் வலியுறுத்தியுள்ளார். 130 கோடி மக்களின் முகத்தில் வெற்றி புன்னகையை ஒளிர செய்த இந்திய கிரிக்கெட் அணிக்கு பங்களித்த சேவாக், VVS லக்ஷ்மண், தோனி, கம்பீர், ஜாகீர் போன்ற சிறந்த வீரர்கள் பலர் ஓய்வு பெற்றபோது, BCCI முறையாக பிரிவு உபச்சாரம் செய்ததில்லை. அந்த குறையை BCCI வருங்காலத்திலாவது தீர்க்குமா?
Sorry, no posts matched your criteria.