India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2025-ல் இந்தியாவின் இணைய பயனர்களின் எண்ணிக்கை 90 கோடியாக உயருமென இந்திய இணையம் & மொபைல் சங்கம் கணித்துள்ளது. அதன் அறிக்கையில், 2024ஆம் ஆண்டில் 88.6 கோடி பேர் இணையத்தை பயன்படுத்தியுள்ளனர். அதில் 48.8 கோடி பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். 98% மக்கள் தமிழ், தெலுங்கு & மலையாளம் போன்ற இந்திய மொழி உள்ளடக்கங்களில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுத்தமான காற்று கொண்ட நகரங்களின் பட்டியலில், தமிழ்நாட்டின் நெல்லை நகரம் முதலிடம் பிடித்துள்ளது. இதன் காற்றின் தரக் குறியீடு அளவு 33 AQI ஆகவுள்ளது. 2ஆம் இடத்தில் அருணாச்சலின்
நஹர்லகுன் (43 AQI) உள்ளது. மடிக்கேரி , விஜயபுரா (கர்நாடகா), தஞ்சாவூர் ஆகியவை முறையே 3,4 & 5 இடங்களைப் பிடித்துள்ளன. கடவுளின் தேசமான கேரளாவின் கண்ணூர் (56 AQI) 9ஆம் இடத்தில் உள்ளது.
இஸ்ரோவின் #SpaDeX Mission வெற்றி பெற்றதற்கு, TN BJP தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் வெற்றி இந்தியாவுக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா 4வது நாடாக திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார். ரஷ்யா, சீனா, USAவை தொடர்ந்து விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றிணைக்கும் திட்டத்தில் வெற்றி பெற்ற 4வது நாடு இந்தியா.
மொராக்கோ நாட்டில், 2030இல் நடக்கவிருக்கும் FIFA World Cup கால்பந்து போட்டிகளை முன்னிட்டு நகரத்தை சுத்தமாக்க, 30 லட்சம் தெரு நாய்களை கொல்ல அந்நாடு திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னரே ஆயிரக்கணக்கான நாய்களை கொன்ற குற்றச்சாட்டு மொராக்கோ மீது உள்ளதால், விலங்கு ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர். தெருநாய்கள் பிரச்னை என்றால், அதற்கு வேறு வழிகள் உள்ளதாக அவர்கள் அறிவுறுத்துகின்றனர். உங்க கருத்து?
வீட்டுக்குள் புகுந்த மர்மநபரை மடக்க முயற்சித்த நடிகர் சயிப் அலி கானை, அந்நபர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் விழுந்த சயிப்பை, ஹாஸ்பிடலுக்கு கூட்டிப் போக கார் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி, சயிப்பின் மூத்த மகன் இப்ராஹிம், ஒரு ஆட்டோ பிடித்து தந்தையை, 2 கிமீ தொலைவில் உள்ள லீலாவதி ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று சேர்த்துள்ளார். எப்பவும் உதவிக்கு வரும் ஆட்டோ!
BCCI, இந்திய அணிக்கான சிறப்பு பேட்டிங் பயிற்சியாளராக, முன்னாள் பேட்டரும், தற்போது இந்தியா A ஹெட் கோச்சும் ஆன சிதான்ஷு கோடக் பெயரை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 52 வயதான சிதான்ஷு, தேசிய கிரிக்கெட் அகாடமியில் கோச்சாக பணியாற்றியவர். 4 ஆண்டுகளாக BCCI இவரை பல டூர்களில் கோச்சாக பயன்படுத்தியுள்ளது. வெற்றி வாகை சூடச் செய்வாரா சிதான்ஷு?
Live In ரிலேசன்ஷிப்பை பதிவு செய்யும் முறை உத்தரகண்டில் ஜன.26 முதல் தொடங்குகிறது. உறவு தொடங்கும் போது பதிவு செய்வது போலவே, விலகும்போதும் பதிவு செய்ய வேண்டும். ரிலேசன்ஷிப்பில் குழந்தை பிறந்தால் 7 நாட்களுக்குள் ரிப்போர்ட் செய்ய வேண்டும். ஆதார், போட்டோ அவசியம். இருவர் Live-In ரிலேசன்ஷிப் பதிவு செய்வதில், 3ஆம் நபருக்கு ஆட்சேபனை இருந்தால், அவர் அதற்குரிய தளத்தில் புகார் அளிக்கலாம். உங்க கருத்து?
வணங்கான்: பாலாவின் படம் 5 நாட்களில் ₹4.69 கோடி வசூலித்துள்ளது *கேம் சேஞ்சர்: ஷங்கரின் படம் 5 நாட்களில் தமிழ்நாட்டில் ₹7 கோடியை வசூலித்துள்ளது
*காதலிக்க நேரமில்லை: ரவி மோகன் படம் 2 நாட்களில் ₹3.3 கோடி வசூலித்துள்ளது *நேசிப்பாயா: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளியின் படம் 2 நாட்களில் ₹1 கோடி வசூலித்துள்ளது *மதகஜராஜா: இந்த பொங்கலின் வின்னர். 4 நாட்களில் ₹16 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
IND மகளிர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவல் ஒருநாள் போட்டிகளில் புதிய வரலாறு படைத்துள்ளார். அயர்லாந்துக்கு எதிரான 3rd ODIயில் 154 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் அவர் விளையாடிய முதல் 6 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் (444) எடுத்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். சார்லோட் எட்வர்ட்ஸ்(ENG)-434, நத்தகன் (தாய்லாந்து)-322, எனிட் பேக்வெல்(ENG)-316 ரன்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
பொருளாதார நிலை, வாழ்க்கை செலவு அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை ஆராய்ந்து, பரிந்துரைகள் வழங்குவதற்காக ஊதிய கமிஷன் அமைக்கப்படுகிறது. 1947-ல் முதல் ஊதிய கமிஷன் அமைக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய கமிஷன் அமைக்கப்படும். கடைசியாக 2016-ல் அமைக்கப்பட்ட 7-வது ஊதியக் கமிஷனின் டெர்ம் 2026-ம் ஆண்டுடன் முடிவடைகிறது. தற்போது 8-வது ஊதிய கமிஷன் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.