India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஷேக் ஹசீனா உள்பட 11 பேரை பிடிக்க இண்டர்போலின் உதவியை வங்கதேச இடைக்கால அரசு நாடியுள்ளது. இடைக்கால அரசை கவிழ்க்க சதி மற்றும் உள்நாட்டு போரை ஏற்படுத்த முயன்ற குற்றத்திற்காக ரெட் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு இண்டர்போலிடம் வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ரெட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா நாடுகடத்தப்பட்டு கைது செய்யப்படுவார்.
தவெக தலைவர் விஜய், தனது X பதிவில் போட்டிருக்கும் வாழ்த்து சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் புத்தாண்டு தினமான ஏப்.14 அன்று வெறுமனே சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் என பதிவிட்டிருந்தார். ஆனால், ஈஸ்டர் திருநாளுக்கு உவகையுடன் அனைவருக்கும் வாழ்த்துகள் என அலங்கார புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். தமிழ் புத்தாண்டு என நேரடியாக விஜயால் வாழ்த்து கூற முடியாதா என நெட்டிசன்கள் மனம் குமுறி வருகின்றனர்.
4 காதலர்களுடன் சேர்ந்து மனைவி ரிடான்ஷி ஷர்மா தன்னை கொல்ல சதித்திட்டம் தீட்டுவதாக உ.பி.யைச் சேர்ந்த கவுரவ் ஷர்மா போலீசில் புகார் அளித்துள்ளார். 1,200 பக்க மொபைல் ஸ்க்ரீன்ஷாட் ஆதாரங்கள், வீடியோக்களுடன் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை கொன்றுவிட்டு, இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுக் கொள்ள மனைவி திட்டம் போடுவதாகவும், குடித்துவிட்டு தன்னை அடிக்கடி அடிப்பதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்லோ ஓவர் ரேட் குற்றத்திற்காக குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு BCCI ₹12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. நேற்றைய டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இருப்பினும், பந்துவீச்சின் போது டெல்லி வீரர்கள் ரன் குவிப்பதை தடுப்பதற்காக, பந்துவீச அந்த அணி நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2026 தேர்தலில் திமுகவுக்கு பூஜ்ஜியமும், அதிமுகவுக்கு ராஜ்ஜியமும் கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வியை சந்திக்கும் என CM ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், அவர் இந்த பதிலை கொடுத்துள்ளார். திமுகவால் இந்த கூட்டணியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
இந்தியாவுக்கு நாளை குடும்பத்துடன் வரும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அக்ஷர்தாம் கோயில், தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறார். டெல்லி வந்திறங்கியதும் பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர், பிரதமர் அளிக்கும் விருந்தில் பங்கேற்றப் பின், இரவே ஜெயப்பூர் புறப்பட்டு செல்கிறார். அங்கு ராம்பாக் அரண்மனையில் குடும்பத்துடன் தங்கவுள்ளார்.
*தர்பூசணியை தட்டிப் பார்த்து வாங்கவும். கனமான சத்தம் வந்தால் அது நன்கு பழுத்து இனிப்புச் சுவையுடன் இருக்கும். *அதிக எடையுடன் கனமாக இருக்கும் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருக்கும். *நீளவாக்கில் உள்ள தர்பூசணியை விட உருண்டையாக இருக்கும் பழம் அதிக இனிப்புடன் சுவையாக இருக்கும். *தோல் அடர் பச்சை நிறத்தில் கடினமாக இருந்தால் அந்த தர்பூசணி பழுத்து இனிப்பாக இருக்கும். நோட் பண்ணீங்களா? ஷேர் பண்ணுங்க..!
துரை வைகோவின் ராஜினாமாவை மதிமுக ஏற்கவில்லை. சென்னையில் நடைபெற்று வரும் அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் துரை வைகோ மேடையில் அமர்ந்துள்ளார். அதோடு, இக்கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும், பிரதமர் மோடி இலங்கையுடன் ராணுவ ஒப்பந்தத்திற்கு கண்டனம் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் துரை வைகோவை முதன்மைச் செயலாளர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் அமித் ஷா, சில ஹெல்த் டிப்ஸ்களை வழங்கியுள்ளார். தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி, 6 மணி நேர தூக்கத்தை கடைபிடைத்தால் உடல் ஆரோக்யமாக இருக்கும் எனவும், கடந்த 4 ஆண்டுகளாக இதை ஃபாலோ செய்து உடல் எடை, சர்க்கரை நோயில் இருந்து மீண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வயதிலும் எந்த மாத்திரைகளையும் எடுத்து கொள்வதில்லை எனவும் கூறியுள்ளார்.
பழைய படங்களை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து கல்லா கட்டி வருகின்றனர். ‘கில்லி’, ‘சச்சின்’ போன்ற படங்கள் எதிர்பார்த்ததை விட வசூலை வாரிக்குவித்தன. அந்த வகையில், நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வீரம்’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ‘சச்சின்’ படத்தை போலவே நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு ரிலீசாகிறது. கடந்த 2014-ல் வெளியான இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார்.
Sorry, no posts matched your criteria.