India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டெல்லியில் காற்று மாசு காரணமாக மக்கள் ஒவ்வொரு நாளும் தவித்து வருகின்றனர். இந்நிலையில், காற்று மாசு பலி குறித்து அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. இந்தியாவில் 2022-ம் ஆண்டில் 17.2 லட்சம் பேர் காற்று மாசுபாடு காரணமாக பலியாகியுள்ளதாக, The Lancet Countdown on Health and Climate Change அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிரிழப்பு, 2010-ம் ஆண்டிலிருந்து 38% அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு வரும் பன்னாட்டு பறவைகளில் மிக அழாகன பறவை ஃபிளமிங்கோ. இவை குளிர்காலத்தின் தொடக்கத்தில் தூத்துக்குடி, தனுஷ்கோடி, கோடியக்கரை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளுக்கு கூட்டம் கூட்டமாக வருகின்றன. இந்தாண்டும் நூற்றுக்கணக்கான ஃபிளமிங்கோக்கள் தூத்துக்குடி கடலோர பகுதிகளில் குவிந்துள்ளன. இளஞ்சிவப்பு நிற இறகுகள் கொண்ட கண்களை கவரும் ஃபிளமிங்கோவின் போட்டோஸை, மேலே பகிர்ந்துள்ளோம்.

‘பாகுபலி The Epic’ சினிமா ரசிகர்கள் தவறவிடக்கூடாத ஒரு அனுபவம். பார்த்து பழகியது என்றாலும், Goosebumps-க்கு குறைவே இல்லை. முதல் 2 பாகங்களின் 90 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டாலும், அது பெரிதாக பாதிக்கவில்லை. பிரபாஸ் மகிழ்மதிக்கு மீண்டும் திரும்பும் காட்சி கூடுதல் மாஸாக உள்ளது. தமன்னாவின் சீன்களை கட் செய்தது மட்டும் வேதனை அளிக்கிறது. கடைசியில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி.

கரூர் சம்பவத்தை CBI அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இதனிடையே, தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற CBI அதிகாரிகள், தற்போது மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். வேலுச்சாமிபுரத்தில் உள்ள டீக்கடையில் விசாரணை செய்த அவர்கள், CCTV கேமராக்களை ஆய்வு செய்தனர். விஜய் பேசிய இடத்தின் அமைப்பு, பரப்பு போன்றவற்றை நவீன கருவிகளுடன் முப்பரிமாண கோணத்தில் பதிவு செய்த அதிகாரிகள், அங்குள்ள மக்களிடமும் விசாரணை நடத்தினர்.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை காக்க மாதம் ₹1000-ஐ NPS வாத்சல்யா திட்டத்தில் முதலீடு செய்யலாம். 18 ஆண்டுகள் முதலீடு செய்யும் பட்சத்தில், வட்டி எல்லாம் சேர்த்து மொத்த தொகை ₹8,48,000-ஆக இருக்கும். உங்கள் குழந்தைக்கு 18 வயதான பிறகு 80% தொகையை எடுத்து அவர்களின் படிப்பு செலவுக்கு பயன்படுத்தலாம். <

Cakes, chips, cookies, crackers, fried foods, margarine & ultra processed உணவுகளை அதிகம் சாப்பிடுவது தான் இந்தியர்களிடையே சர்க்கரை நோய் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ICMR- MDRF இணைந்து நடத்திய ஆய்வில், இவ்வகை உணவுகளில் நிறைந்திருக்கும் Glycation end products (AGEs) எனப்படும் உட்பொருட்கள், நச்சுத்தன்மையை உண்டாக்கி சர்க்கரை நோய்க்கு வழிவகுப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உஷாரா இருங்க மக்களே!

நாய்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சண்டிகர் மாநகராட்சியில் 6 வகை நாய்களை வளர்க்கவும், வாங்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. American bulldog, American Pitbull, Bull Terrier, Rottweiler, Cane Corso, Dogo Argentino போன்ற நாய்கள் உயிருக்கு அச்சுறுத்தலான விலங்கு என பட்டியலிடப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இது போன்ற நடவடிக்கை தேவையா?

தவெக பொதுக்கூட்டங்கள், பிரசாரம், மக்கள் சந்திப்பு நிகழ்வுகளில் பாதுகாப்பு திட்டமிடலுக்காக காவல் துறையில் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை உருவாக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற IB இயக்குனர், DGP, ADGP உள்ளிட்ட 15 அதிகாரிகள் இடம்பெறுகின்றனர். இந்த அதிகாரிகள் குழு பாதுகாப்பு திட்டமிடல், கட்சியின் தொண்டர் அணிக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்குவார்கள்.

கேரள மாநிலம் இடுக்கியில், கொலை வழக்கில் 82 வயது முதியவரான ஹமீத்துக்கு மரண தண்டனை விதித்து தொடுபுழா கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ல் ஹமீத் சொத்து தகராறில், உறங்கி கொண்டிருந்த தனது மகன், மருமகள் மற்றும் 2 பேரக்குழந்தைகளை எரித்து கொலை செய்தார். வழக்கு விசாரணையின் போது, இந்த கொலை அரிதிலும் அரிதானது என்ற பிரிவுக்குள் வருவதாக கூறி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

பெரும் வெற்றி பெற்ற ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநரும், நடிகருமான அபிஷன் ஜீவிந்துக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தனது நீண்ட நாள் காதலியான அகிலாவை பெற்றோர்கள் சம்மதத்துடன் அபிஷன் கரம் பிடித்தார். டூரிஸ்ட் பேமிலி படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்த அபிஷன், தற்போது செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.