India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்ற ஜனநாயகம் நாள்தோறும் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருவதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். ஆரோக்கியமான விவாதங்கள், கருத்து மோதல்கள் நடப்பதற்கு பதிலாக, கார்கே, ராகுல் ஆகியோர் வன்முறை நோக்கத்துடன் பாஜகவினர் தாக்க முற்பட்ட குற்றஞ்சாட்டிய அவர், இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துமாறு கேட்டுக்கொண்டார்.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் தமிழகத்தில் உள்ள 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னைக்கு 370 KM தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, அடுத்த 24 Hrsஇல் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மூல நோய் பிரச்னையில் இருந்து விடுபட சில டிப்ஸ்…
*ஆப்பிள், பேரிக்காய், பெர்ரி, வாழைப்பழங்கள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் அடிக்கடி சாப்பிடலாம்.
*ப்ராக்கோலி, கேரட் மற்றும் அனைத்து வகையான கீரை வகைகளும் மூல நோய் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தரும்.
*ஓட்ஸ், முழு கோதுமை பிரெட், பிரவுன் அரிசி, பார்லி போன்ற முழு தானிய உணவுகளை அவ்வபோது சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை, வங்கிகள் இன்னும் மேம்படுத்த வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். 180ஆவது மாநில அளவிலான வங்கிகள் குழு கூட்டத்தில் பேசிய அவர், விவசாயம், கல்விக் கடன்கள், வீட்டுக் கடன்கள், பெண் கடன்தாரர்கள், சிறுபான்மையினர், SC, ST பிரிவினர் உள்பட முன்னுரிமை பிரிவினருக்கு லோன் வழங்குவது குறித்து அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார்.
சாதிக்க வயது தடையில்லை என்பதை இந்த 8 வயது சிறுமியின் அசாத்திய திறமை நிரூபிக்கிறது என்றால் அது மிகையாகாது. உடலை முறுக்கி செய்யக்கூடியது கமர் மரோதாசனம். இந்த ஆசனத்தை ஒரே நிமிடத்தில் சுமார் 45 முறை செய்துள்ளார் அந்த சிறுமி. அவரது இந்த முயற்சி, International, Worldwide, International Yoga ஆகிய 3 உலக சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது. இதையடுத்து சாதனை சிறுமிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
▶டிசம்பர் 21 (மார்கழி 6) ▶சனி ▶நல்ல நேரம்: 07:45 – 08:45 AM, 05:15 – 06:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 – 11:45 AM, 09:30 – 10:30 PM ▶ராகு காலம்: 09:00 – 10:30 AM ▶எமகண்டம்: 01:30 – 03:00 PM ▶குளிகை: 06:00 – 07:30 AM ▶திதி: 03:10 PM வரை சஷ்டி பின்பு சப்தமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶நட்சத்திரம்: 06:53 AM வரை மகம் பின்பு பூரம் ▶சந்திராஷ்டமம்: 06:53 AM வரை உத்திராடம் பின்பு திருவோணம்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3ஆவது T20 போட்டியில் வங்கதேசம் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் விளையாடிய BAN, 189/7 ரன்கள் குவித்தது. 190 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய WI, 16.4 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதன்மூலம் 3 போட்டிகளில் கொண்ட T20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று, WI அணியை ஒயிட்வாஷ் செய்தது BAN அணி.
2025ஆம் ஆண்டு பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச அதரவு விலக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை வழங்கியுள்ள ஒப்புதலின்படி அரவை கொப்பரை குவிண்டால் ஒன்றுக்கு ₹11,582 மற்றும் அரவைக்கு முந்தைய கொப்பரை, குவிண்டாலுக்கு ₹12,100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶குறள் இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 124 ▶குறள்:
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
▶பொருள்: உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.
கடலூர் NLC சுரங்க விவகாரத்தில் CM ஸ்டாலினுக்கு கோவம் வராதது ஏன்? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை சுட்டிக்காட்டிய அவர், கடலூரிலும் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், 1956ஆம் ஆண்டிலிருந்து 50,000 ஏக்கர் விவசாய நிலங்களை NLC நிர்வாகம் அழித்துவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
Sorry, no posts matched your criteria.