India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கல் முடிந்து பணிபுரியும் இடங்களுக்கு மக்கள் திரும்ப சிறப்பு பஸ்கள் உள்ளிட்ட கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், புகார் அளிக்க அரசு தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி, அரசு பஸ் எனில் 94450 14436 எண்ணிலும், தனியார் ஆம்னி பஸ் எனில் 1800 425 6151, 044-24749002, 044-26280445, 044-26281611 எண்களில் புகார் அளிக்கலாம். SHARE IT.
புதிதாக அமைக்கப்பட உள்ள 8-வது ஊதிய கமிஷன், இன்றைய சூழலுக்கு ஏற்ப புதிய ஊதிய விகிதத்தை பரிந்துரைக்கும். Fitment factor அடிப்படையில், மத்திய அரசுப் பணியாளர்கள் பலருக்கும் 186% வரை ஊதியம் உயரும். இதற்கு ஒப்புதல் கிடைத்தால், குறைந்தபட்ச ஊதியம் என்பது தோராயமாக ₹18,000-லிருந்து ₹51,480 ஆக உயரும். ஊதிய உயர்வால் மத்திய அரசின் 67.85 லட்சம் பணியாளர்களும், 48.62 லட்சம் பென்ஷன்தாரர்களும் பயனடைவர்.
இரவில் சயிப், தன் 2 மகன்களுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 2 மணி அளவில் கொள்ளையன் வீட்டுக்குள் நுழைந்ததாக அங்கு வேலை செய்பவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். கொள்ளையனை பார்த்து வேலைக்காரர் கூச்சலிட, சத்தம் கேட்டு எழுந்து வந்த சயிப்பை பார்த்த அந்நபர் தாக்க தொடங்கி இருக்கிறார். இந்த சண்டையில், கொள்ளையன் கத்தியால் குத்தியதில் சயிப் சரிந்து விழுந்தார். சயிப்பின் <<15169484>>உடல்நிலை<<>> தேறி வருகிறது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். காளை முட்டியதில் பலத்த காயமடைந்து திருச்சி ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்ட பார்வையாளர் குழந்தைவேலு உயிரிழந்தார். அதேபோல், சேலம் ஆத்தூர் செந்தாரப்பட்டியில் எருதாட்டம் நிகழ்ச்சியில் காளை முட்டியதில் சாலையோரம் நடந்து சென்ற மணிவேல் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
விண்வெளி ஆராய்ச்சியில் வல்லரசு நாடுகளுடன் போட்டிப் போடும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கி வரலாறு படைத்த இஸ்ரோ, இன்று SpaDeX Docking முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. இது குறித்து DoT India சுவாரஸ்யமான ட்வீட்டை வெளியிட்டது. அதில் 1963இல் ராக்கெட் உபகரணங்களை சைக்கிளில் எடுத்துச் சென்றதையும், SpaDeX பயணத்தையும் ஒப்பிட்டுள்ளது.
8-வது ஊதிய கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2026-ம் ஆண்டு முதல் சம்பளம் உயரும். இந்நிலையில், டெல்லியில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இந்த அறிவிப்பு வெளியானதை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள் சிலர், டெல்லியில் தான் மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம். ஆகவே, இந்த அறிவிப்பில் தேர்தல் கணக்கும் உள்ளது என்கின்றனர்.
ஜன. 17 Aha தமிழில் சிவாவின் சூது கவ்வும் 2, பரத்தின் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ், பேமிலி படங்கள் வெளியாகின்றன. Sony Livல் மலையாளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த ஜோஜு ஜார்ஜின் பானி, ஆக்ஷன் படமான ரைப்பில் கிளப் Netflix தளத்திலும், பிரேமலு ஹீரோ நடித்த ஐ அம் காதலன் Manorama Max தளத்திலும் வெளி வருகின்றன. முதல் சீசன் வெற்றியை அடுத்து பத்தாள் லோக் சீசன் 2 Amazon prime ஒளிப்பரப்பாகிறது.
இந்திய அஞ்சல் துறை ‘ரெகரிங் டெபாசிட்’ திட்டத்தில் முதலீடு செய்தால், ரூ.8 லட்சம் வரை பெறலாம். இந்த திட்டத்தில் மாதந்தோறும் ரூ.5000 டெபாசிட் செய்யவும். இதற்கு 6.7% வட்டி கிடைக்கும். கூட்டு வட்டியும் உண்டு. 5 ஆண்டுகள் முதலீடு செய்தால், முடிவில் ரூ.3,56,830 கிடைக்கும். 10 ஆண்டுகள் முதலீடு செய்தால், ரூ.8,54,272 கிடைக்கும். இதுதவிர, கடன் பெற வசதியும் உண்டு. அஞ்சலகத்தில் மேலதிக விவரங்களை பெறலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. 8-வது மத்திய ஊதிய கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்றைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப, அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆராய்ந்து இந்த கமிஷன் பரிந்துரைகள் வழங்கும். கடைசி ஊதிய உயர்வு, 2016, ஜன., 1 முதல் அமலுக்கு வந்ததால், அடுத்த சம்பளத்தை, ஜன., 1. 2026 முதல் மாற்றி அமைக்க வேண்டும் என தெரிகிறது.
ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்படுவதன் எதிரொலியாக அதானி நிறுவனத்தின் பங்குகள் இன்று உயர்வை கண்டுள்ளன. குறிப்பாக, அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் 4.16% உயர்ந்து ₹2,485க்கும், அதானி பவர்ஸ் 4.79% உயர்ந்து ₹576க்கும், அதானி க்ரீன் எனர்ஜி 4.91% உயர்ந்து ₹1,086க்கும் அதானி போர்ட்ஸ் 3.16% உயர்ந்து ₹1,172க்கும் விற்பனையாகின்றன. முன்னதாக அதானி நிறுவனம் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
Sorry, no posts matched your criteria.